விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்(து) அந்த அபர பரநாத மாகியே வந்தன தம்மில் பரம்கலை யாதிவைத்(து) உந்தும் அருணோ தயம்என்ன உள்ளத்தே.
|
1
|
உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான் தெள்ளும் பரநாதத் தின்செயல் ஆதலால் வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்(கு) உள்ளன ஐங்கலைக் கொன்றும் உதயமே.
|
2
|
தேவர் பிரான்திசை பத்துத யம்செய்யும் மூவர் பிரான்என முன்னொரு காலத்து நால்வர் பிரான் நடுவாய்உரை யாநிற்கும் மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே.
|
3
|
பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன் கையிருள் நீக்கக் கலந்தெழுந் தானே.
|
4
|
தனிச்சுடர் எற்றித்தாய் அங்கிருள் நீங்க அனித்திடும் மேலை அருங்கனி யூறல் கனிச்சுட ராய கயிலையில் ஈசன் நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.
|
5
|
Go to top |
நேரறி வாக நிரம்பிய பேரொளி போரறி யாது புவனங்கள் போய்வரும் தேரறி யாத திசைஒளி யாயிடும் ஆரறி வார்அது நாயகம் ஆமே.
|
6
|
மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன் கண்டிடத் துள்ளே கதிரொளி யாயிடும் சென்றிடத் தெட்டுத் திசைதொறும் போய்வரும் நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.
|
7
|
நாவிகண் நாசி நயன நடுவினும் தூவியோ டைந்தும் சுடர்விடு சோதியைத் தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் மூவரு மாக உணர்ந்திருந் தாரே. 26,
|
8
|