சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.290   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

நீடு வண்புகழ்ச் சோழர்நீர் நாட்டிடை நிலவும்
மாடு பொன்கொழி காவிரி வடகரைக் கீழ்பால்
ஆடு பூங்கொடி மாடம்நீ டியஅணி நகர்தான்
பீடு தங்கிய திருப்பெரு மங்கலப் பெயர்த்தால்.
1

இஞ்சி சூழ்வன எந்திரப் பந்திசூழ் ஞாயில்
மஞ்சு சூழ்வன வரையென வுயர்மணி மாடம்
நஞ்சு சூழ்வன நயனியர் நளினமெல் லடிச்செம்
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு.
2

விழவ றாதன விளங்கொளி மணிநெடு வீதி
முழவ றாதன மொய்குழ லியர்நட வரங்கம்
மழவ றாதன மங்கலம் பொலிமணி முன்றில்
உழவ றாதநல் வளத்தன ஓங்கிருங் குடிகள்.
3

நீரி னிற்பொலி சடைமுடி நெற்றிநாட் டத்துக்
காரி னில்திகழ் கண்டர்தங் காதலோர் குழுமிப்
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர்தாள் பரவும்
சீரின் மிக்கது சிவபுரி யெனத்தகுஞ் சிறப்பால்.
4

இன்ன வாழ்பதி யதனிடை
ஏயர்கோக் குடிதான்
மன்னி நீடிய வளவர்சே
னாபதிக் குடியாம்
தொன்மை மேவிய தொடர்ச்சியால்
நிகழ்வது தூய
பொன்னி நாட்டுவே ளாண்மையில்
உயர்ந்தபொற் பினதால்.
5
Go to top

அங்கண் மிக்கஅக் குடியினில் அவதரித் துள்ளார்
கங்கை வாழ்முடி யார்தொண்டர் கலிக்காமர் என்பார்
தங்கள் நாயகர் அடிபணி வார்அடிச் சார்ந்து
பொங்கு காதலி னவர்பணி போற்றுதல் புரிந்தார்.
6

புதிய நாள்மதிச் சடைமுடி யார்திருப் புன்கூர்க்
கதிக மாயின திருப்பணி அநேகமுஞ் செய்து
நிதிய மாவன நீறுகந் தார்கழ லென்று
துதியி னாற்பர வித்தொழு தின்புறு கின்றார்.
7

நாவ லூர்மன்னர் நாதனைத் தூதுவிட் டதனுக்
கியாவ ரிச்செயல் புரிந்தன ரென்றவ ரிழிப்பத்
தேவர் தம்பிரா னவர்திறந் திருத்திய வதற்கு
மேவ வந்தஅச் செயலினை விளம்புவா னுற்றேன்.
8

திருத்தொண்டத் தொகையருளித்
திருநாவ லூராளி
கருத்தொன்று காதலினால்
கனகமதில் திருவாரூர்
ஒருத்தர்கழல் முப்பொழுதும்
உருகியஅன் பொடுபணிந்து
பெருத்தெழுமெய் யன்பினாற்
பிரியாதங் குறையுநாள்.
9

தாளாண்மை உழவுதொழில்
தன்மைவளந் தலைசிறந்த
வேளாளர் குண்டையூர்க்
கிழவரெனும் மேதக்கோர்
வாளார்வெண் மதியணிந்தார்
மறையவராய் வழக்கினில்வென்று
ஆளாகக் கொண்டவர்தாள்
அடைந்தன்பா லொழுகுவார்.
10
Go to top

செந்நெல்லும் பொன்னன்ன
செழும்பருப்பும் தீங்கரும்பின்
இன்னல்ல வமுதும்முதல்
எண்ணில்பெரும் பலவளங்கள்
மன்னியசீர் வன்றொண்டர்க்
கமுதாக வழுவாமல்
பன்னெடுநாள் பரவையார்
மாளிகைக்குப் படிசமைத்தார்.
11

ஆனசெயல் அன்பின்வரும்
ஆர்வத்தால் மகிழ்ந்தாற்ற
வானமுறை வழங்காமல்
மாநிலத்து வளஞ்சுருங்கப்
போனகநெற் படிநிரம்ப
எடுப்பதற்குப் போதாமை
மானமழி கொள்கையினால்
மனமயங்கி வருந்துவார்.
12

வன்றொண்டர் திருவாரூர்
மாளிகைக்கு நெல்லெடுக்க
இன்றுகுறை யாகின்ற
தென்செய்கேன் எனநினைந்து
துன்றுபெருங் கவலையினால்
துயரெய்தி உண்ணாதே
அன்றிரவு துயில்கொள்ள
13

ஆரூரன் தனக்குன்பால்
நெல்தந்தோம் என்றருளி
நீரூருஞ் சடைமுடியார்
நிதிக்கோமான் தனையேவப்
பேரூர்மற் றதனெல்லை
அடங்கவும்நென் மலைப்பிறங்கல்
காரூரும் நெடுவிசும்புங்
கரக்கநிறைந் தோங்கியதால்.
14

அவ்விரவு புலர்காலை
உணர்ந்தெழுவார் அதுகண்டே
எவ்வுலகில் நெல்மலைதா
னிதுவென்றே யதிசயித்துச்
செவ்வியபொன் மலைவளைத்தார்
திருவருளின் செயல் போற்றிக்
கொவ்வைவாய்ப் பரவையார்
கொழுநரையே தொழுதெழுவார்.
15
Go to top

நாவலூர் மன்ன னார்க்கு
நாயனார் அளித்த நெல்இங்
கியாவரா லெடுக்க லாகும்
இச்செய லவர்க்குச் சொல்லப்
போவன்யா னென்று போந்தார்
புகுந்தவா றருளிச் செய்து
தேவர்தம் பெருமான் ஏவ
நம்பியும் எதிரே சென்றார்.
16

குண்டையூர்க் கிழவர் தாமும்
எதிர்கொண்டு கோதில் வாய்மைத்
தொண்டனார் பாதந் தன்னில்
தொழுதுவீழ்ந் தெழுந்து நின்று
பண்டெலாம் அடியேன் செய்த
பணியெனக் கின்று முட்ட
அண்டர்தம் பிரானார் தாமே
நெல்மலைஅளித்தா ரென்று.
17

மனிதரால் எடுக்கு மெல்லைத்
தன்றுநெல் மலையின் ஆக்கம்
இனியெனால் செய்ய லாகும்
பணியன்றி தென்னக் கேட்டுப்
பனிமதி முடியா ரன்றே
பரிந்துமக் களித்தார் நெல்லென்
றினியன மொழிந்து தாமும்
குண்டையூர் எய்த வந்தார்.
18

விண்ணினை அளக்கு நெல்லின்
வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலைத் தொழுது போற்றி
அதிசயம் மிகவு மெய்தி
எண்ணில்சீர்ப் பரவை யில்லத்
திந்நெல்லை யெடுக்க ஆளும்
தண்ணில வணிந்தார் தாமே
தரிலன்றி ஒண்ணா தென்று.
19

