நவாக்கரி சக்கரம் நான்உரை செய்யின் நவாக்கரி ஒன்று நவாக் கரியாக நவாக்கரி எண்பத் தொருவகை யாக நவாக்கரி அக்கிலீம் சௌம்முதல் ஈறே.
|
1
|
சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம் கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என் றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச் செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.
|
2
|
நவாக் கரியாவதும் நானறி வித்தை நவாக் கரியுள்எழும் நன்மைகள் எல்லாம் நவாக் கரிமந்திரம் நாவுளே ஓத நவாக் கரிசத்தி நலந்தருந் தானே.
|
3
|
நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம் உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச் சிரந்தரு தீவினை செய்வ தகற்றி வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.
|
4
|
கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும் நின்றிடும் சக்கரம் நினைக்கு மளவே.
|
5
|
Go to top |
நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா நினைத்திடும் சக்கரம் ஆதியும் அந்தமும் நினைத்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே நினைத்தி (டு) அருச்சனை நேர்தரு வாளே.
|
6
|
நேர்தரு மந்திர நாயகி யானவள் யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை கார்தரு வண்ணம் கருதின கைவரும் நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.
|
7
|
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம் கடந்திடும் காலனும் கண்ணிய நாளும் படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே.
|
8
|
அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம் அடைந்திடும் ஆதி அருளும் திருவும் அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும் அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.
|
9
|
அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத் தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன் பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி முரிந்திடு வாளை முயன்றிடும் நீரே.
|
10
|
Go to top |
நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள் பாரணி யும்இரீம் உன்சிரீம் ஈறாம் தாரணி யும்புகழ்த் தையல்நல் லாளைக் காரணி யும்பொழில் கண்டுகொள் வீரே.
|
11
|
கண்டுகொள் ளும்தனி நாயகி தன்னையும் மொண்டுகொள் ளும்முக வச்சியம தாயிடும் பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர் நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.
|
12
|
பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில் நாடுடை யார்களும் நம்வச மாகுவர் மாறுடை யார்களும் வாழ்வது தான்இலை கூறுடை யாளையும் கூறுமின் நீரே.
|
13
|
கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை ஆறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வெனல் மாறுமின் வையம் வரும்வழி தன்னையும் தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.
|
14
|
சேவடி சேர்ந்து செறிய இருந்தவர் நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர் பூவடி இட்டுப் பொலிய இருந்தவர் மாவடி காணும் வகையறி வாரே.
|
15
|
Go to top |
ஐம்முத லாக அமர்ந்தெழு சக்கரம் ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும் ஐம்முத லாகி யவற்றுடை யாளை மைம்முத லாக வழுத்திடு நீயே.
|
16
|
வழுத்திடும் நாவுக் கரசிவள் தன்னைப் பகுத்திடும் வேதம்மெய் யாகமம் எல்லாம் தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே.
|
17
|
கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில் கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம் மன்றினுள் வித்தையும் மானுடர் கையதா வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.
|
18
|
மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச் சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும் பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல நல்லிய லாக நடந்திடுந் தானே.
|
19
|
நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம் தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள்கள் [தானும் கடந்திடும் கல்விக் கரசிவளாகப் படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.
|
20
|
Go to top |
பகையில்லை கௌம்முதல் ஐம் அது ஈறாம் நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு மிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம் வகையில்லை யாக வணங்கிடுந் தானே.
|
21
|
வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை நலங்கிடும் நல்லுயி ரானவை யெல்லாம் கலங்கிடும் காம வெகுளி மயக்கம் துளங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.
|
22
|
தானே கழறித் தணியவும் வல்லனாய்த் தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த் தானே தனிநடங் கண்டவள் தன்னையும் தானே வணங்கித் தலைவனு மாமே.
|
23
|
ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும் தாமேசகலமும் ஈன்றஅத் தையலும் ஆமே அவளடி போற்றி வணங்கிடில் போமே வினைகளும் புண்ணிய னாகுமே.
|
24
|
புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும் கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும் தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும் அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.
|
25
|
Go to top |
தானது கம்இரீம் கௌமது ஈறாம் நானது சக்கரம் நன்றறி வார்க்கெலாம் கானது கன்னி கலந்த பராசத்திக் கேனது! வையம் கிளரொளி யானதே.
|
26
|
ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரின் களிக்கும் இச் சிந்தையிற் காரணங் காட்டித் தெளிக்கும் மழையுடன் செல்வம்உண் டாக்கும் அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே.
