ஆதியோ டந்தம் இலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம் தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே.
|
1
|
நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில் தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால் வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே.
|
2
|
இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக் கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் வல்லது ஆக வழிசெய்த அப்பொருள் சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.
|
3
|
தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய் ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப் பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும் சார்வத்துச் சத்திஓர் சார்த்துமா னாமே.
|
4
|
மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும் கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த் தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப் பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.
|
5
|
Go to top |
புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர் புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப் புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே.
|
6
|
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும் தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியுங் கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய் மண்ணியல் பாக மலர்ந்தெழும் பூவிலே.
|
7
|
நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை காய்கதிர்ச் சோதி பிறக்கும்அக் காற்றிடை ஓர்வுடை நல்லுயிர் பாதம் ஒலிசத்தி நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே. |
8
|
உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி அண்டத் தமரர் தலைவனாம் ஆதியும் கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும் பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.
|
9
|
ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்பாங்கார் கயிலைப் பராபரன் தானும்வீங்குங் கமல மலர்மிசை மேலயன்ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.
|
10
|
Go to top |
காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன் நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும் பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன் ஆரண மாய்உல காயமர்ந் தானே.
|
11
|
பயன்எளி தாம்பரு மாமணி செய்ய நயன்எளி தாகிய நம்பஒன் றுண்டு வயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும் வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே.
|
12
|
போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந் தாக்கமுஞ் சிந்தைய வாகின்ற காலத்து மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந் தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.
|
13
|
நின்றுயி ராக்கும் நிமலன்என் னாருயிர் ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற முன்றுய ராக்கும் உடற்குந் துணையதா நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.
|
14
|
ஆகின்ற தன்மைஇல் அக்கணி கொன்றையன் வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன் போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன் ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.
|
15
|
Go to top |
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும் பருவங்கள் தோறும் பயன்பல வான திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.
|
16
|
புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல் புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல் புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள் புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.
|
17
|
ஆணவச் சத்தியுள் ஆம்அதில் ஐவருங் காணியர் காரண ஈசர் கடைமுறை பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந் தாணவம் நீங்கா தவரென லாகுமே.
|
18
|
உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம் மற்றைய மூன்றும்மா மாயோ தயம்விந்து பெற்றவந் நாதம் பரையிற் பிறத்தலால் துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.
|
19
|
ஆகாய மாதி சதாசிவ ராதியென் போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர் மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம் ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.
|
20
|
Go to top |
அளியார் முக்கோண வயிந்தவந் தன்னில் அளியார் திரிபுரை யாம் அவள் தானே அளியார் சதாசிவ மாகி அமைவாள் அளியார் கருமங்கள் ஐந்தும்செய் வாளே.
|
21
|
வாரணி கொங்கை மனோன்மனி மங்கலை காரணி காரிய மாகக் கலந்தவள் வாரணி ஆரணி வானவர் மோகினி பூரணி போதாதி போதமு மாமே.
|
22
|
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன் மன்றது செய்யும் மலர்மிசை மேலயன் என்றிவ ராக இசைந்திருந் தானே.
|
23
|
ஒருவனு மேஉல கேழும் படைத்தான் ஒருவனு மேஉல கேழும் அளித்தான் ஒருவனு மேஉல கேழும் துடைத்தான் ஒருவனு மேஉல கோடுயிர் தானே.
|
24
|
செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும் கொந்தார் குழலியர்க் கூடிய கூட்டத்தும் ஐந்தார் பிறவி அறுத்துநின் றானே.
|
25
|
Go to top |
தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர் கூடும் பிறவி குணஞ்செய்த மாநந்தி ஊடும் அவர்தம துள்ளத்துள் ளேநின்று நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே.
|
26
|
ஓராய மேஉல கேழும் படைப்பதும் ஓராய மேஉல கேழும் அளிப்பதும் ஓராய மேஉல கேழும் துடைப்பதும் ஓராய மேஉல கோடுயிர் தானே.
|
27
|
நாதன் ஒருவனும் நல்ல இருவரும் கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர் ஏது பணியென் றிசையும் இருவருக் காதி இவனே அருளுகின் றானே.
|
28
|
அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம் மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும் பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட் கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.
|
29
|
ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள் போதித்த வானொளி பொங்கிய நீர்புவி வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள் ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. 10,
|
30
|
Go to top |