ஆளிடவேண் டிக்கொள்வார்
அருகுதிருப் பதியான
கோளிலியில் தம்பெருமான்
கோயிலினை வந்தெய்தி
வாளனகண் மடவாள்
வருந்தாமே எனும்பதிகம்
மூளவருங் காதலுடன்
முன்தொழுது பாடுதலும்.
20
Go to top

பகற்பொழுது கழிந்ததற்பின்
பரவைமனை யளவன்றி
மிகப்பெருகு நெல்லுலகில்
விளங்கியஆ ரூர்நிறையப்
புகப்பெய்து தருவனநம்
பூதங்க ளெனவிசும்பில்
நிகர்ப்பரிய தொருவாக்கு
நிகழ்ந்ததுநின் மலனருளால்.
21

தம்பிரான் அருள்போற்றித்
தரையின்மிசை விழுந்தெழுந்தே
உம்பரா லுணர்வரிய
திருப்பாதந் தொழுதேத்திச்
செம்பொன்நேர் சடையாரைப்
பிறபதியுந் தொழுதுபோய்
நம்பரா ரூரணைந்தார்
நாவலூர் நாவலனார்.
22

பூங்கோயில் மகிழ்ந்தருளும்
புராதனரைப் புக்கிறைஞ்சி
நீங்காத பெருமகிழ்ச்சி
யுடனேத்திப் புறம்போந்து
பாங்கானார் புடைசூழ்ந்து
போற்றிசைக்கப் பரவையார்
ஓங்குதிரு மாளிகையின்
உள்ளணைந்தார் ஆரூரர்.
23

கோவைவாய்ப் பரவையார்
தாம்மகிழும் படிகூறி
மேவியவர் தம்மோடு
மிகஇன்புற் றிருந்ததற்பின்
சேவின்மே லுமையோடும்
வருவார்தந் திருவருளின்
ஏவலினால் அவ்விரவு
பூதங்கள் மிக்கெழுந்து.
24

குண்டையூர் நென்மலையைக்
குறட்பூதப் படைகவர்ந்து
வண்டுலாங் குழற்பரவை
மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் திருவாரூர்
அடங்கவும்நெல் மலையாக்கிக்
கண்டவர்அற் புதமெய்துங்
காட்சிபெற அமைத்தனவால்.
25
Go to top

அவ்விரவு புலர்காலை
ஆரூரில் வாழ்வார்கண்டு
எவ்வுலகில் விளைந்தனநெல்
மலையிவையென் றதிசயித்து
நவ்விமதர்த் திருநோக்கின்
நங்கைபுகழ்ப் பரவையார்க்
கிவ்வுலகு வாழவரு
நம்பியளித் தனவென்பார்.
26

நீக்கரிய நெற்குன்று
தனைநோக்கி நெறிபலவும்
போக்கரிதா யிடக்கண்டு
மீண்டுந்தம் மில்புகுவார்
பாக்கியத்தின் திருவடிவாம்
பரவையார்க் கிந்நெல்லுப்
போக்குமிட மரிதாகும்
எனப்பலவும் புகல்கின்றார்.
27

வன்றொண்டர் தமக்களித்த
நெற்கண்டு மகிழ்சிறப்பார்
இன்றுங்கள் மனையெல்லைக்
குட்படுநெற் குன்றெல்லாம்
பொன்தங்கு மாளிகையிற்
புகப்பெய்து கொள்கவென
வென்றிமுர சறைவித்தார்
மிக்கபுகழ்ப் பரவையார்.
28

அணியாரூர் மறுகதனில்
ஆளியங்கப் பறையறைந்த
பணியாலே மனைநிறைத்துப்
பாங்கெங்கும் நெற்கூடு
கணியாமற் கட்டிநகர்
களிகூரப் பரவையார்
மணியாரம் புனைமார்பின்
வன்றொண்டர் தமைப்பணிந்தார்.
29

நம்பியா ரூரர்திரு
வாரூரில் நயந்துறைநாள்
செம்பொற்புற் றிடங்கொண்டு
வீற்றிருந்த செழுந்தேனைத்
தம்பெரிய விருப்பினொடுந்
தாழ்ந்துணர்வி னாற்பருகி
இம்பருடன் உம்பர்களும்
அதிசயிப்ப ஏத்தினார்.
30
Go to top

குலபுகழ்க் கோட்புலியார்
குறையிரந்து தம்பதிக்கண்
அலகில்புக ழாரூரர்
எழுந்தருள அடிவணங்கி
நிலவியவன் தொண்டர்அஃ
திசைந்ததற்பி னேரிறைஞ்சிப்
பலர்புகழும் பண்பினார்
மீண்டுந்தம் பதியணைந்தார்.
31

தேவ ரொதுங்கத் திருத்தொண்டர்
மிடையுஞ் செல்வத் திருவாரூர்
காவல் கொண்டு தனியாளுங்
கடவுட் பெருமான் கழல்வணங்கி
நாவ லூர ரருள் பெற்று
நம்பர் பதிகள் பிறநண்ணிப்
பாவை பாகர் தமைப்பணிந்து
பாடும் விருப்பிற் சென்றணைவார்.
32

மாலும் அயனும் உணர்வரியார்
மகிழும் பதிகள் பலவணங்கி
ஞால நிகழ்கோட் புலியார்தம்
நாட்டி யத்தான் குடிநண்ண
ஏலும் வகையால் அலங்கரித்தங்
கவரு மெதிர்கொண் டினிதிறைஞ்சிக்
கோல மணிமா ளிகையின்கண்
ஆர்வம் பெருகக் கொடுபுக்கார்.
33

தூய மணிப்பொன் தவிசிலெழுந்
தருளி யிருக்கத் தூநீரால்
சேய மலர்ச்சே வடிவிளக்கித்
தெளித்துக் கொண்டச் செழும்புனலால்
மேய சுடர்மா ளிகையெங்கும்
விளங்க வீசி யுளங்களிப்ப
ஏய சிறப்பில் அர்ச்சனைகள்
எல்லாம் இயல்பின் முறைபுரிவார்.
34

பூந்தண் பனிநீர் கொடுசமைத்த
பொருவில் விரைச்சந் தனக்கலவை
வாய்ந்த அகிலி னறுஞ்சாந்து
வாச நிறைமான் மதச்சேறு
தோய்ந்த புகைநா வியின்நறுநெய்
தூய பசுங்கர்ப் பூரமுதல்
ஏய்ந்த அடைக்கா யமுதினைய
எண்ணில் மணிப்பா சனத்தேந்தி.
35
Go to top

வேறு வேறு திருப்பள்ளித்
தாமப் பணிகள் மிகவெடுத்து
மாறி லாத மணித்திருவா
பரண வருக்கம் பலதாங்கி
ஈறில் விதத்துப் பரிவட்டம்
ஊழி னிரைத்தே யெதிரிறைஞ்சி
ஆறு புனைந்தா ரடித்தொண்டர்
அளவில் பூசை கொளவளித்தார்.
36