|
27
|
அறிந்திடுஞ் சக்கர அற்சனை யோடே எறிந்திடும் வையத் திடரவை காணின் மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்வான் பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.
|
28
|
புகையில்லை சொல்லிய பொன்னொளி உண்டாம் குகையில்லை கொல்வ திலாமையி னாலே வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம் சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர்க் காமே.
|
29
|
சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர் காய்ந்தெழும் மேல்வினை காணகி லாதவர் பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.
|
30
|
Go to top |
ஒளியது ஹௌம்முன் கிரீமது ஈறாம் களியது சக்கரம் கண்டறி வார்க்குத் தெளியது ஞானமும் சிந்தையும் தேறப் பளியது பஞ்சாக் கரமது வாமே.
|
31
|
ஆமே சதாசிவ நாயகி யானவள் ஆமே அதோமுகத் துள்அறி வானவள் ஆமே சுவைஒளி ஊறோசை கண்டவள் ஆமே அனைத்துயிர் தன்னுள்ளும் ஆமே.
|
32
|
தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண் டென்னுளு மாகி இடம்பெற நின்றவள் மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளும் கண்ணுளும் மெய்யுளும் காணலு மாமே.
|
33
|
காணலு மாகும் கலந்துயிர் செய்வன காணலு மாகும் கருத்துள் இருந்திடில் காணலு மாகும் கலந்து வழிசெயல் காணலு மாகும் கருத்துற நில்லே.
|
34
|
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக் கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக் கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும் விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.
|
35
|
Go to top |
மெய்ப்பொருள் (ஔம்)முதல் (ஹௌம)து ஈறாக் கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம் தற்பொரு ளாகச் சமைந்தமு தேச்சரி நற்பொரு ளாக நடுவிருந் தாளே.
|
36
|
தாளதி னுள்ளே சமைந்தமு தேசுவரி காலது கொண்டு கலந்துற வீசிடில் நாளது நாளும் புதுமைகள் கண்டபின் கேளது காயமும் கேடில்லை காணுமே.
|
37
|
கேடில்லை காணும் கிளரொளி கண்டபின் நாடில்லை காணும் அந் நாள்முதல் அற்றபின் மாடில்லை காணும் வரும்வழி கண்டபின் காடில்லை காணும் கருத்துற் றிடத்துக்கே.
|
38
|
உற்றிட மெல்லாந் உலப்பிலி பாழாகிக் கற்றிடமெல்லாம் கடுவெளி யானது மற்றிட மில்லை வழியில்லை தானில்லை சற்றிட மில்லை சலிப்பற நின்றிடே.
|
39
|
நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம் நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும் நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட நின்றிடும் மேலை விளக்கொளி தானே.
|
40
|
Go to top |
விளக்கொளி (ஸௌம்)முதல் (ஔம)து ஈறா விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும் விளக்கொளி யாகிய மின்கொடி யாளை விளக்கொளி யாக விளங்கிடு நீயே.
|
41
|
விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின் விளங்கிடு மெல்லிய லானது வாகும் விளங்கிடு மெய்நின்ற ஞானப்பொருளை விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.
|
42
|
தானே வெளியென எங்கும் நிறைந்தவள் தானே பரம வெளியது வானவள் தானே சகலமும் ஆக்கி அழித்தவள் தானே அனைத்துள அண்ட சகளமே.
|
43
|
அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள் பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள் குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும் கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே.
|
44
|
கலப்பறி யார் கடல் சூழுல கெல்லாம் உலப்பறி யார் உட லோடுயிர் தன்னைச் சிலப்பறி யார் சில தேவரை நாடித் தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.
|
45
|
Go to top |
தானே எழுந்தஅச் சக்கரம் சொல்லிடின் மானே மதிவரை பத்திட்டு வைத்தபின் தேனே இரேகை திகைப்பற ஒன்பதில் தானே கலந்த வரைஎண்பத் தொன்றுமே.
|
46
|
ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில் வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம் கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில் என்றியல் அம்மை எழுத்தவை பச்சையே.
|
47
|
ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின் காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமும் ஆய்ந்தவி ஆயிரம் ஆகுதி பண்ணுமே.
|
48
|
பண்ணிஅப் பெண்ணைப் பரப்பற நீபிடி எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும் நண்ணிய நாமும் நான்முகன் ஒத்தபின் துண்ணென மேயநற் சொக்கனு மாமே.
|
49
|
ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி போகின்ற சாந்து சவாது புழுகுநெய் ஆகின்ற கப்பூரம் ஆகோ சனம்நீரும் சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே.
|
50
|
Go to top |
வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடின் கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத் தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம் அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.
