| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://sivaya.org/thiruvaasagam/42 Sennipathu Thiruvasagam.mp3 https://sivaya.org/thiruvasagam2/42 Sennip pathu.mp3 Add audio link
8.142
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்
எழுசீர் விருத்தம்
தேவ தேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன்,
மூவராலும் அறிஒணா, முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான்,
யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறிஒணா மலர்ச் சோதியான்,
தூய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, சுடருமே!
1
தேவர் பிரானும், உண்மையான வீரனும் அழகிய திருப்பெருந்துறைக்குத் தலைவனும், மும்மூர்த்திகளாலும், அறிய முடியாத முதல்வனாகிய, இன்ப வடிவினனும் அன்பரல்லாத பிறர் எவராயினும் அவர்களால் அறியக் கூடாத செந்தாமரை மலர் போன்ற ஒளியையுடையவனும் ஆகிய இறைவனுடைய தூய்மையான சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலை பெற்று நின்று விளங்கும்.
அட்ட மூர்த்தி, அழகன், இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான்,
சிட்டன், மெய்ச் சிவலோக நாயகன், தென் பெருந்துறைச் சேவகன்,
மட்டு வார் குழல் மங்கையாளை ஒர் பாகம் வைத்த அழகன் தன்
வட்ட மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!
2
அட்ட மூர்த்தங்களையுடையவனும், அழகை யுடையவனும் இனிய அமுத மயமான பேரின்பக் கடலானவனும், மேலானவனும் அழியாத சிவபுரத்துக்குத் தலைவனும், அழகிய திருப்பெருந்துறையில் எழுந்தருளிய வீரனும் தேன் மணம் கமழும், கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகத்தே வைத்த அழகனும் ஆகிய இறைவனது வட்ட வடிவமாகிய சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலை பெற்று நின்று பொலிவு பெற்று விளங்கும்.
நங்கைமீர்! எனை நோக்குமின்; நங்கள் நாதன், நம் பணி கொண்டவன்,
தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன், நாயகன்,
மங்கைமார் கையில் வளையும் கொண்டு, எம் உயிரும் கொண்டு, எம் பணி கொள்வான்
பொங்கு மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, பொலியுமே!
3
பெண்களே! என்னைப் பாருங்கள். நம் எல்லோர்க்கும் தலைவனும் நம்முடைய தொண்டை ஏற்றுக் கொண்ட வனும் தென்னஞ்சோலைகள் சூழ்ந்த பெருந்துறையிற் பொருந்திய வீரனும் யாவர்க்கும் தலைவனும் பெண்களுடைய கையிலுள்ள வளையல்களையும் கவர்ந்து கொண்டு எம்முடைய உயிரையும் கொள்ளை கொண்டு எமது தொண்டினை ஏற்றுக் கொள்பவனும் ஆகிய பெருமானுடைய மலரைப் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நம்முடைய தலை நிலை பெற்று நின்று விளங்கும்.
பத்தர் சூழ, பரா பரன் பாரில் வந்து, பார்ப்பான் என,
சித்தர் சூழ, சிவபிரான், தில்லை மூதூர் நடம் செய்வான்,
எத்தன் ஆகி வந்து, இல் புகுந்து, எமை ஆளுங்கொண்டு, எம் பணி கொள்வான்
வைத்த மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!
4
தில்லையாகிய பழமையான பதியிலே நிருத்தம் புரிபவனும், மிகவும் மேலானவனும் ஆகிய, சித்தர்கள் சூழ்ந்து வணங்கும் அந்தச் சிவபெருமான் அடியார் புடை சூழ, பூமியில் வந்து அந்தணக் கோலத்தோடு ஏமாற்றுபவனாய் வந்து எங்கள் வீடுகளில் புகுந்து எம்மை அடிமை கொண்டு எமது தொண்டினை ஏற்றுக் கொள்ளும் படியாகச் சூட்டிய சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலைபெற்று பொலிவு பெற்று விளங்கும்.
மாய வாழ்க்கையை, மெய் என்று எண்ணி, மதித்திடா வகை நல்கினான்;
வேய தோள் உமை பங்கன், எங்கள் திருப்பெருந்துறை மேவினான்;
காயத்துள் அமுது ஊற ஊற, நீ கண்டுகொள்' என்று காட்டிய
சேய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!