செங்கோல் அரசன் அருளுரிமைச்
சேனா பதியாங் கோட்புலியார்
நங்கோ மானை நாவலூர்
நகரார் வேந்தை நண்பினால்
தங்கோ மனையில் திருவமுது
செய்வித் திறைஞ்சித் தலைசிறந்த
பொங்கோ தம்போற் பெருங்காதல்
புரிந்தார் பின்னும் போற்றுவார்.
37

ஆனா விருப்பின் மற்றவர்தாம்
அருமை யால்முன் பெற்றெடுத்த
தேனார் கோதைச் சிங்கடியார்
தமையும் அவர்பின் கருவுயிர்த்த
மானார் நோக்கின் வனப்பகையார்
தமையும் கொணர்ந்து வன்றொண்டர்
தூநாண் மலர்த்தாள் பணிவித்துத்
தாமுந் தொழுது சொல்லுவார்.
38

அடியேன் பெற்ற மக்களிவர்
அடிமை யாகக் கொண்டருளிக்
கடிசேர் மலர்த்தாள் தொழுதுய்யக்
கருணை யளிக்க வேண்டுமெனக்
தொடிசேர் தளிர்க்கை இவரெனக்குத்
தூய மக்க ளெனக்கொண்டப்
படியே மகண்மை யாக்கொண்டார்
பரவை யார்தங் கொழுநனார்.
39

கோதை சூழ்ந்த குழலாரைக்
குறங்கின் வைத்துக் கொண்டிருந்து
காதல் நிறைந்த புதல்வியராம்
கருத்துட் கசிவால் அணைத்துச்சி
மீது கண்ணீர் விழமோந்து
வேண்டு வனவுங் கொடுத்தருளி
நாதர் கோயில் சென்றடைந்தார்
நம்பிதம்பி ரான்தோழர்.
40
Go to top

வென்றி வெள்ளே றுயர்த்தருளும்
விமலர் திருக்கோ புரம்இறைஞ்சி
ஒன்றும் உள்ளத் தொடும்அன்பால்
உச்சி குவித்த கரத்தோடும்
சென்று புக்குப் பணிந்துதிருப்
பதிகம் பூணா னென்றெடுத்துக்
கொன்றை முடியா ரருளுரிமை
சிறப்பித் தார்கோட் புலியாரை.
41

சிறப்பித் தருளுந் திருக்கடைக்காப்
பதனி னிடைச்சிங் கடியாரைப்
பிறப்பித்தெடுத்த பிதாவாகத்
தம்மை நினைந்த பெற்றியினால்
மறப்பில் வகைச்சிங் கடியப்ப
னென்றே தம்மை வைத்தருளி
நிறப்பொற் புடைய இசைபாடி
நிறைந்த அருள்பெற் றிறைஞ்சுவார்.
42

அங்கு நின்றும் எழுந்தருளி
அளவி லன்பில் உள்மகிழச்
செங்க ணுதலார் மேவுதிரு
வலிவ லத்தைச் சேர்ந்திறைஞ்சி
மங்கை பாகர் தமைப்பதிகம்
வலிவ லத்துக் கண்டேனென்
றெங்கும் நிகழ்ந்த தமிழ்மாலை
எடுத்துத் தொடுத்த விசைபுனைவார்.
43

நன்று மகிழுஞ் சம்பந்தர்
நாவுக் கரசர் பாட்டுகந்தீர்
என்று சிறப்பித் திறைஞ்சிமகிழ்ந்
தேத்தி யருள்பெற் றெழுந்தருளி
மன்றி னிடையே நடம்புரிவார்
மருவு பெருமைத் திருவாரூர்
சென்று குறுகிப் பூங்கோயிற்
பெருமான் செம்பொற் கழல்பணிந்து.
44

இறைஞ்சிப் போந்து பரவையார்
திருமா ளிகையில் எழுந்தருளி
நிறைந்த விருப்பின் மேவுநாள்
நீடு செல்வத் திருவாரூர்ப்
புறம்பு நணிய கோயில்களும்
பணிந்து போற்றிப் புற்றிடமாய்
உறைந்த பெருமான் கழல்பிரியா
தோவா இன்பம் உற்றிருந்தார்.
45
Go to top

செறிபுன் சடையார் திருவாரூர்த்
திருப்பங் குனிஉத் திரத்திருநாள்
குறுக வரலும் பரவையார்
கொடைக்கு விழாவிற் குறைவறுக்க
நிறையும் பொன்கொண் டணைவதற்கு
நினைந்து நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணியவெழுந்
தருளிச் சென்றங் கெய்தினார்.
46

சென்று விரும்பித் திருப்புகலூர்த்
தேவர் பெருமான் கோயில்மணி
முன்றில் பணிந்து வலங்கொண்டு
முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சித்
தொன்று மரபி னடித்தொண்டு
தோய்ந்த வன்பிற் றுதித்தெழுந்து
நின்று பதிக விசைபாடி
நினைந்த கருத்து நிகழ்விப்பார்.
47

சிறிது பொழுது கும்பிட்டுச்
சிந்தை முன்னம் அங்கொழிய
வறிது புறம்போந் தருளியயல்
மடத்தி லணையார் வன்றொண்டர்
அறிவு கூர்ந்த வன்பருடன்
அணிமுன் றிலினோ ரருகிருப்ப
மறிவண் கையா ரருளேயோ
மலர்க்கண் துயில்வந் தெய்தியதால்.
48

துயில்வந் தெய்தத் தம்பிரான்
றோழ ரங்குத் திருப்பணிக்குப்
பயிலும் சுடுமட் பலகைபல
கொணர்வித் துயரம் பண்ணித்தேன்
அயிலும் சுரும்பார் மலர்ச்சிகழி
முடிமேல் அணையா உத்தரிய
வெயிலுந் தியவெண் பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்.
49

சுற்று மிருந்த தொண்டர்களுந்
துயிலு மளவில் துணைமலர்க்கண்
பற்றுந் துயில்நீங் கிடப்பள்ளி
யுணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையா ரருளாலே
வேமண் கல்லே விரிசுடர்ச்செம்
பொன்திண் கல்லா யினகண்டு
புகலூ ரிறைவ ரருள்போற்றி.
50
Go to top

தொண்ட ருணர மகிழ்ந்தெழுந்து
துணைக்கைக் கமல முகைதலைமேல்
கொண்டு கோயி லுட்புக்குக்
குறிப்பி லடங்காப் பேரன்பு
மண்டு காத லுறவணங்கி
வாய்த்த மதுர மொழிமாலை
பண்தங் கிசையில் தம்மையே
புகழ்ந்தென் றெடுத்துப் பாடினார்.
51

பதிகம் பாடித் திருக்கடைக்காப்
பணிந்து பரவிப் புறம்போந்தே
எதிரி லின்பம் இம்மையே
தருவா ரருள்பெற் றெழுந்தருளி
நிதியின் குவையும் உடன்கொண்டு
நிறையும் நதியுங் குறைமதியும்
பொதியுஞ் சடையார் திருப்பனையூர்
புகுவார் புரிநூல் மணிமார்பர்.
52

