அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில் வெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில் நொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு வந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே.
|
1
|
எண்ணிலா ஞானி யுடல்எரி தாவிடில் அண்ணல்தன் கோயில் அழலிட்ட தாங்கொக்கும் மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம் எண்ணரு மன்னர் இழப்பர் அரசே.
|
2
|
புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும் மண்ணி லழியில் மலங்காரப் பஞ்சமாம் மண்ணுல கெல்லா மயங்குமனல் மண்டியே.
|
3
|
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால் அந்த உடல்தான் குகைசெய் திருத்திடில் சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும் அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.
|
4
|
நவமிகு சாணாலே நல்லாழம் செய்து குவைமிகு சூழலைஞ் சாணாகக் கோட்டித் தவமிகு முட்குகைமுக் கோணமுச் சாணாக்கிப் பவமறு நற்குகை பத்மா சனமே.
|
5
|
Go to top |
தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை நன்மலர்ச் சோலை நகரில்நற் பூமி உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல் இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடமே.
|
6
|
நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய் நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப் பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்றணி நிற்பவர் தாம்செய்யும் நேர்மைய தாமே.
|
7
|
பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து விஞ்சப் படுத்ததன் மேல்ஆ சனமிட்டு முஞ்சி படுத்துவெண் ணீறிட் டதன்மேலே பொன்செய்நற் சுண்ணம் பொதியலு மாமே.
|
8
|
நள்குகைநால் வட்டம் படுத்ததன் மேற்காகக் கள்ளவிழ் தாமம் களபம்கத் தூரியும் தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.
|
9
|
ஓதிடு வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம் மீதினில் இட்டா சனத்தினின் மேல்வைத்துப் போதுறு சுண்ணமும் நீறும் பொலிவித்து மீதி லிருத்தி விரித்திடு வீரே.
|
10
|
Go to top |
விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து பொரித்த கறிபோ னகம்இள நீரும் குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.
|
11
|
மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும் போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும் பாத உதகத்தால் மஞ்சனம் செய்துபார் மீதுமூன் றுக்குமூன் றணிநிலம் செய்யுமே.
|
12
|
ஆதன மீதில் அரசு சிவலிங்கம் ஓதும் இரண்டினில் ஒன்றினைத் தாபித்து மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம் காதலிற் கோடல் காண்உப சாரமே. 20,
|
13
|