வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார் அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள் உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார் முற்றொளி ஈயல் முளிகின்ற வாறே.
|
1
|
போது சடக்கெனப் போகின் றதுகண்டும் வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து ஆதியை அன்பில் அறியகில் லார்களே.
|
2
|
கடன்கொண்டு நெற்குற்றுக் கையரை ஊட்டி உடம்பினை யோம்பி உயிராய்த் திரிவார் தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.
|
3
|
விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர் உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.
|
4
|
நின்ற புகழும் நிறைதவத் துண்மையும் என்றும்எம் ஈசன் அடியவர்க் கேநல்கும் அன்றி உலகம் அதுஇது தேவென்று குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.
|
5
|
Go to top |
இன்பத்து ளேபிறந் தின்பத்தி லேவளர்ந் தின்பத்து ளேதிளைக் கின்ற திதுமறந்து துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென் துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.
|
6
|
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற் கரிய பிரானடி பேணார் பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.
|
7
|
ஆர்வ மனமும் அளவில் இளமையும் ஈரமும் நல்லஎன் றின்புறு காலத்துத் தீர வருவதோர் காமத் தொழில்நின்று மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.
|
8
|
இப்பரி சேஇள ஞாயிறு போல் உரு அப்பரி சங்கியின் உள்ளுறை அம்மானை இப்பரி சேகம லத்துறை ஈசனை மெய்ப்பரி சேவின வாதிருந் தோமே.
|
9
|
கூடவல் லார்குரு வைத்த குறிகண்டு நாடகில் லார் நயம் பேசித் திரிவர்கள் பாடகில் லார்அவன் வைத்த பரிசறிந்து ஆடவல் லார் அவர் பேறெது ஆமே.
|
10
|
Go to top |
நெஞ்சு நிறைந்தங் கிருந்த நெடுஞ்சுடர் நஞ்செம் பிரான்என்று நாதனை நாடொறும் துஞ்சு மளவும் தொழுமின் தொழாவிடில் அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே.
|
11
|
மிருகம் மனிதர்கள் மிக்கோர் பறவை ஒருவர் செய் தன்புவைத் துன்னாத தில்லை பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர் திருமரு மாதவம் சேர்ந்துணர்ந் தாரே.
|
12
|
நீதி யிலோர்பெற்ற பொன்போல் இறைவனைச் சோதியில் ஆரும் தொடர்ந்தறி வார்இல்லை ஆதி அயனென் றமரர் பிரானென்று நாதியே வைத்தது நாடுகின் றேனே
|
13
|
இருந்தேன் மலரளைந் தின்புற வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் வருந்தேன் நுகராது வாய்புகு தேனை அருந்தேனை யாரும் அறியகி லாரே.
|
14
|
கருத்தறி யாது கழிந்தன காலம் அருத்தியுள் ளான்அம ராபதி நாதன் ஒருத்தனுள் ளான்உல கத்துயிர்க் கெல்லாம் வருத்திநில் லாது வழுக்குகின் றாரே.
|
15
|
Go to top |
குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய் விதித்தன நாள்களும் வீழ்ந்து கழிந்த அதிர்த்திருந் தென்செய்தீர் ஆறுதி ராயின் கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.
|
16
|
கரையரு காறாக் கழனி விளைந்தது திரையரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும் வரையரு கூறிய மாதவம் நோக்கின் நரையுரு வாச்செல்லும் நாள்இல வாமே.
|
17
|
வரவறி வானை மயங்கிருள் ஞாலத் திரவறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை அரவறி வார்முன் ஒருதெய்வம் என்று விரவறி யாமலே மேல்வைத்த வாறே.வரவறி 38,
|
18
|