5
பொய்யான உலக வாழ்க்கையை உண்மையானது என்று நினைத்து அதனைப் பாராட்டாதபடி, எமக்கு ஞானத்தைக் கொடுத்தவனும் மூங்கிலை ஒத்த தோளினையுடைய உமையம்மை யின் பாகனும் எமது திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவன், எனது உடம்பினுள் அமுதம் இடைவிடாது பெருகு மாறு `நீ பார்` என்று காட்டி அருளிய சிறந்த செந்தாமரை மலர் போன்ற சிறந்த திருவடியின் கீழே, நம் தலை நிலைபெற்று நின்று விளங்கும்.
Go to top
சித்தமே புகுந்து, எம்மை ஆட்கொண்டு, தீ வினை கெடுத்து, உய்யல் ஆம்
பத்தி தந்து, தன் பொன் கழல்கணே பன் மலர் கொய்து சேர்த்தலும்,
முத்தி தந்து, இந்த மூ உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும்
மத்தன் மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!
6
சித்தத்திலே புகுந்து எம்மை அடிமையாகக் கொண்டருளி, தீயவாகிய வினைகளை அழித்து உய்வதற்குரிய அன்பினைக் கொடுத்துத் தனது அழகிய திருவடியின் கண்ணே பல வகையான மலர்களைப் பறித்து இடுதலும், விடுதலையைக் கொடுத்து இந்த மூன்று உலகங்களுக்கும் அப்பால் எம்மைப் பேரின்பத்தில் வைக்கின்ற, ஊமத்தம்பூவை அணிகின்ற இறைவனது சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலைபெற்று நின்று பொலிவுபெற்று விளங்கும்.
பிறவி என்னும் இக் கடலை நீந்த, தன் பேர் அருள் தந்தருளினான்;
அறவை என்று அடியார்கள் தங்கள் அருள் குழாம் புகவிட்டு, நல்
உறவு செய்து, எனை உய்யக்கொண்ட பிரான் தன் உண்மைப் பெருக்கம் ஆம்
திறமை காட்டிய சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!
7
பிறவியாகிய இந்தக் கடலை நீந்துவதற்குத் தன்னுடைய பேரருளாகிய தெப்பத்தை கொடுத்தருளினவனும், துணையில்லாதவன் என்று எண்ணி, அடியார்களுடைய அருட் கூட்டத்தில் புகுவித்து அவர்களோடு நல்ல உறவை உண்டாக்கி என்னைப் பிழைக்கும்படி ஆட்கொண்ட தலைவனுமாகிய இறை வனது உண்மையான பேரருளாகிய தனது வல்லமையைக் காட்டிய சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலைபெற்று நின்று விளங்கும்.
புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய் தனை ஒழிவித்திடும்
எழில்கொள் சோதி, எம் ஈசன், எம்பிரான், என்னுடை அப்பன்' என்று என்று,
தொழுத கையினர் ஆகி; தூ மலர்க் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு,
வழு இலா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!
8
புழுக்களால் நிறைந்துள்ள உடம்பில் பொருந்தி நிற்கும் நிலையற்ற வாழ்வை ஒழிக்கின்ற அழகையுடைய சோதியே! எம்மை ஆள்பவனே! எம்பெருமானே! என்னுடைய தந்தையே! என்று பலகால் சொல்லிக் கூப்பிய கையையுடையவராய், தூய்மையான தாமரை மலர் போன்ற கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரியும் அடியார்களுக்குத் தவறாது கிடைக்கின்ற தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின்கீழே, நமது தலை நிலை பெற்று நின்று பொலிவு பெற்று விளங்கும்.
வம்பனாய்த் திரிவேனை வா' என்று வல் வினைப் பகை மாய்த்திடும்
உம்பரான், உலகு ஊடு அறுத்து, அப் புறத்தன் ஆய் நின்ற எம்பிரான்,
அன்பர் ஆனவர்க்கு அருளி, மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும்
செம் பொன் மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!
