கல்லா தவருங் கருத்தறி காட்சியை வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர் கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங் கல்லா தவர் இன்பங் காணகி லாரே.
|
1
|
வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார் அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார் எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை கல்லா தவர்கள் கலப்பறி யாரே.
|
2
|
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள் எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும் கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே.
|
3
|
கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன் கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின் வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட் கல்லேன் கழியநின் றாடவல் லேனே.
|
4
|
நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார் கல்லா மனித்தர் கயவர் உலகினில் பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.
|
5
|
Go to top |
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின் றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.
|
6
|
கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும் கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.
|
7
|
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம் கல்லாத மூடர் கருத்தறி யாரே.
|
8
|
கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள் சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள் மற்றும் பலதிசை காணார் மதியிலோர் கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.
|
9
|
ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற சோதி நடத்துந் தொடர்வறி யாரே. 26,
|
10
|
Go to top |