செய்ய சடையார் திருப்பனையூர்ப்
புறத்துத் திருக்கூத் தொடுங்காட்சி
எய்த அருள எதிர்சென்றங்
கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி
ஐயர் தம்மை அரங்காட
வல்லார் அவரே யழகியரென்
றுய்ய வுலகு பெறும்பதிகம்
பாடி யருள்பெற் றுடன்போந்தார்.
53

வளமல் கியசீர்த் திருப்பனையூர்
வாழ்வா ரேத்த எழுந்தருளி
அளவில் செம்பொன் இட்டிகை
களால்மேல் நெருங்கி யணியாரூர்த்
தளவ முறுவற் பரவையார்
தம்மா ளிகையிற் புகத்தாமும்
உளமன் னியதம் பெருமானார்
தம்மை வணங்கி உவந்தணைந்தார்.
54

வந்து பரவைப் பிராட்டியார்
மகிழ வைகி மருவுநாள்
அந்த ணாரூர் மருங்கணிய
கோயில் பலவும் அணைந்திறைஞ்சிச்
சிந்தை மகிழ விருப்பினொடும்
தெய்வப் பெருமாள் திருவாரூர்
முந்தி வணங்கி யினிதிருந்தார்
முனைப்பா டியர்தங் காவலனார்.
55
Go to top

பலநாள் அமர்வார் பரமர்திரு
வருளால் அங்கு நின்றும்போய்ச்
சிலைமா மேரு வீரனார்
திருநன் னிலத்துச் சென்றெய்தி
வலமா வந்து கோயிலினுள்
வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலமார் கின்ற தண்ணியல்வெம்
மையினான் என்னுந் தமிழ்மாலை.
56

பாடி யங்கு வைகியபின்
பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையான் மேம்பட்ட
அந்த ணாளர் நிறைந்தீண்டி
நாடு மகிழ அவ்வளவும்
நடைக்கா வணம்பா வாடையுடன்
மாடு கதலி பூகநிரை
மல்க மணித்தோ ரணநிரைத்து.
57

வந்து நம்பி தம்மைஎதிர்
கொண்டு புக்கார் மற்றவருஞ்
சிந்தை மலர்ந்து திருவீழி
மிழலை யிறைஞ்சிச் சேண்விசும்பின்
முந்தை யிழிந்த மொய்யொளிசேர்
கோயில் தன்னை முன்வணங்கிப்
பந்த மறுக்குந் தம்பெருமான்
பாதம் பரவிப் பணிகின்றார்.
58

படங்கொள் அரவில் துயில்வோனும்
பதுமத் தோனும் பரவரிய
விடங்கன் விண்ணோர் பெருமானை
விரவும் புளக முடன்பரவி
அடங்கல் வீழி கொண்டிருந்தீர்
அடியேனுக்கும் அருளுமெனத்
தடங்கொள் செஞ்சொல் தமிழ்மாலை
சாத்தி யங்குச் சாருநாள்.
59

வாசி யறிந்து காசளிக்க
வல்ல மிழலை வாணர்பால்
தேசு மிக்க திருவருள்முன்
பெற்றுத் திருவாஞ் சியத்தடிகள்
பாச மறுத்தாட் கொள்ளுந்தாள்
பணிந்து பொருவ னார்என்னும்
மாசில் பதிகம் பாடியமர்ந்
தரிசிற் கரைப்புத் தூரணைந்தார்.
60
Go to top

செழுநீர் நறையூர் நிலவுதிருச்
சித்தீச் சரமும் பணிந்தேத்தி
விழுநீர் மையினிற் பெருந்தொண்டர்
விருப்பி னோடும் எதிர்கொள்ள
மழுவோ டிளமான் கரதலத்தில்
உடையார் திருப்புத் தூர்வணங்கித்
தொழுநீர் மையினில் துதித்தேத்தித்
தொண்டர் சூழ வுறையுநாள்.
61

புனித னார்முன் புகழ்த்துணையார்க்கு
அருளுந் திறமும் போற்றிசைத்து
முனிவர் போற்ற எழுந்தருளி
மூரி வெள்ளக் கங்கையினில்
பனிவெண் திங்கள் அணிசடையார்
62

விளங்குந் திருவா வடுதுறையில்
மேயார் கோயில் புடைவலங்கொண்டு
உளங்கொண் டுருகு மன்பினுடன்
உள்புக் கிறைஞ்சி யேத்துவார்
வளங்கொள் பதிக மறையவன்என்று
எடுத்து வளவன் செங்கணான்
தளங்கொள் பிறப்புஞ் சிறப்பித்துத்
தமிழ்ச்சொல் மாலை சாத்தினார்.
63

சாத்தி யங்கு வைகுநாள்
தயங்கு மன்ப ருடன்கூடப்
பேர்த்து மிறைஞ்சி யருள்பெற்றுப்
பெண்ணோர் பாகத் தண்ணலார்
தீர்த்தப் பொன்னித் தென்கரைமேல்
திகழும் பதிகள் பலபணிந்து
மூர்த்தி யார்தம் இடைமருதை
யடைந்தார் முனைப்பா டித்தலைவர்.
64

மன்னும் மருதி னமர்ந்தவரை
வணங்கி மதுரச் சொல்மலர்கள்
பன்னிப் புனைந்து பணிந்தேத்திப்
பரவிப் போந்து தொண்டருடன்
அந்நற் பதியி லிருந்தகல்வார்
அரனார் திருநா கேச்சுரத்தை
முன்னிப் புக்கு வலங்கொண்டு
முதல்வர் திருத்தாள் வணங்கினார்.
65
Go to top

பெருகும் பதிகம் பிறையணிவாள்
நுதலாள் பாடிப் பெயர்ந்துநிறை
திருவின் மலியுஞ் சிவபுரத்துத்
தேவர் பெருமான் கழல்வணங்கி
உருகுஞ் சிந்தை யுடன்போந்தே
யுமையோர் பாகர் தாமகிழ்ந்து
மருவும் பதிகள் பிறபணிந்து
கலைய நல்லூர் மருங்கணைந் தார்
66

செம்மை மறையோர் திருக்கலைய
நல்லூ ரிறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெறவிறைஞ்சி
முன்பு பரவித் தொழுதெழுவார்
கொம்மை மருவு குரும்பைமுலை
யுமையாள் என்னுந் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவுமிகச்
சிறப்பித் திசையின் விளம்பினார்.
67

அங்கு நின்று திருக்குடமூக்
கணைந்து பணிந்து பாடிப்போய்
68

நல்லூர் இறைவர் கழல்போற்றி
நவின்று நடுவு நம்பர்பதி
எல்லா மிறைஞ்சி ஏத்திப்போய்
இசையாற் பரவுந் தம்முடைய
சொல்லூ தியமா வணிந்தவர்தஞ்
சோற்றுத் துறையின் மருங்கெய்தி
அல்லூர் கண்டர் கோயிலினுள்
அடைந்து வலங்கொண் டடிபணிவார்.
69

