சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

8.141   மாணிக்க வாசகர்    திருவாசகம்

திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் - கருடக்கொடியோன்
அறுசீர் விருத்தம்
- Hide Meaning   https://sivaya.org/thiruvaasagam/41 Arputhapathu Thiruvasagam.mp3   Add audio link Add Audio

மையல் ஆய், இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு,
தையலார் எனும் சுழித்தலைப் பட்டு, நான் தலை தடுமாறாமே,
பொய் எலாம் விட, திருவருள் தந்து, தன் பொன் அடி இணை காட்டி,
மெய்யன் ஆய், வெளி காட்டி, முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே!

1
மயக்கவுணர்ச்சியுடையவனாய் இந்த மண்ணுலக வாழ்வு என்கிற கடலில் அகப்பட்டுப் பெண்கள் என்கிற சுழலினிடத்துச் சிக்கி, நான் நிலை கெட்டுப் போகாதபடி, உண்மைப் பொருளாய்த் தோன்றித் தன் அழகிய திருவடிகள் இரண்டையும் யான் காணும்படி காட்டி, பொய்ப்பொருளெல்லாம் விட்டு நீங்கும் வண்ணம் திருவருள் புரிந்து, ஞான ஒளியைக் கொடுத்து எதிரே நின்றதாகிய ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை யான் சொல்ல வல்லேனல்லேன்.

ஏய்ந்த மா மலர் இட்டு, முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே,
சாந்தம் ஆர் முலைத் தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி,
போந்து, யான் துயர் புகாவணம் அருள்செய்து, பொன் கழல் இணை காட்டி,
வேந்தன் ஆய், வெளியே, என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பனே!

2
பொருத்தமான சிறந்த பூக்களைத் தூவித் தடைப் படாதாகிய ஒரு தன்மையோடு வழிபடாமலே சந்தனக் குழம்பு பூசப் பெற்ற தனங்களையுடைய, பெண்களோடும், நிலை கலங்கிச் சேர்ந்து நான் துன்பம் அடையாதபடி, எங்கள் பெருமான், எனக்கு அருள் புரிந்து, அழகிய தனது திருவடியைக் காட்டித் தலைவனாய் எனக்கு எதிரே நின்றதாகிய ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை யான் சொல்ல வல்லேனல்லேன்.

நடித்து, மண்ணிடை; பொய்யினைப் பல செய்து; நான், எனது, எனும் மாயம்
கடித்த வாயிலே நின்று; முன் வினை மிகக் கழறியே திரிவேனை,
பிடித்து, முன் நின்று, அப் பெரு மறை தேடிய அரும் பொருள், அடியேனை
அடித்து அடித்து, அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே!

3
மண்ணுலகத்தில் உண்மையுள்ளவன் போல நடித்துச் செயலில் பொய்யான பல காரியங்களைச் செய்து, யான், எனது என்கின்ற மயக்கமாகிய பாம்பு கடித்த வாயிலிருந்து முற் காலத்துச் செய்த வினையாகிய விடமானது மிகுதலால் புலம்பித் திரி கின்றவனும் தனக்கு அடியவனுமாகிய என்னை, அந்தப் பெரிய வேதங்கள் தேடியறியாத அரிய பொருளான எங்கள் பெருமான், முன் வந்து பிடித்துக் கொண்டு பலகாலும் அடித்துத் திருவருளாகிய சர்க்கரைக் கட்டியை முன் அருத்திய, அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

பொருந்தும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது; பொய்களே புகன்று போய்;
கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு; கலங்கியே கிடப்பேனை;
திருந்து சேவடிச் சிலம்பு அவை சிலம்பிட, திருவொடும் அகலாதே,
அரும் துணைவன் ஆய், ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

4
வருகின்ற இப்பிறப்பு இறப்புகளாகிய இவற்றின் துன்பநிலையை எண்ணாது, பொய்களையே சொல்லித் திரிந்து கரிய கூந்தலுடைய பெண்களது கண்களாகிய வேலினால் தாக்கப்பட்டு, கலக்கமுற்றுக் கிடக்கும் என்னை, எங்கள் பெருமான் திருத்தமாகிய திருவடியில் அணியப்பட்ட சிலம்புகளாகிய அவை ஒலித்திட உமையம்மையோடும் நீங்காது எனக்கு அருமையான துணைவனாகி ஆண்டுகொண்டருளின அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

மாடும், சுற்றமும், மற்று உள போகமும், மங்கையர் தம்மோடும்
கூடி, அங்குள குணங்களால் ஏறுண்டு, குலாவியே திரிவேனை,
வீடு தந்து, என் தன் வெம் தொழில் வீட்டிட, மென் மலர்க் கழல் காட்டி,
ஆடுவித்து, எனது அகம் புகுந்து, ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே!

