பிரமனும் மாலும் பிரானேநான் என்னப் பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரனடி தேடி அரற்றிநின் றாரே.
|
1
|
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.
|
2
|
ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந் தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும் வானே ழுலகுறும் மாமணி கண்டனை யானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே.
|
3
|
ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ் சேணாய்வா னோங்குந் திருவுரு வேஅண்டத் தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந் தாண்முழு தண்டமு மாகிநின் றானே.
|
4
|
நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன் அன்றே அவன்வடி வஞ்சின ராய்ந்தது சென்றார் இருவர் திருமுடி மேற்செல நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.
|
5
|
Go to top |
சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர் மூவடி தாவென் றவனும் முனிவரும் பாவடி யாலே பதஞ்செய் பிரமனும் தாவடி யிட்டுத் தலைப்பெய்யு மாறே.
|
6
|
தானக் கமலத் திருந்த சதுமுகன் மானக் கருங் கடல் வாழித் தலைவனும் ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற தானப் பெரும்பொரு ளண்மைய தாமே.
|
7
|
ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர் மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்னங்கண் டோலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங் கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.
|
8
|
வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள் ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர் கோள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத்தன் தாள்கொடுத் தானடி சாரகி லாரே.
|
9
|
ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு வாழி சதுமுகன் வந்து வெளிப்படும் வீழித் தலைநீர் விதித்தது காவெனும் ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. 9,
|
10
|
Go to top |