அழனீ ரொழுகி யனையவெனும்
அஞ்சொற் பதிக மெடுத்தருளிக்
கழனீ டியவன் பினிற்போற்றுங்
காதல் கூரப் பரவியபின்
கெழுநீர் மையினி லருள்பெற்றுப்
போந்து பரவை யார்கேள்வர்
முழுநீ றணிவா ரமர்ந்தபதி
பலவும் பணிந்து முன்னுவார்.
70
Go to top

தேவர் பெருமான் கண்டியூர்
பணிந்து திருவை யாறதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி
விமலர் பாதந் தொழுதிறைஞ்சிச்
சேவில் வருவார் திருவாலம்
பொழிலிற் சேர்ந்து தாழ்ந்திரவு
பாவு சயனத் தமர்ந்தருளிப்
பள்ளி கொள்ளக் கனவின்கண்.
71

மழபா டியினில் வருவதற்கு
நினைக்க மறந்தா யோவென்று
குழகா கியதம் கோலமெதிர்
காட்டி யருளக் குறித்துணர்ந்து
நிழலார் சோலைக் கரைப்பொன்னி
வடபா லேறி நெடுமாடம்
அழகார் வீதி மழபாடி
யணைந்தார் நம்பி யாரூரர்.
72

அணைந்து திருக்கோ புரமிறைஞ்சி
அன்பர் சூழ வுடன்புகுந்து
பணங்கொ ளரவ மணிந்தார்முன்
பணிந்து வீழ்ந்து பரங்கருணைக்
குணங்கொ ளருளின் திறம்போற்றிக்
கொண்ட புளகத் துடனுருகிப்
புணர்ந்த விசையாற் றிருப்பதிகம்
பொன்னார் மேனி என்றெடுத்து.
73

அன்னே யுன்னை யல்லால்யான்
ஆரை நினைக்கேன் எனவேத்தித்
தன்னே ரில்லாப் பதிகமலர்
சாத்தித் தொழுது புறம்பணைந்து
மன்னும் பதியில் சிலநாள்கள்
வைகித் தொண்ட ருடன்மகிழ்ந்து
பொன்னிக் கரையி னிருமருங்கும்
பணிந்து மேல்பாற் போதுவார்.
74

செய்ய சடையார் திருவானைக்
காவி லணைந்து திருத்தொண்டர்
எய்த முன்வந் தெதிர்கொள்ள
இறைஞ்சிக் கோயி லுள்புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக்கீழ்
ஆர்வம் பெருக வீழ்ந்தெழுந்து
மெய்யு முகிழ்ப்பக் கண்பொழிநீர்
வெள்ளம் பரப்ப விம்முவார்.
75
Go to top

மறைக ளாய நான்கும்என
மலர்ந்த செஞ்சொல் தமிழ்ப்பதிகம்
நிறையுங் காத லுடனெடுத்து
நிலவு மன்பர் தமைநோக்கி
இறையும் பணிவா ரெம்மையுமா
ளுடையா ரென்றென் றேத்துவார்
உறையூர்ச் சோழன் மணியாரஞ்
சாத்துந் திறத்தை யுணர்ந்தருளி.
76

வளவர் பெருமான் மணியாரம்
சாத்திக் கொண்டு வரும்பொன்னிக்
கிளருந் திரைநீர் மூழ்குதலும்
வழுவிப் போகக் கேதமுற
அளவில் திருமஞ் சனக்குடத்துள்
அதுபுக் காட்ட அணிந்தருளித்
தளரு மவனுக் கருள்புரிந்த
தன்மை சிறக்கச் சாற்றினார்.
77

சாற்றி யங்குத் தங்குநாள்
தயங்கும் பவளத் திருமேனி
நீற்றர் கோயில் எம்மருங்கும்
சென்று தாழ்ந்து நிறைவிருப்பால்
போற்றி யங்கு நின்றும்போய்ப்
பொருவி லன்பர் மருவியதொண்டு
ஆற்றும் பெருமைத் திருப்பாச்சில் ஆச்சி ராமம் சென்றடைந்தார்.
78

சென்று திருக்கோ புரம்இறைஞ்சித்
தேவர் மலிந்த திருந்துமணி
முன்றில் வலங்கொண்டு உள்ளணைந்து
முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சி
நன்று பெருகும் பொருட்காதல்
நயப்புப் பெருக நாதரெதிர்
நின்று பரவி நினைந்தபொருள்
அருளா தொழிய நேர்நின்று.
79

அன்பு நீங்கா அச்சமுட னடுத்த
திருத்தோழமைப் பணியாற்
பொன்பெ றாத திருவுள்ளம்
புழுங்க அழுங்கிப் புறம்பொருபால்
முன்பு நின்ற திருத்தொண்டர்
முகப்பே முறைப்பா டுடையார்போல்
என்பு கரைந்து பிரானார்மற்
றிலையோ யென்ன வெடுக்கின்றார்.
80
Go to top

நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி
நிலத்திடைப் புலங்கெழும் பிறப்பால்
உய்த்தகா ரணத்தை யுணர்ந்துநொந் தடிமை
யொருமையா மெழுமையு முணர்த்தி
எத்தனை யருளா தொழியினும் பிரானார்
இவரலா தில்லையோ யென்பார்
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும்
எனவழுத் தினார்வழித் தொண்டர்.
81

இவ்வகை பரவித் திருக்கடைக் காப்பும்
ஏசின வல்லஎன் றிசைப்ப
மெய்வகை விரும்பு தம்பெரு மானார்
விழுநிதிக் குவையளித் தருள
மைவளர் கண்டர் கருணையே பரவி
வணங்கியப் பதியிடை வைகி
எவ்வகை மருங்கு மிறைவர்தம் பதிகள்
இறைஞ்சியங் கிருந்தனர் சில நாள்.
82

அப்பதி நீங்கி யருளினாற் போகி
ஆவின்அஞ் சாடுவார் நீடும்
எப்பெயர்ப் பதியு மிருமருங் கிறைஞ்சி
இறைவர்பைஞ் ஞீலியை யெய்திப்
பைப்பணி யணிவார் கோபுர மிறைஞ்சிப்
பாங்கமர் புடைவலங் கொண்டு
துப்புறழ் வேணி யார்கழல் தொழுவார்
தோன்றுகங் காளரைக் கண்டார்.
83

கண்டவர் கண்கள் காதல்நீர் வெள்ளம்
பொழிதரக் கைகுவித் திறைஞ்சி
வண்டறை குழலார் மனங்கவர் பலிக்கு
வருந்திரு வடிவுகண் டவர்கள்
கொண்டதோர் மயலால் வினவுகூற் றாகக்
குலவுசொற் காருலா வியவென்று
அண்டர்நா யகரைப் பரவிஆ ரணிய
விடங்கராம் அருந்தமிழ் புனைந்தார்.
84