|
51
|
சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய் எந்தாய் கரங்கள் இருமூன்றும் உள்ளன பந்தமா சூலம் படைபாசம் வில்அம்பு முந்தை (கீலீம்)எழ முன்னிருந் தாளே.
|
52
|
இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர் இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர் இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே இருந்த கரம்இரு வில்லம்பு கொண்டே.
|
53
|
கொண்ட கனங்குழை கோமுடி ஆடையாய்க் கண்டஇம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப் பண்டமர் சோதிப் படரித ழானவை உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே.
|
54
|
உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற் கலந்திருந் தெங்குங் கருணை பொழியும் மணந்தெழும் ஓசை ஒளியது காணும் தணந்தெழும் சக்கரம் தான்தரு வாளே.
|
55
|
Go to top |
தருவழி யாகிய தத்துவ ஞானம் குருவழி யாகுங் குணங்களுள் நின்று கருவழி யாகுங் கணக்கை அறுத்துப் பெருவழி ஆக்குமப் பேரொளி தானே.
|
56
|
பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர் சீரொளி யாகித் திகழ்தரு நாயகி காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம் பாரொளி யாகிப் பரந்துநின் றாளே.
|
57
|
பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக் குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி பரிந்தருள் கொங்கைகள் முத்தார் பவளம் இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.
|
58
|
மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை அணிபவ ளன்றி அருளில்லை யாகும் தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப் பணிபவர்க் கன்றோ பரகதி யாமே.
|
59
|
பரந்திருந் துள்ளே அறுபது சத்தி கரந்தனர் கன்னிகள் அப்படிச் சூழ மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச் சிறந்தவர் ஏத்தும் (சிரீம்)தன மாமே.
|
60
|
Go to top |
தனமது வாகிய தையலை நோக்கி மனமது ஓடி மரிக்கில்ஓ ராண்டில் கனமவை அற்றுக் கருதிய நெஞ்சம் தினகர னாரிடச் செய்திய தாமே.
|
61
|
ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர் பேர்கின்ற பேரொளி யாய மலரதாய்ப் போகின்ற பூரண மாக நிறைந்தபின் சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.
|
62
|
ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள் ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள் ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரும் ஆகின்ற ஐம்பத் தறுவகைச் சூழலே.
|
63
|
சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமா ஆங்கணி முத்தம் அழகிய மேனியும் தாங்கிய கையவை தார்க்கிளி ஞானமாய் ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.
|
64
|
பாசம தாகிய வேரை அறுத்திட்டு நேசம தாக நினைத்திரும் உம்முளே நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில் காசினி மேலமர் கண்ணுத லாக்குமே.
|
65
|
Go to top |
கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி பண்ணுறு நாதம் பகையற நின்றிடில் விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்காரம் மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.
|
66
|
மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக் கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும் விண்டகத் துள்ளே விளங்கி வருதலால் தண்டகத் துள்ளவை தாங்கலு மாமே.
|
67
|
தாங்கிய நாபித் தடமலர் மண்டலத் தோங்கி யெழுங்கலைக் குள்உணர் வானவள் ஏங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட வாங்கிய நாதம் வலியுட னாகுமே.
|
68
|
நாவுக்கு நாயகி நன்மணி பூண்ஆரம் பூவுக்கு நாயகி பொன்முடி ஆடையாம் பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள் ஆவுக்கு நாயகி அன்றமர்ந் தாளே.
|
69
|
அன்றிரு கையில் அளந்த பொருள்முறை இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை மன்றது காணும் வழியது வாகவே கண்டங் கிருந்தவர்க் காரணி காணுமே.
|
70
|
Go to top |
காரணி சத்திகள் ஐம்பத் திரண்டெனக் காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க் காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்கும் காரணி தன்னரு ளாகிநின் றாளே.
|
71
|
நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில் கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில் கொண்ட விரதம்நீர் குன்றாமல் நின்றிடில் மன்றினில் ஆடும் மணியது காணுமே.
|
72
|
கண்டஇச் சத்தி இருதய பங்கயம் கொண்டஇத் தத்துவ நாயகி யானவள் பண்டை அவாவுப் பகையை யறுத்திட இன்றென் மனத்தில் இனிதிருந்தாளே.
|
73
|
இருந்தஇச் சத்தி இருநாலு கையில் பரந்தஇப் பூக்கிளி பாசம் மழுவாள் கரந்திடு கேடகம் வில்லம்பு கொண்டங் குரந்தங் கிருந்தவள் கூத்துகந்தாளே.
|
74
|
உகந்தனள் பொன்முடி முத்தார மாகப் பரந்த பவளமும் பட்டாடை சாத்தி மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து தழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.
|
75
|
Go to top |
பச்சை இவளுக்குப் பங்கிமார் ஆறெட்டு கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால் கச்சணி கொங்கைகள் கையிருங் காப்பதாய் எய்ச்ச இடைச்சி இனிதிருந் தாளே.
|
76
|
தாளதி னுள்ளே தயங்கிய சோதியைக் காலது வாகக் கலந்து `கம் ஜம்` என்று மாலது வாக வழிபாடு செய்துநீ பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.
|
77
|
விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக்கண்ணமர் கூபம் கலந்து வருதலால்பண்ணமர்ந் தாதித்த மண்டல மானதுதண்ணமர் கூபம் தழைத்தது காணுமே.
|
78
|
கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள தாபத்துச் சத்தி தயங்கி வருதலால் ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து பாபத் தறுக்கப் பரந்தன சூலமே.
|
79
|
சூலந்தண் டொள்வாள் சுடர்பர ஞானமாம் வேலம்பு தமருகம் மாகிளி வில்செண்டு காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.
|
80
|
Go to top |
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன் எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராய் எண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவள் எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே.
|
81
|
கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு தொடர்ந்தணி முத்துப் பவளம் கச்சாகப் படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.
|
82
|
நின்றஇச் சத்தி நிரந்தர மாகவே கண்டிடு மேரு அணிமாதி தானாகிப் பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு ஒன்றிய தீபம் உணர்ந்தாற்குண் டாமே.
|
83
|
உண்டோர் அதோமுகம் உத்தம மானது கண்டஇச் சத்தி சாதாசிவ நாயகி கொண்ட முகம்ஐந்து கூறுங் கரங்களும் ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானவே.
|
84
|
நன்மணி சூலம் கபாலம் கிளியுடன் பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும் கன்மணி தாமரை கையில் தமருகம் பொன்மணி பூணாரம் பூசனைக் கானவே.
|
85
|
Go to top |
பூசனைக் கன்னிகள் எண்ணைவர் சூழவே நேசவண் சத்திகள் நாற்பத்து நேரதாய்க் காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவர் மாசடை யாமல் மகிழந்திருந் தார்களே.
|
86
|
தாரத்தி னுள்ளே தயங்கிய சோதியைப் பாரத்தி னுள்ளே பரந்துள் ளெழுந்திட ஏரது ஒன்றி எழுந்த மனோமயம் காரது போலக் கலந்தெழும் மண்ணிலே.
|
87
|
மண்ணில் எழுந்த மகார உகாரங்கள் விண்ணில் எழுந்த சிவாய நமஎன்று கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல் கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.
|
88
|
என்றங் கிருந்த அமுத கலையிடைச் சென்றங் கிருந்த அமுத பயோதரி கண்ட கரம்இரு வெள்ளிபொன் மண்டைவாய்க் கொண்டங் கிருந்தது வண்ண அமுதே.
|
89
|
அமுதம தாக அழகிய மேனி படிகம தாகப் பரந்தெழும் உள்ளே குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக் கெழுமும தாகிய கேடிலி தானே.
|
90
|
Go to top |
கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும் நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும் பூவிலி பூவித ழுள்ளே யிருந்திவர் நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.
|
91
|
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும் கண்டது சோதி கருத்துள் இருந்திடக் கொண்டது ஓராண்டு கூடி வருதற்கு விண்ட ஔகாரம் விளங்கின அன்றே.
|
92
|
விளங்கிடு வானிடை நின்றவ ரெல்லாம் வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச் சுணங்கிடை நின்றவை சொல்லலு மாமே.
|
93
|
ஆமே அதோமுகம் மேலே அமுதமாய்த் தானே உகாரம் தழைத்தெழும் சோமனும் காமேல் வருகின்ற கற்பக மானது பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.
|
94
|
பொற்கொடி யாரிடைப் பூசனை செய்திட அக்களி யாகிய ஆங்காரம் போயிடும் மற்கட மாகிய மண்டலந் தன்னுளே பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.
|
95
|
Go to top |
பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும் தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும் மாதை இவளுக்கு மன்னும் திலகமாக் கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.
|
96
|
குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர் நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப் பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே இருந்தனர் காணும் இடம்பல கொண்டே.
|
97
|
கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக் கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால் இன்றென் மனத்துள்ளே இல்லடைந் தாளுமே.
|
98
|
இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லை இல்லடைந் தானுக் கிரப்பது தானில்லை இல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார் இல்லடைந் தானுக்கில் லாததில் லானையே.
|
99
|
ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே. 1,
|
100
|
Go to top |