அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி அதீதத்து ளாகி அறிவிலன் ஆன்மா மதிபெற் றிருள் விட்ட மன்னுயிர் ஒன்றாம் பதியிற் பதியும் பரவுயிர் தானே.
|
1
|
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி சோதி பரஞ்சுடர் தோன்றித் தோன்றாமையின் நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.
|
2
|
துரியங் கடந்து துரியாதீ தத்தே அரிய இயோகங்கொண் டம்பலத் தாடும் பெரிய பிரானைப் பிரணவக் கூத்தே தெரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.
|
3
|
செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிதல்போல் அம்மெய்ப் பரத்தோ(டு) அணுவன் உள்ளாயிடப் பொய்ம்மைச் சகம்உண்ட போத வெறும் பாழில் செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.
|
4
|
வைச்ச கலாதி வருதத் துவம்கெட வெச்ச இருமாயை வேறாக வேரறுத்(து) உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.
|
5
|
Go to top |
என்னை யறிய இசைவித்த என்நந்தி என்னை யறிவித்(து) அறி யாத இடத்துய்த்துப் பின்னை ஒளியில் சொருபம் புறப்படத் தன்னை யளித்தனன் தற்பர மாகவே.
|
6
|
பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு நிரந்த வெளியொடு ஞாயிறு திங்கள் அரந்தம் அரன்நெறி யாய் அவை யாகித் தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.
|
7
|
சத்தின் நிலையினில் தானான சத்தியும் தத்பரை யாய்நிற்கும் தான்ஆம் பரற்குடல் உய்த்தகும் இச்சையில் ஞானாதி பேதமாய் நித்தம் நடத்தும் நடிக்கும் மா நேயத்தே.
|
8
|
மேலொடுகீழ் பக்கம்மெய் வாய்கண்ணா நாசிகள் பாலிய விந்து பரஉட் பரையாகக் கோலிய நான்கவை ஞானம் கொணர்வித்துச் சீலமி லாஅணுச் செய்திய தாகுமே.
|
9
|
வேறாம் அதன்தன்மை மேலும்இக் காயத்தில் ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம் பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமா ஊறா உயிர்த்துண் டுறங்கிடும் மாயையே.
|
10
|
Go to top |
தற்பரம் மன்னும் தனிமுதற் பேரொளி சிற்பரந் தானே செகம்உண்ணும் போதமும் தொற்பதந் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்(கு) அப்புறம் அற்றதிங் கொப்பில்லை தானே.
|
11
|
பண்டை மறைகள் பரவான் உடல் என்னும் துண்ட மதியோன் துரியாதீ தன் தன்னைக் கண்ட பரனும்அக் காரணோ பாதிக்கே மிண்டின் அவன்சுத்த னாகான் வினவிலே.
|
12
|
வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற(து) அளியா கியதற் பரங்காண் அவன்றான் வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற வெளியாய சத்தி அவன்வடி வாமே.
|
13
|
மேருவி னோடே விரிகதிர் மண்டிலம் ஆர நினையும் அருந்தவ யோகிக்குச் சீர்தவம் செய்யின் சிவனருள் தானாகும் பேரவும் வேண்டா பிறிதில்லை தானே. 22,
|
14
|