பரவியப் பதிகத் திருக்கடைக் காப்புச்
சாத்திமுன் பணிந்தருள் பெற்றுக்
கரவிலன் பர்கள்தங் கூட்டமுந் தொழுது
கலந்தினி திருந்துபோந் தருளி
விரவிய ஈங்கோய் மலைமுத லாக
விமலர்தம் பதிபல வணங்கிக்
குரவலர் சோலை யணிதிருப் பாண்டிக்
கொடுமுடி யணைந்தனர் கொங்கில்.
85
Go to top

கொங்கினிற் பொன்னித் தென்கரைக் கறையூர்க்
கொடுமுடிக் கோயில் முன்குறுகிச்
சங்கவெண் குழையா ருழைவலஞ் செய்து
சார்ந்தடி யிணையினில் தாழ்ந்து
பொங்கிய வேட்கை பெருகிடத்தொழுது
புனிதர்பொன் மேனியை நோக்கி
இங்கிவர் தம்மை மறக்கவொண் ணாதென்
றெழுந்தமெய்க் குறிப்பினி லெடுப்ப.
86

அண்ணலா ரடிகள் மறக்கினுநாம
அஞ்செழுத் தறியவெப் பொழுதும்
எண்ணிய நாவே யின்சுவை பெருக
இடையறா தியம்புமென் றிதனைத்
திண்ணிய வுணர்விற் கொள்பவர் மற்றுப்
பற்றிலேன் எனச்செழுந் தமிழால்
நண்ணிய அன்பிற் பிணிப்புற நவின்றார்
நமச்சிவா யத்திருப் பதிகம்.
87

உலகெ லாம்உய்ய உறுதியாம் பதிகம்
உரைத்துமெய் யுணர்வறா வொருமை
நிலவிய சிந்தை யுடன்திரு வருளால்
நீங்குவார் பாங்குநற் பதிகள்
பலவுமுன் பணிந்து பரமர்தாள் போற்றிப்
போந்துதண் பனிமலர்ப் படப்பைக்
குலவுமக் கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர்
குறுகினார் முறுகுமா தரவால்.
88

அத்திருப் பதியை யணைந்துமுன் தம்மை
யாண்டவர் கோயிலுள் புகுந்து
மெய்த்தவர் சூழ வலங்கொண்டு திருமுன்
மேவுவார் தம்மெதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்றுள்நின் றாடல்
நீடிய கோலம்நேர் காட்டக்
கைத்தலங் குவித்துக் கண்களா னந்தக்
கலுழிநீர் பொழிதரக் கண்டார்.
89

காண்டலும் தொழுது வீழ்ந்துஉட னெழுந்து
கரையிலன் பென்பினை யுருக்கப்
பூண்டஐம் புலனிற் புலப்படா இன்பம்
புணர்ந்துமெய் யுணர்வினிற் பொங்கத்
தாண்டவம் புரியுந் தம்பிரா னாரைத்
தலைப்படக் கிடைத்தபின் சைவ
ஆண்டகை யாருக் கடுத்தஅந் நிலைமை
விளைவையார் அளவறிந் துரைப்பார்.
90
Go to top

அந்நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற
அன்பனார் இன்பவெள் ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்துடன் பரவி
வளம்பதி யதனிடை மருவிப்
பொன்மணி மன்றுள் எடுத்தசே வடியார்
புரிநடங் கும்பிடப் பெற்றால்
என்னினிப் புறம்போய் எய்துவ தென்று
மீண்டெழுந் தருளுதற் கெழுவார்.
91

ஆயிடை நீங்கி அருளினால் செல்வார்
அருவரைச் சுரங்களும் பிறவும்
பாயுநீர் நதியும் பலபல கடந்து
பரமர்தம் பதிபல பணிந்து
மேயவண் தமிழால் விருப்பொடும் பரவி
வெஞ்சமாக் கூடலும் பணிந்து
சேயிடை கழியப் போந்துவந் தடைந்தார்
தென்திசைக் கற்குடி மலையில்.
92

வீடு தரும்இக் கற்குடியில்
விழுமி யாரைப் பணிந்திறைஞ்சி
நீடு விருப்பில் திருப்பதிகம்
நிறைந்த சிந்தை யுடன்பாடிப்
பாடும் விருப்பில் தொண்டருடன்
பதிகள் பலவும் அணைந்திறைஞ்சித்
தேடு மிருவர் காண்பரியார்
திருவா றைமேற் றளிசென்றார்.
93

செம்பொன் மேருச் சிலைவளைத்த
சிவனார் ஆறை மேற்றளியில்
நம்பர் பாதம் பணிந்திறைஞ்சி
நாளு மகிழ்வார்க் கருள்கூட
உம்பர் போற்றுந் தானங்கள்
பலவும் பணிந்து போந்தணைவார்
இம்பர் வாழ இன்னம்பர்
நகரைச் சேர வெய்தினார்.
94

ஏரின் மருவும் இன்னம்பர்
மகிழ்ந்த ஈசர் கழல்வணங்கி
ஆரு மன்பிற் பணிந்தேத்தி
ஆரா அருளால் அங்கமர்வார்
போரின் மலியுங் கரியுரித்தார்
மருவும் புறம்ப யம்போற்றச்
சேரும் உள்ளம் மிக்கெழமெய்ப்
பதிகம் பாடிச் செல்கின்றார்.
95
Go to top

அங்க மோதியோ ராறை மேற்றளி
யென்றெ டுத்தமர் காதலில்
பொங்கு செந்தமி ழால்வி ரும்பு
புறம்ப யந்தொழப் போதும்என்
றெங்கும் மன்னிய இன்னி சைப்பதி
கம்பு னைந்துட னெய்தினார்
திங்கள் சூடிய செல்வர் மேவு
திருப்பு றம்பயஞ் சேரவே.
96

அப்ப திக்கண் அமர்ந்த தொண்டரும்
அன்று வெண்ணெய்நல் லூரினில்
ஒப்ப ருந்தனி வேதி யன்பழ
வோலை காட்டிநின் றாண்டவர்
இப்ப திக்கண்வந் தெய்த என்ன
தவங்கள் என்றெதிர் கொள்ளவே
முப்பு ரங்கள் எரித்த சேவகர்
கோயில் வாயிலில் முன்னினார்.
97

நீடு கோபுர முன்பி றைஞ்சி
நிலாவு தொண்டரொ டுள்ளணைந்து
ஆடன் மேவிய வண்ண லாரடி
போற்றி யஞ்சலி கோலிநின்று
ஏடு லாமலர் தூவி எட்டினொ
டைந்து மாகும் உறுப்பினாற்
பீடு நீடு நிலத்தின் மேற்பெரு
கப்ப ணிந்து வணங்கினார்.
98

அங்கு நீடருள் பெற்றுஉள் ஆர்வம்
மிகப்பொ ழிந்தெழு மன்பினால்
பொங்கு நாண்மலர்ப் பாத முன்பணிந்
தேத்தி மீண்டு புறத்தணைந்
தெங்கு மாகி நிறைந்து நின்றவர்
தாம கிழ்ந்த விடங்களில்
தங்கு கோல மிறைஞ்சு வாரருள்
தாவி லன்பரோ டெய்தினார்.
99

