பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய காசக் குழலி கலவி யொடுங்கலந் தூசித் துளையுறத் தூங்காது போகமே.
|
1
|
போகத்தை உன்னவே போகாது வாயுவும் மோகத்து வெள்ளியும் மீளும் வியாழத்தில் சூதொத்த மென்முலை யாளும்நற் சூதனுந் தாதிற் குழைந்து தலைக்கண்ட வாறே.
|
2
|
கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும் வண்டியை மேற்கொண்டு வான்நீர் உருட்டிடத் தண்டொரு காலுந் தளராது அங்கமே.
|
3
|
அங்கப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம் மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப் பங்கப் படாமற் பரிகரித் துத்தன்னைத் தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே.
|
4
|
தலைவனு மாயிடுந் தன்வழி ஞானம் தலைவனு மாயிடுந் தன்வழி போகம் தலைவனு மாயிடுந் தன்வழி உள்ளே தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே.
|
5
|
Go to top |
அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில் துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால் நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது பஞ்ச கடிகைப் பரியங்க யோகமே.
|
6
|
பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை அரியஇவ் யோகம் அடைந்தவர்க் கல்லது சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை உருவித் தழுவ ஒருவர்க்கொண் ணாதே.
|
7
|
ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆரென்னில் விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன் பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில் எண்ணா மென்றெண்ணி இருந்தார் இருந்ததே.
|
8
|
ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும் வாய்ந்த குழலிக்கும் மன்னற்கும் ஆனந்தம் ஆய்ந்த குழலியோ டைந்தும் மலர்ந்திடச் சோர்ந்தனன் சித்தமும் சோர்வில்லை வெள்ளிக்கே.
|
9
|
வெள்ளி யுருகிப்பின் பொன்வழி ஓடாமே கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார் கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று அள்ளிஉண் ணாவில் அடக்கிவைத் தாரே.
|
10
|
Go to top |
வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன் சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம் பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும் வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே.
|
11
|
வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தம் தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனம் திங்களிற் செவ்வாய் புதைத்திருந் தாரே.
|
12
|
திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக் கருத்தழ காலே கலந்தங் கிருக்கில் வருத்தமு மில்லையாம் மங்கை பங்கற்கும் துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே.
|
13
|
எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றால் மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின் விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.
|
14
|
வெளியை அறிந்து வெளியின் நடுவே ஒளியை அறிவின் உளிமுறி யாமே தெளிவை அறிந்து செழுநந்தி யாலே வெளியை அறிந்தனன் மேலறி யேனே.
|
15
|
Go to top |
மேலாந் தலத்தில் விரிந்தவர் ஆரென்னில் மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர் நாலாம் நிலத்தின் நடுவான அப்பொருள் மேலா வுரைத்தனர் மின்னிடை யாளுக்கே.
|
16
|
மின்னிடை யாளும்மின் னாளனுங் கூட்டத்துப் பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லாரேல் மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே.
|
17
|
வாங்க இறுதலை வாங்கலில் வாங்கியே வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை வீங்க வலிக்கும் விரகறி வாளர் தாம் ஓங்கிய தம்மை உதம்பண்ணி னாரே.
|
18
|
உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டால் கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும் இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி பதமறிந் தும்முளே பார்கடிந் தாளே.
|
19
|
பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே. 20,
|
20
|
Go to top |