5
செல்வமும், உறவும் இன்னுமுள்ள அனுபவப் பொருள்களும் என்னும் இவைகளோடும், பெண்களோடும் சேர்ந்து அவ்விடங்களில் உள்ள தன்மைகளால் தாக்கப்பட்டு களித்துத் திரிகின்ற என்னை, எனக்கு அவற்றினின்றும் விடுபடுதலை அருளி எனது தீவினைகளை நீக்குதற் பொருட்டு, எங்கள் பெருமான், மென்மையான தாமரை மலர் போன்ற தன் திருவடியைக் காட்டி என் மனத்தில் புகுந்து ஆட்கொண்ட ஆனந்தத்தால் ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை அறிய வல்லேனல்லேன்.
Go to top

வணங்கும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, மங்கையர் தம்மோடும்
பிணைந்து, வாய் இதழ்ப் பெரு வெள்ளத்து அழுந்தி, நான் பித்தனாய்த் திரிவேனை,
குணங்களும், குறிகளும், இலாக் குணக் கடல் கோமளத்தொடும் கூடி,
அணைந்து வந்து, எனை ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

6
யாவரும் கீழ்ப்படுதற்குரிய இத்தன்மையுடைய பிறப்பு இறப்புகளாகிய இவைகளை நீக்கும் வழியினை, எண்ணாது பெண்களோடும், சேர்ந்து, வாய் இதழில் ஊறும், பெரிய நீர்ப் பெருக்கில் முழுகித் திளைத்து மயங்கி அலைகின்ற என்னை, குணங் களும், அடையாளங்களுமில்லாத, அருட்கடலாகிய இறைவன், அழகுடைய வளாகிய உமையம்மையோடும் கூடி அணுகி வந்து ஆட் கொண்டருளின, அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

இப் பிறப்பினில், இணை மலர் கொய்து, நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதி,
தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது, நான், தட முலையார் தங்கள்
மைப்பு உலாம் கண்ணால், ஏறுண்டு கிடப்பேனை, மலர் அடி இணை காட்டி,
அப்பன், என்னை, வந்து, ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

7
இப்பிறவியில் பொருத்தமான மலரைப் பறித்துத் திருவைந்தெழுத்தினைச் சொல்ல வேண்டிய முறைப்படி சொல்லிப் பிழைத்தல் இல்லாமல், அவனது பொன்னடிகள் மேல் சொரியாமல், பெரிய தனங்களையுடைய பெண்களது மை தீட்டுதல் பொருந்திய கண்ணாகிய வேலினால் எறியப்பட்டுக் கிடக்கின்றவனாகிய என்னை, என் தந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளி வந்து தன் தாமரை மலர் போலும் திருவடியினைக் காட்டி ஆட்கொண்டருளின அதியச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

ஊசல் ஆடும் இவ் உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து, என்னை,
ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன், உணர்வு தந்து, ஒளி ஆக்கி,
பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால்
ஆசை தீர்த்து, அடியார் அடிக் கூட்டிய அற்புதம் அறியேனே!

8
பிறப்பு இறப்புகளாகிய ஊசலில் வைத்து ஆட்டுகின்ற உடம்பின்கண் உள்ள உயிரிலே பொருந்திய நல்வினை தீவினை என்னும் இரண்டையும் களைந்து, அடியேனை, நூலறிவால் அறிய முற்படுவார்க்கு, அறிய முடியாதவனாகிய இறைவன், உயர்வாகிய தனது மேலான பெரிய கருணையால் ஞானத்தைக் கொடுத்து ஞானமயமாக்கி மும்மலக்கட்டுகளை அறவே தொலைத்து, அவாவையறுத்து, தன் அடியார்களது அடியின்கீழ்ச் சேர்த்த, அதியச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

