கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர் கல்லா அரசனிற் காலன் மிகநல்லன் கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான் நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.
|
1
|
நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல் நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால் நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.
|
2
|
வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன் வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன் வேட நெறிசெய்தால் வீடது வாகுமே.
|
3
|
மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில் வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும் பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந் தாடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே.
|
4
|
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை ஞானிக ளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.
|
5
|
Go to top |
ஆவையும் பாவையும் மற்றற வோரையுந் தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும் காவலன் காப்பவன் காவா தொழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே.
|
6
|
திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின் மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும் சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவும் அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.
|
7
|
வேந்தன் உலகை மிகநன்று காப்பது வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர் பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தான்கொள்ளின் பாய்ந்த புலியன்ன பாவகத் தானே.
|
8
|
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப் பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர் மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.
|
9
|
தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.17,
|
10
|
Go to top |