புலனொ டாடித் திரிமனத்தவர் பொறிசெய் காமத் துரிசடக்கிய புனித நேசத் தொடுதமக்கையர் புணர்வி னால்உற் றுரைசெயக்குடர் சுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர் சுடுவெ ணீறிட் டமண கற்றிய துணிவி னான்முப் புரமெ ரித்தவர் சுழலி லேபட் டிடுத வத்தினர் உலகின் மாயப் பிறவி யைத்தரும் உணர்வி லாவப் பெரும யக்கினை ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல உபரி யாகப் பொருள்ப ரப்பிய
அலகில் ஞானக் கடலி டைப்படும் அமிர்த யோகச் சிவவொ ளிப்புக அடிய ரேமுக் கருளி னைச்செயும் அரைய தேவத் திருவ டிக்களே.
|
1
|
திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி தெளிதேனொத் தினியசொல் மடவார்ஊர்ப் பசிமுதல் வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய் உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண் உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ் குருவாகக் கொடுசிவ னடிசூடித் திரிபவர் குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.
|
2
|
குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார் குரும்பை முலையிடையே செலுந்த கைநன்மடவார் அழிந்தபொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ அலைந்த யருமதுநீ அறிந்தி லைகொல்மனமே கழிந்த கழிகிடுநா ளிணங்கி தயநெகவே கசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே புரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே.
|
3
|
இலைமா டென்றிடர் பரியா ரிந்திர னேயொத் துறுகுறை வற்றாலும் நிலையா திச்செல்வம் எனவே கருதுவர் நீள்சன் மக்கட லிடையிற்புக் கலையார் சென்றரன் நெறியா குங்கரை யண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண் சிலைமா டந்திகழ் புகழா மூருறை திருநா வுக்கர சென்போரே.
|
4
|
என்பட்டிக் கட்டிய விந்தப்பைக் குப்பையை இங்கிட்டுச் சுட்டபி னெங்குத்தைக் குச்செலும் முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்கெத் திக்கென மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை வஞ்சித்துக் கத்திவி ழுந்தெச்சுத் தட்டுவர் அன்பர்க்குப் பற்றிலர் சென்றர்ச்சிக் கிற்றிலர் அந்தக்குக் கிக்கிரை சிந்தித்தப் பித்தரே.
|
5
|
Go to top |
பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு பெட்டியுரை செய்துசோறு கட்டியுழல் சமண்வாயர் கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை கற்றமதி யினனோசை யிட்டரசு புகழ்ஞாலம் முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல் கற்றுணையில் வரும்ஆதி பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே.
|
6
|
பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி பரசுநா வரசான பரமகா ரணவீசன் அதிகைமா நகர்மேவி யருளினா லமண்மூடர் அவர்செய்வா தைகள்தீரு மனகன்வார் குழல்சூடின் நிதியரா குவர்சீர்மை யுடையரா குவர்வாய்மை நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால மதியரா குவரீச னடியரா குவர்வானம் உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே
|
7
|
தாமரைநகு மகவிதழ் தகுவன சாய்பெறுசிறு தளிரினை யனையன சார்தருமடி யவரிடர் தடிவன தாயினும் நல கருணையை யுடையன தூமதியினை யொருபது கொடுசெய்த சோதியின்மிகு கதிரினை யுடையன தூயனதவ முனிவர்கள் தொழுவன தோமறுகுண நிலையின தலையின ஓமரசினை மறைகளின் முடிவுகள் ஓலிடுபரி சொடுதொடர் வரியன ஓவறுமுணர் வொடுசிவ வொளியன ஊறியகசி வொடுகவி செய்த புகழ் ஆமரசுய ரகம்நெகு மவருளன் ஆரரசதி கையினர னருளவன் ஆமரசுகொ ளரசெனை வழிமுழு தாளரசுத னடியிணை மலர்களே.
|
8
|
அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித் தறியாவப் பசுதைச் சிறியோரிற் செறியுங் கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக் குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற் பிடியாரப் பெறுதற் கரிதாகச் சொலுமப் பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும் செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற் றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே.
|
9
|
சிவசம் பத்திடைத் தவஞ்செய்து திரியும் பத்தியிற் சிறந்தவர் திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர் திகழும் பைம்பொடித் தவண்டணி
கவசம் புக்குவைத் தரன்கழல் கருதுஞ் சித்தனிற் கவன்றியல் கரணங் கட்டுதற் கடுத்துள களகம் புக்கநற் கவந்தியன்
அவசம் புத்தியிற் கசிந்து கொ டழுகண் டசத்துவைத் தளித்தனன் அனகன் குற்றமற் றபண்டிதன் அரசெங் கட்கொர்பற் றுவந்தறு
பவசங் கைப்பதைப் பரஞ்சுடர் படிறின் றித்தனைத் தொடர்ந்தவர் பசுபந் தத்தினைப் பரிந்தடு பரிசொன் றப்பணிக்கும் நன்றுமே.
|
10
|
Go to top |
நன்றும் ஆதரம் நாவினுக் கரைசடி நளினம்வைத் துயினல்லால் ஒன்றும் ஆவது கண்டிலம் உபாயம்மற் ருள்ளன வேண்டோமால் என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர் இகபரத் திடைப்பட்டுப் பொன்று வார்புகும் சூழலில் புகேம்புகில் பொறியில்ஐம் புலனோடே.
|
11
|