குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடும் குழிவிழு மாறே.
|
1
|
மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி நினைப்பின் அதனில் நிழலையும் காணார் வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார் புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.
|
2
|
ஏயெனின் என்என மாட்டார் பிரசைகள் வாய்முலை பெய்ய மதுரம்நின் றூறிடுந் தாய்முலை யாவ தறியார் தமருளோர் ஊனிலை செய்யும் உருவிலி தானே.
|
3
|
வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்க நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய் தீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின் பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே.
|
4
|
பஞ்சத் துரோகத்திப் பாதகர் தன்மையும் அஞ்சச் சமையத்தோர் வேந்தன் அருந்தண்டம் விஞ்சச்செய் திப்புவி வேறுசெய் யாவிடின் பஞ்சத்து ளாய்ப்புவி முற்றும்பா ழாகுமே.
|
5
|
Go to top |
தவத்திடை நின்றவர் தாமுன்னும் கன்மம் சிவத்திடை நின்றது தேவர் அறியார் தவத்திடை நின்றறி யாதவர்க் கெல்லாம் பவத்திடை நின்றதோர் பாடது வாமே.
|
6
|
விடிவ தறியார் வெளிகாண மாட்டார் விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார் கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின் விடியாமை காக்கும் விளக்கது வாமே.
|
7
|
வைத்த பசுபாசம் மாற்றும் நெறிவைகிப் பெத்தம் அறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத் தத்துவம் முன்னித் தலைப்படா தவ்வாறு பித்தான சீடனுக் கீயப் பெறாதானே.
|
8
|
மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகைஓரான் துன்னிய காமாதி தோயும் தொழில் நீங்கான் பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான் அன்னிய னாவான் அதற்சீட னாமே. 14,
|
9
|