ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.
|
1
|
எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமும் செம்மா தவத்துச் செயலின் பெருமையும் அம்மான் திருவருள் பெற்றவ ரேயல்லால் இம்மா தவத்தின் இயல்பறி யாரே.
|
2
|
பிறப்பறி யார்பல பிச்சைச்செய் மாந்தர் சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பில ராகியே மாதவம் செய்வார் பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.
|
3
|
இருந்து வருந்தி எழிற்றவம் செய்யும் பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே இருந்திந் திரனே எவரே எனினும் திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.
|
4
|
கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான் பரந்த சடையன் பசும்பொன் னிறத்தன் அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான் விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.
|
5
|
Go to top |
அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.
|
6
|
சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர் மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் பார்த்தஅப் பார்வை பசுமரத் தாணிபோல் ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.6,
|
7
|