பொன்னால் சிவசா தனம்பூதி சாதனம் நன்மார்க்க சாதன மாஞான சாதனம் துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனம் சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே.
|
1
|
கேடறு ஞானி கிளர்ஞான பூபதி பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தி னூடுறு ஞானோ தயன்உண்மை முத்தியோன் பாடுறு சுத்தசை வன்பத்தன் நித்தனே.
|
2
|
ஆகமம் ஒன்பான் அதில்ஆன நாலேழு மோகமில் நாலேழும் முப்பேதம் உற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மைஒன் றாக முடிந்த தருஞ்சுத்த சைவமே.
|
3
|
சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓரேழும் சத்தும் அசத்தும் தணந்த பராபரை உய்த்த பராபரை உள்ளாம் பராபரை அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே.
|
4
|
சத்தும் அசத்தும் தணந்தவர் தானாகிச் சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகமாய் முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினோர் சித்தியும் அங்கே சிறந்துள தானே.
|
5
|
Go to top |
தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை உன்னத் தகும் சுத்த சைவர் உபாயமே.
|
6
|
பூரணந் தன்னிலே வைத்தற்ற அப்போதத் தாரண வந்த மதிசித்தாந் தத்தொடு நேரென ஈராறும் நீடும் நெடும்போகம் காரண மாம்சுத்த சைவர்க்குக் காட்சியே.
|
7
|
மாறாத ஞானம் மதிப்பற மாயோகம் தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப் பேறான பாவனை பேணி நெறிநிற்றல் கூறாகும் ஞானி சரிதை குறிக்கிலே.
|
8
|
வேதாந்தங் கண்டோர் பிரமவித் தியாதரர் நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள் வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர் சாதா ரணர் அன்ன சைவர் உபாயரே.
|
9
|
விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள் கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள் எண்ணினைச் சென்றணு காமல் எணப்படும் அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.
|
10
|
Go to top |
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக நின்று சமய நிராகாரம் நீங்கியே நின்ற பராற்பர நேயத்தைப் பாதத்தால் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே. 4,
|
11
|