முத்திசெய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரானைச் சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியைப் பத்தன் பரசும் பசுபதி தான் என்றே.
|
1
|
அடியார் அடியார் அடியார் அடிமைக்(கு) அடியனாய் நல்கிட்(டு) அடிமையும் பூண்டேன் அடியார் அருளால் அவனடி கூட்ட `அடியான் இவன்` என்று அடிமைக்கொண்டானே.
|
2
|
நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும் ஆர்இக் கடன்நந்தி ஆமா றறிபவர் பாரில் பயன்ஆரைப் பார்க்கிலும் நேரியன் ஊரில் உமாபதி யாகிநின் றானே.
|
3
|
ஒத்துல கேழும் அறியா ஒருவன்என் றத்த னிருந்திடம் ஆர்அறி வார்செல்லப் பத்தர்தம் பத்தியின் பாற்படி னல்லது முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.
|
4
|
ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல நான்கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள் ஊன்கன்றான் நாடிவந் துள்புகுந் தானே.
|
5
|
Go to top |
பெத்தத்தும் தன்பணி இல்லை பிறத்தலால் முத்தத்தும் தன்பணி இல்லை முறைமையால் அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலால் பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.
|
6
|
பறவையிற் கர்ப்பமும் பாம்பும்மெய் யாகக் குறவம் சிலம்பக் குளிர்வரை யேறி நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால் இறைவன்என் றென்மனம் ஏத்தகி லாதே.
|
7
|
உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப் பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின் செறுதுணை செய்து சிவனடி சிந்தித்(து) உறுதுணை யாய் அங்கி யாகிநின் றானே.
|
8
|
வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற தானவர் முப்புரம் சென்ற தலைவனை கானவன் என்றும் கருவரை யான்என்றும் ஊனத னுள்நினைந் தொன்று படாரே.
|
9
|
நிலைபெற கேடென்று முன்னே படைத்த தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம் மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும் உலையுளும் உள்ளத்தும் ஊழ்த்துநின் றானே. 42,
|
10
|
Go to top |