9
வீணனாய்த் திரிகின்ற என்னை வா என்று அழைத்து வலிமையான வினையாகிய பகையினை அழிக்கின்ற மேலிடத்தில் உள்ளவனும் உலகங்களை எல்லாம் ஊடுருவிச் சென்று அப்பாற் பட்டவனாய எமது தலைவனும் அன்பர்களுக்கு இரங்கி அருள் செய்பவனுமாகிய இறைவனது உண்மையான அடியார்களுக்கு இன்பம் பெருக நிற்கின்ற செவ்விய பொன் போன்ற சிறந்த தாமரை மலர் போலச் சிவந்த திருவடியின் கீழே, நம்முடைய தலை நிலை பெற்று விளங்கும்.
முத்தனை, முதல் சோதியை, முக் கண் அப்பனை, முதல் வித்தினை,
சித்தனை, சிவலோகனை, திரு நாமம் பாடித் திரிதரும்
பத்தர்காள்! இங்கே, வம்மின், நீர்; உங்கள் பாசம் தீரப் பணிமினோ;
சித்தம் ஆர்தரும் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே.!
10
இயல்பாகவே பாசங்களில் நீங்கியவனும் ஒளிப் பொருள்களுக்கெல்லாம் மூல ஒளியாய் உள்ளவனும் மூன்று கண்களையுடைய தந்தையும் காரணங்களுக்கெல்லாம் முன்னேயுள்ள காரணமானவனும் ஞான மயமானவனும் சிவபுரத்தவனும் ஆகிய இறைவன் திருப்பெயர்களைப் பரவித் திரிகின்ற அன்பர்களே! நீங்கள் இங்கு வாருங்கள். அவனை உங்களது பந்தங்கள் நீங்கும் பொருட்டு வணங்குங்கள். அங்ஙனம் வணங்கினால் உள்ளத்தில் நிறைந்த சிவந்த அவனது திருவடியின் கீழே நமது தலை நிலைபெற்று விளங்குதல் திண்ணம்.
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில்
8.101
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.01
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.02
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - II. அறிவுறுத்தல் (11-20)
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.03
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - III. சுட்டறுத்தல் (21-30)
Tune - வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.04
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - IV ஆன்ம சுத்தி (31-40)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.05
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - V கைம்மாறு கொடுத்தல் (41-50)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.06
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - VI அநுபோக சுத்தி (51-60)
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.07
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - VII. காருணியத்து இரங்கல் (61-70)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.08
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் -VIII. ஆனந்தத்து அழுந்தல் (71-80)
Tune - ஈசனோடு பேசியது போதுமே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.09
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் -IX . ஆனந்த பரவசம் (81-90)
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.105.10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சதகம் - X. ஆனந்தாதீதம் (91-100)
Tune - ஹரிவராசனம்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.120
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
Tune - புறநீர்மை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.123
மாணிக்க வாசகர்
திருவாசகம்
செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
Tune - ஹரிவராசனம்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.124
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.125
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.126
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.127
மாணிக்க வாசகர்
திருவாசகம்
புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.128
மாணிக்க வாசகர்
திருவாசகம்
வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
Tune - அக்ஷரமணமாலை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.129
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அருட்பத்து - சோதியே சுடரே
Tune - அக்ஷரமணமாலை
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.132
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.133
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.134
மாணிக்க வாசகர்
திருவாசகம்
உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.136
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
Tune - அயிகிரி நந்தினி
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.138
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
Tune - பூவேறு கோனும் புரந்தரனும்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.141
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அற்புதப்பத்து - மைய லாய்இந்த
Tune - கருடக்கொடியோன்
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.142
மாணிக்க வாசகர்
திருவாசகம்
சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.143
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவார்த்தை - மாதிவர் பாகன்
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.144
மாணிக்க வாசகர்
திருவாசகம்
எண்ணப்பதிகம் - பாருருவாய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.147
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
Tune - ஏரார் இளங்கிளியே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.148
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
Tune - ஏரார் இளங்கிளியே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
8.150
மாணிக்க வாசகர்
திருவாசகம்
ஆனந்தமாலை - மின்னே ரனைய
Tune - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
12.900
கடவுண்மாமுனிவர்
திருவாதவூரர் புராணம்
Tune -
(திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )