ஆயத்துள்நின்ற அருசம யங்களும் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கில மாயக் குழியில் விழுவ மனைமக்கட் பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே.
|
1
|
உள்ளத்து ளேதான் உகந்தெங்கும் நின்றவன் வள்ளற் றலைவன் மலருறை மாதவன் பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும் கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.
|
2
|
உள்ளத்தும் உள்ளன் புறத்துளன் என்பவர்க் குள்ளத்தும் உள்ளன் புறத்துளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க் குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.
|
3
|
ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் ஆறு சமயப் பொருளும் அவனலன் தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின் மாறுதல் இன்றி மனைபுக லாமே.
|
4
|
சிவமல்ல தில்லை இறையே சிவமாம் தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங் கவமல்ல தில்லை அறுசம யங்கள் தவமல்ல நந்திதாள் சார்ந்துய்யும் நீரே.
|
5
|
Go to top |
அண்ணலை நாடிய ஆறு சமயரும் விண்ணவ ராக மிகவும் விரும்பியே முண்ணின் றழியும் முயற்றில ராதலின் மண்ணின் றொழியும் வகைஅறி யார்களே.
|
6
|
சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம் பவகதி பாசப் பிறவிஒன் றுண்டு தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில் அவகதி மூவரும் அவ்வகை ஆமே.
|
7
|
நூறு சமயம் உளவாம் நுவலுங்கால் ஆறு சமயம்அவ் ஆறுட் படுவன கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா ஈறு பரநெறி இல்லா நெறியன்றே.
|
8
|
கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள் சுத்த சிவன்எங்கும் தோய்வற்று நிற்கின்றான் குற்றந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார் பித்தேறி நாளும் பிறந்திறப் பார்களே.
|
9
|
மயங்குகின் றாரும் மதிதெளிந் தாரை முயங்கி இருவினை மூழை முகப்பா இயங்கப் பெறுவரேல் ஈறது காட்டில் பயங்கெட் டவர்க்கோர் பரநெறி ஆமே.
|
10
|
Go to top |
சேயன் அணியன் பிணிஇலன் பேர்நந்தி தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு மாயன் மயக்கிய மானுட ராம்அவர் காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.
|
11
|
வழியிரண் டுக்கும்ஓர் வித்தது வான வழியது பார்மிசை வாழ்தல் உறுதல் சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின் றழிவறி வார்நெறி நாடகில் லாரே.
|
12
|
மாதவர் எல்லாம்மா தேவன் பிரான்என்பர் நாதம தாக அறியப் படும்நந்தி பேதம்செய் யாதே பிரான்என்று கைதொழில் ஆதியும் அந்நெறி ஆகிநின் றானே.
|
13
|
அரநெறி அப்பனை ஆதிப் பிரானை உரநெறி யாகி உளம்புகுந் தானை பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம் பரனறி யாவிடிற் பல்வகைத் தூரமே.
|
14
|
பரிசறி வானவன் பண்பன் பகலோன் பெரிசறி வானவர் பேற்றில் திகழும் துரிசற நீநினை தூய்மணி வண்ணன் அரிதவன் வைத்த அறநெறி தானே.
|
15
|
Go to top |
ஆன சமயம் அது இதுநன் றெனும் மான மனிதர் மயக்க மதுவொழி கானங் கடந்த கடவுளை நாடுமின் ஊனங் கடந்த உருவது வாமே.
|
16
|
அந்நெறி நாடி அமரர் முனிவரும் சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றார் பின் முன்னெறி நாடி முதல்வன் அருளிலார் செந்நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.
|
17
|
உறுமா றறிவதும் உள்நின்ற சோதி பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை அறுமா றதுவான அங்கியுள் ஆங்கே இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.
|
18
|
வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையம் கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர் சுழிநடக் குந்துய ரம்மதி நீக்கிப் பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.
|
19
|
வழிசென்ற மாதவம் வைக்கின்ற போது பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே அழிசெல்லும் வல்வினை ஆர்திறம் விட்டிட் டுழிசெல்லில் உம்பர் தலைவன் முன்ஆமே. 18,
|
20
|
Go to top |