பொச்சை ஆன இப் பிறவியில் கிடந்து, நான், புழுத்து அலை நாய்போல,
இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து, அங்கு இணங்கியே திரிவேனை,
விச்சகத்து, அரி, அயனும் எட்டாத, தன் விரை மலர்க் கழல் காட்டி,
அச்சன், என்னையும் ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

9
காட்டை ஒத்த இப்பிறவியில் பொருந்தி யான் புழுப் பொருந்திய தலையினையுடைய நாய் போன்று பெண்களுக்கே அவர்கள் விரும்பிய பணிகளைச் செய்து அவர்களோடு, சேர்ந்து அலைகின்ற எனக்கு, யாவர்க்கும் தந்தையாகிய சிவபெருமான் திருமாலும் பிரமனும் காண மாட்டாத தன் மணம் பொருந்திய தாமரை மலர் போலும் திருவடிகளை இவ்வுலகத்தில் வந்து காட்டியருளி, அடியேனையும் ஒரு பொருளாக நினைத்து ஆட்கொண்டருளிய அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

செறியும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, செறி குழலார் செய்யும்
கிறியும், கீழ்மையும், கெண்டை அம் கண்களும், உன்னியே கிடப்பேனை,
இறைவன், எம்பிரான், எல்லை இல்லாத தன் இணை மலர்க் கழல் காட்டி,
அறிவு தந்து, எனை ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

10
நெருங்கி மேன்மேல் வரும், இப்பிறப்பு இறப்புகளாகிய இவைகளை நீக்கும் வழியை எண்ணாமல், அடர்ந்த கூந்தலை உடையவராகிய பெண்கள் செய்கின்ற பொய்ந் நடையை யும் தாழ்மையான தன்மையையும், கயல் மீன் போன்ற கண்களையும் நினைத்தே கிடக்கின்றவனாகிய என்னை, யாவர்க்கும் தலைவனாகிய எம் தலைவன் எல்லையற்ற. தனது திருவடித் தாமரைகள் இரண்டையுங் காட்டியருளி, உண்மை அறிவினைக் கொடுத்து ஆட்கொண்டருளிய, அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்
8.101   மாணிக்க வாசகர்    திருவாசகம்   சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.01   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி
Tune - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.02   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - II. அறிவுறுத்தல் (11-20)
Tune - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.03   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - III. சுட்டறுத்தல் (21-30)
Tune - வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.04   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - IV ஆன்ம சுத்தி (31-40)
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.05   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - V கைம்மாறு கொடுத்தல் (41-50)
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.06   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - VI அநுபோக சுத்தி (51-60)
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.07   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - VII. காருணியத்து இரங்கல் (61-70)
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.08   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் -VIII. ஆனந்தத்து அழுந்தல் (71-80)
Tune - ஈசனோடு பேசியது போதுமே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.09   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் -IX . ஆனந்த பரவசம் (81-90)
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.10   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் (91-100)
Tune - ஹரிவராசனம்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.120   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
Tune - புறநீர்மை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.123   மாணிக்க வாசகர்    திருவாசகம்   செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
Tune - ஹரிவராசனம்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.124   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
Tune - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.125   மாணிக்க வாசகர்    திருவாசகம்   ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
Tune - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.126   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
Tune - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.127   மாணிக்க வாசகர்    திருவாசகம்   புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
Tune - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.128   மாணிக்க வாசகர்    திருவாசகம்   வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
Tune - அக்ஷரமணமாலை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.129   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அருட்பத்து - சோதியே சுடரே
Tune - அக்ஷரமணமாலை   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.132   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.133   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.134   மாணிக்க வாசகர்    திருவாசகம்   உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.136   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
Tune - அயிகிரி நந்தினி   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.138   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.141   மாணிக்க வாசகர்    திருவாசகம்   அற்புதப்பத்து - மைய லாய்இந்த
Tune - கருடக்கொடியோன்   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.142   மாணிக்க வாசகர்    திருவாசகம்   சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.143   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவார்த்தை - மாதிவர் பாகன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.144   மாணிக்க வாசகர்    திருவாசகம்   எண்ணப்பதிகம் - பாருருவாய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.147   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
Tune - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.148   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
Tune - ஏரார் இளங்கிளியே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.150   மாணிக்க வாசகர்    திருவாசகம்   ஆனந்தமாலை - மின்னே ரனைய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
12.900   கடவுண்மாமுனிவர்   திருவாதவூரர் புராணம்  
Tune -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000