நனவாதி தூலமே சூக்கப் பகுதி அனவான ஐயைந்தும் விந்துவின் சத்தி தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து கனவாம் நனவில் கலந்ததிவ் வாறே.
|
1
|
நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார் நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார் நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார் நனவில் கனவோடல் நற்செய்தி யானதே.
|
2
|
செறியுங் கிரியை சிவதத் துவமாம் பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி குறிதற் றிருமேனி குணம்பல ஆகும் அறிவில் சராசரம் அண்டத் தளவே.
|
3
|
ஆதி பரம்சிவம் சத்தி சதாசிவம் ஏதமில் ஈசன்நல் வித்தையாம் தத்துவம் போதம் கலைகா லமேநியதி மாயையும் நீதி அராகம் நிறுத்தினன் என்னே.
|
4
|
தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம் ஈசன்நல் வித்தை - இராகம் கலை காலம் மாசகல் வித்தை நியதி மகாமாயை ஆசில் புருடாதி ஆன்மா - ஈ ராறே.
|
5
|
Go to top |
ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம் காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும் தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும் பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.
|
6
|
பசுக்கள் பலவண்ணம் பால்ஒரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன்ஒருவண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடின் பசுக்கள் தலைவனைப் பற்றி யிடாவே.
|
7
|
உடல் இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம் அடல்ஒன் றகந்தை அறியாமை மன்னிக் கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால் அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.
|
8
|
தற்றெரி யாத அதீதம்தன் ஆணவம் சொற்றெரி கின்ற துரியம்சொற் காமியம் பெற்ற சுழுத்தி பின்பேசுறும் காதலாம் மற்றது உண்டி கனாநன வாதலே
|
9
|
நனவிற் கனவில்லை ஐந்தும் நனவில் கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி தனில்நுண் பகுதியே தற்கூட்டு மாயை நனவில் துரியம் அதீதம் தலைவந்தே.
|
10
|
Go to top |
ஆறாறில் ஐயைந் தகலல் நனாநனா ஆறாம் அவைவிட வாகும் நனாக்கனா வேறான ஐந்தும் விடவே நனாவினில் ஈறாம் சுழுத்தி இனிமாயை தானே.
|
11
|
மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறைவிட் டதுவும்தான் அன்றாகிச் சேய்கே வலம் விந்து வும் செலச் சென்றக்கால் ஆய தனுவின் பயன்இல்லை யாமே.
|
12
|
அதீதத் துரியத் ததீனாம் ஆன்மா அதீதத் துரியத் ததனால் புரிந்தால் அதீதத் தெழுந்தறி வாகிய மானன் முதிய அனலின் துரியத்து முற்றுமே.
|
13
|
ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம் கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனாஎன்பர் பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையில் மெய்கண் டவன்உந்தி மேவில் துரியமே.
|
14
|
புரியட் டகமே பொருந்தல் நனவு புரியட் டகந்தன்னில் மூன்று கனவு புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி புரியட் டகத்தொன்று புக்கால் துரியமே.
|
15
|
Go to top |
நனவில் நனவு புலனில் வழக்கம் நனவில் கனவு நினைத்தல் மறத்தல் நனவில் சுழுத்திஉள் நாடல் இலாமை நனவில் துரியம்அதீதத்தூண் நந்தியே.
|
16
|
கனவில் நனவுபோல் காண்டல் நனவாம் கனவினில் கண்டமறத்தல் கனவாம் கனவில் சுழுத்தியும் காணாத காணல் அனுமாதி தேய்தலில் ஆன துரியமே.
|
17
|
சுழுத்தி நனவொன்றும் தோன்றாமை தோன்றல் சுழுத்திக் கனவுதன் உண்மை சுழுத்தியில் சுழுத்தி அறிவறி வாலே அழிகை சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.
|
18
|
துரிய நனவாம் இதம்உணர் போதம் துரியக் கனவாம் அகம்உணர் போதம் துரியச் சுழுத்தி வியோமம் துரியத் துரியம் பரம் - எனத் தோன்றிடுந் தானே.
|
19
|
அறிவறி கின்ற அறிவு நனவாம் அறிவறி யாமை அடையக் கனவாம் அறிவறி யவ்வறி யாமை சுழுத்தி அறிவறி வாயின தான துரியமே.
|
20
|
Go to top |
தான்எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு ஞானம் தனதுரு வாகி நயந்து பின் தான்எங்கு மாய்நெறி நின்(று) அது தான்விட்டு மேல்நந்தச் சூக்கம் அவைவன்ன மேலீடே.
|
21
|
ஐயைந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில் எய்யும் நனவு கனவு சுழுத்திஆம் எய்தும்பின் சூக்குமம் எய்பகுதி மாயை ஐயமுந் தானவன் அத்துரி யத்தனே.
|
22
|
ஈதென் றறிந்திலேன் இத்தனைக் காலமும் ஈதென் றறிந்தபின் ஏதும் அறிந்திலேன் ஈதென் றறியும் அறிவை யறிந்தபின் ஈதென் றறியும் இயல்புடை யோனே.
|
23
|
உயிர்க்குயி ராகிஉருவாய் அருவாய் அயர்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய் நயப்புறு சத்தியும் நாதனுல காதி இயற்பின்றேல் எல்லாம் இருள் மூடம் ஆமே.
|
24
|
சத்தி யிராகத்தில் தான்நல் உயிராகி ஒத்துறு பாச மலம்ஐந்தோ(டு) ஆறாறு தத்துவ பேதம் சமைத்துக் கருவியும் வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.
|
25
|
Go to top |
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை சாக்கிரா தீதத் துரியத்தில் தான்உறல் சாக்கிரா தீதத்தில் ஆணவந் தான்விடச் சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.
|
26
|
மலக்கலப் பாலே மறைந்தது ஞானம் மலக்கலப் பாலே மறைந்தது சத்தி மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு மலக்கலப் பற்றால் மதிஒளி யாமே.
|
27
|
திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு அகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன் றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால்இரண் டாமே.
|
28
|
கதறிப் பதினெட்டுக் கண்களும் போகச் சிதறி யெழுகின்ற சிந்தையை நீரும் விதறு படாமூனம் மெய்வழி நின்றால் அதிர வருவதோர் ஆனையும் ஆமே.
|
29
|
நனவகத் தேஒரு நாலைந்தும் வீடா கனவகத் தேஉட் கரணங்க ளோடும் உனவகத் தேநின் றுதறிஉட் புக்கு நினைவகத் தின்றிச் சுழுத்திநின் றானே.
|
30
|
Go to top |
நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய் ஒன்றி உலகின் நியமா திகள்உற்றுச் சென்று துரியாதீ தத்துச் சிலகாலம் நின்று பரனாகி நின்மலன் ஆமே.
|
31
|
ஆனஅவ் வீச னதீதத்தில் வித்தையாம் தான்உல குண்டு சதாசிவ மாய்சத்தி மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி மோன மடைந்தொலி மூலத்த னாமே.
|
32
|
மண்டல மூன்றினுள் மாயநன் னாடனைக் கண்டுகண் டுள்ளே கருதிக் கழிகின்ற விண்டலர் தாமரை மேலொன்றுங் கீழாகத் தண்டமுந் தாமா யகத்தினுள் ளாமே.
|
33
|
போதறி யாது புலம்பின புள்ளினம் மாதறி யாவகை நின்று மயங்கின வேதறி யாவணம் நின்றனன் எம்மிறை சூதறி வார்உச்சி சூடிநின் றானே.
|
34
|
கருத்தறிந் தொன்பது கண்டமு மாங்கே பொருத்தறிந் தேன்புவ னாபதி நாடித் திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை வருத்தறிந்தேன் மனம் மன்னிநின் றானே.
|
35
|
Go to top |
ஆன விளக்கொளி தூண்டு மவனென்னத் தான விளக்கொளி யாம்மூல சாதனத்(து) ஆன விதிமூலத் தான்அத்தில் அவ்விளக்(கு) ஏனை மதிமண் டலங்கொண் டெரியுமே.
|
36
|
உண்ணாடும் ஐவர் குமண்டை ஒதுங்கிய விண்ஆட நின்ற வெளியை வினவுறில் அண்ணாந்து பார்த் (து)ஐவர் கூடிய சந்தியின் கண்நாடி காணும் கருத்ததென் றானே.
|
37
|
அறியாத வற்றை அறிவான் அறிவான் அறிவான் அறியாதான் தன்னறி வாகான் அறியாத வற்றை அறிவானைக் கூட்டி அறியா தறிவானை யாரறி வாரே.
|
38
|
துரிய தரிசனம் சொற்றோம் வியோமம் அரியன தூடணம். அந்நன வாதி பெரியன கால பரம்பிற் றுரியம் அரிய அதீதம் அதீதத்த தாமே.
|
39
|
மாயையிற் சேதனம் மன்னும் பகுதியான் மாயையின் மற்றது நீவுதல் மாயையாம் கேவல மாகும் சகலமாய் யோனியுள் தோயும் அநித்தம் துரியத்துள் சீவனே. 7,
|
40
|
Go to top |