வம்புநீ டலங்கல் மார்பின்
வன்றொண்டர் வன்னி கொன்றை
தும்பைவெள் ளடம்பு திங்க
டூயநீ ரணிந்த சென்னித்
தம்பிரா னமர்ந்த தானம்
பலபல சார்ந்து தாழ்ந்து
கொம்பனா ராடல் நீடு
கூடலை யாற்றூர் சார.
100
Go to top

செப்பரும் பதியிற் சேரார்
திருமுது குன்றை நோக்கி
ஒப்பரும் புகழார் செல்லும்
ஒருவழி யுமையா ளோடும்
மெய்ப்பரம் பொருளா யுள்ளார்
வேதிய ராகி நின்றார்
முப்புரி நூலுந் தாங்கி
நம்பியா ரூரர் முன்பு.
101

நின்றவர் தம்மை நோக்கி
நெகிழ்ந்தசிந் தையராய்த் தாழ்வார்
இன்றியாம் முதுகுன் றெய்த
வழியெமக் கியம்பும் என்னக்
குன்றவில் லாளி யாரும்
கூடலை யாற்றூர் ஏறச்
சென்றதிவ் வழிதானென்று
செல்வழித் துணையாய்ச் செல்ல.
102

கண்டவர் கைகள் கூப்பித்
தொழுதுபின் தொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றை யாரை
வடிவுடை மழுவென் றேத்தி
அண்டர்தம் பெருமான் போந்த
அதிசயம் அறியே னென்று
கொண்டெழு விருப்பி னோடும்
கூடலை யாற்றூர் புக்கார்.
103

கூடலை யாற்றூர் மேவும்
கொன்றைவார் சடையி னார்தம்
பீடுயர் கோயில் புக்குப்
பெருகிய ஆர்வம் பொங்க
ஆடகப் பொதுவி லாடும்
அறைகழல் வணங்கிப் போற்றி
நீடருள் பெற்றுப் போந்து
திருமுது குன்றி னேர்ந்தார்.
104

தடநிலைக் கோபு ரத்தைத்
தாழ்ந்துமுன் னிறைஞ்சிக் கோயில்
புடைவலங் கொண்டு புக்குப்
போற்றினர் தொழுது வீழ்ந்து
நடநவில் வாரை நஞ்சி
யிடை எனுஞ் செஞ்சொன் மாலைத்
தொடைநிகழ் பதிகம் பாடித்
தொழுதுகை சுமந்து நின்று.
105
Go to top

நாதர்பாற் பொருள் தாம் வேண்டி
நண்ணிய வண்ண மெல்லாம்
கோதறு மனத்துட் கொண்ட
குறிப்பொடும் பரவும் போது
தாதவிழ் கொன்றை வேய்ந்தார்
தரஅருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும்
மெய்யில்வெண் பொடியும் பாட.
106

பனிமதிச் சடையார் தாமும்
பன்னிரண் டாயி ரம்பொன்
நனியருள் கொடுக்கு மாற்றால்
நல்கிட உடைய நம்பி
தனிவரு மகிழ்ச்சி பொங்கத்
தாழ்ந்தெழுந் தருகு சென்று
கனிவிட மிடற்றி னார்முன்
பின்னொன்று கழற லுற்றார்.
107

அருளும்இக் கனக மெல்லாம்
அடியனேற் காரூ ருள்ளோர்
மருளுற வியப்ப அங்கே
வரப்பெற வேண்டு மென்னத்
தெருளுற வெழுந்த வாக்கால்
செழுமணி முத்தாற் றிட்டிப்
பொருளினை முழுதும் ஆரூர்க்
குளத்திற்போய்க் கொள்க வென்றார்.
108

என்றுதம் பிரானார் நல்கும்
இன்னருள் பெற்ற பின்னர்
வன்றொண்டர் மச்சம் வெட்டிக்
கைக்கொண்டு மணிமுத் தாற்றில்
பொன்றிரள் எடுத்து நீருள்
புகவிட்டுப் போது கின்றார்
அன்றெனை வலிந்தாட் கொண்ட
அருளிதில் அறிவே னென்று.
109

மேவிய காதல் தொண்டு
விரவுமெய் விருத்தி பெற்றார்
ஆவியின் விருத்தி யான
அந்தணர் புலியூர் மன்றில்
காவியங் கண்டர் கூத்துக்
கண்டுகும் பிடுவன் என்று
வாவிசூழ் தில்லை மூதூர்
வழிக்கொள்வான் வணங்கிப் போந்தார்.
110
Go to top

மாடுள பதிகள் சென்று
வணங்கிப்போய் மங்கை பாகர்
நீடிய கடம்பூர் போற்றி
நிறைந்தஆ னந்தக் கூத்தர்
ஆடிய தில்லை மூதூர்
அணைந்தணி வாயில் புக்குச்
சேடுயர் மாட மன்னுஞ்
செழுந்திரு வீதி சார்ந்தார்.
111

பொற்றிரு வீதி தாழ்ந்து
புண்ணிய விளைவாய் ஓங்கும்
நற்றிரு வாயில் நண்ணி
நறைமலி யலங்கல் மார்பர்
மற்றதன் முன்பு மண்மேல்
வணங்கியுட் புகுந்து பைம்பொன்
சுற்றுமா ளிசைழ் வந்து
தொழுதுகை தலைமேற் கொள்வார்.
112

ஆடிய திருமுன் பான
அம்பொனின் கோபு ரத்தின்
ஊடுபுக் கிறைஞ்சி ஓங்கும்
ஒளிவளர் கனக மன்றில்
நாடகச் செய்ய தாளை
நண்ணுற வுண்ணி றைந்து
நீடும்ஆ னந்த வெள்ளக்
கண்கள்நீர் நிரந்து பாய.
113

பரவுவாய் குளறிக் காதல்
படிதிருப் படியைத் தாழ்ந்து
விரவுமெய் அங்கம் ஐந்தும்
எட்டினும் வணங்கி வேட்கை
உரனுறு திருக்கூத் துள்ளம்
ஆர்தரப் பெருகி நெஞ்சில்
கரவிலா தவரைக் கண்ட
நிறைவுதங் கருத்திற் கொள்ள.
114

மடித்தாடும் அடிமைக்கண் என்றெடுத்து
மன்னுயிர்கட் கருளு மாற்றால்
அடுத்தாற்று நன்னெறிக்கண் நின்றார்கள்
வழுவிநர கணையா வண்ணம்
தடுப்பானைப் பேரூரிற் கண்டநிலை
சிறப்பித்துத் தனிக்கூத் தென்றும்
நடிப்பானை நாம்மனமே பெற்றவா
றெனுங்களிப்பால் நயந்து பாடி.
115
Go to top

மீளாத அருள்பெற்றுப் புறம்போந்து
திருவீதி மேவித் தாழ்ந்தே
ஆளான வன்றொண்டர் அந்தணர்கள்
தாம்போற்ற அமர்ந்து வைகி
மாளாத பேரன்பால் பொற்பதியை
வணங்கிப்போய் மறலி வீழத்
தாளாண்மை கொண்டவர்தங் கருப்பறிய
லூர்வணங்கிச் சென்று சார்ந்தார்.
116

கூற்றுதைத்தார் திருக்கொகுடிக் கோயில் நண்ணிக்
கோபுரத்தைத் தொழுதுபுகுந் தன்பர் சூழ
ஏற்றபெருங் காதலினால் இறைஞ்சி யேத்தி
எல்லையிலாப் பெருமகிழ்ச்சி மனத்தி லெய்தப்
போற்றிசைத்துப் புறத்தணைந்தப் பதியின் வைகிப்
புனிதரவர் தமைநினையு மின்பங் கூறிச்
சாற்றியமெய்த் திருப்பதிகஞ் சிம்மாந் தென்னுந்
தமிழ்மாலை புனைந்தங்குச் சாரு நாளில்.
117

கண்ணுதலார் விரும்புகருப் பறிய லூரைக்
கைதொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்
மண்ணிவளம் படிக்கரையை நண்ணி யங்கு
மாதொருபா கத்தவர்தாள் வணங்கிப் போற்றி
எண்ணில்புகழ்ப் பதிகமுமுன் னவன்என் றேத்தி
யேகுவார் வாழ்கொளிபுத் தூரெய் தாது
புண்ணியனார் போம்பொழுது நினைந்து மீண்டு
புகுகின்றார் தலைக்கலன்என் றெடுத்துப்போற்றி.
118

திருப்பதிகம் பாடியே சென்றங் கெய்தித்
தேவர்பெரு மானார்தங் கோயில் வாயில்
உருப்பொலியும் மயிர்ப்புளகம் விரவத் தாழ்ந்தே
உள்ளணைந்து பணிந்தேத்தி உருகு மன்பால்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லானைப்
போற்றிசைத்துப் புறம்போந்து தங்கிப் பூமென்
கருப்புவயல் வாழ்கொளிபுத் தூரை நீங்கிக்
கானாட்டு முள்ளூரைக் கலந்த போது.
119

கானாட்டு முள்ளூரைச் சாரும் போது
கண்ணுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டு
தூநாள்மென் மலர்க்கொன்றைச் சடையார் செய்ய
துணைப்பாத மலர்கண்டு தொழுதே னென்று
வானாளுந் திருப்பதிகம் வள்வாய் என்னும்
வண்டமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்
தேனாரு மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த
திருவெதிர்கொள் பாடியினை யெய்தச் செல்வார்.
120
Go to top

எத்திசையுந் தொழுதேத்த மத்த யானை
எடுத்தெதிர்கொள் பாடியினை அடைவோம் என்னும்
சித்தநிலைத் திருப்பதிகம் பாடிவந்து
செல்வமிகு செழுங்கோயி லிறைஞ்சி நண்ணி
அத்தர்தமை அடிவணங்கி அங்கு வைகி
அருள்பெற்றுத் திருவேள்விக் குடியி லெய்தி
முத்திதரும் பெருமானைத் துருத்தி கூட
மூப்பதிலை எனும்பதிகம் மொழிந்து வாழ்ந்தார்.
121

காட்டுநல் வேள்விக் கோலங்
கருத்துற வணங்கிக் காதல்
நாட்டிய உள்ளத் தோடு
நம்பிஆ ரூரர் போற்றி
ஈட்டிய தவத்தோர் சூழ
அங்குநின் றேகி அன்பு
பூட்டிஆட் கொண்டார் மன்னுந்
தானங்கள் இறைஞ்சிப் போந்து.
122

எஞ்சாத பேரன்பில்
திருத்தொண்ட ருடனெய்தி
நஞ்சாருங் கறைமிடற்றார்
இடம்பலவு நயந்தேத்தி
மஞ்சாரும் பொழிலுடுத்த
மலர்த்தடங்கள் புடைசூழுஞ்
செஞ்சாலி வயன்மருதத்
திருவாரூர் சென்றடைந்தார்.
123

செல்வமலி திருவாரூர்த்
தேவரொடு முனிவர்களும்
மல்குதிருக் கோபுரத்து
வந்திறைஞ்சி உள்புக்கங்
கெல்லையிலாக் காதன்மிக
எடுத்தமலர்க் கைகுவித்துப்
பல்குபெருந் தொண்டருடன்
பரமர்திரு முன்னணைந்தார்.
124

மூவாத முதலாகி
நடுவாகி முடியாத
சேவாருங் கொடியாரைத்
திருமூலட் டானத்துள்
ஓவாத பெருங்காதல்
உடனிறைஞ்சிப் புறம்போந்து
தாவாத புகழ்ப்பரவை
யார்திருமா ளிகைசார்ந்தார்.
125
Go to top

பொங்குபெரு விருப்பினொடு
புரிகுழலார் பலர்போற்றப்
பங்கயக்கண் செங்கனிவாய்ப்
பரவையார் அடிவணங்கி
எங்களையும் நினைந்தருளிற்
றெனஇயம்ப இனிதளித்து
மங்கைநல்லா ரவரோடும்
மகிழ்ந்துறைந்து வைகுநாள்.
126

நாயனார் முதுகுன்றர்
நமக்களித்த நன்னிதியம்
தூயமணி முத்தாற்றில்
புகவிட்டேம் துணைவரவர்
கோயிலின்மா ளிகைமேல்பால்
குளத்தில்அவ ரருளாலே
போய்எடுத்துக் கொடுபோதப்
போதுவாய் எனப்புகல.
127

என்னஅதி சயம்இதுதான்
என்சொன்ன வாறென்று
மின்னிடையார் சிறுமுறுவ
லுடன்விளம்ப மெய்யுணர்ந்தார்
நன்னுதலாய் என்னுடைய
நாதனரு ளாற்குளத்தில்
பொன்னடைய எடுத்துனக்குத்
தருவதுபொய் யாதென்று.
128

ஆங்கவரும் உடன்போத
வளவிறந்த விருப்பினுடன்
பூங்கோயி லுண்மகிழ்ந்த
புராதனரைப் புக்கிறைஞ்சி
ஓங்குதிரு மாளிகையை
வலம்வந்தங் குடன்மேலைப்
பாங்குதிருக் குளத்தணைந்தார்
பரவையார் தனித்துணைவர்.
129

மற்றதனின் வடகீழ்பால்
கரைமீது வந்தருளி
முற்றிழையார் தமைநிறுத்தி
முனைப்பாடித் திருநாடர்
கற்றைவார் சடையாரைக்
கைதொழுது குளத்தில்இழிந்து
அற்றைநாள் இட்டெடுப்பார்
போல்அங்குத் தடவுதலும்.
130
Go to top

நீற்றழகர் பாட்டுவந்து
திருவிளையாட் டினில்நின்று
மாற்றுறுசெம் பொன்குளத்து
வருவியா தொழிந்தருள
ஆற்றினிலிட் டுக்குளத்தில்
தேடுவீர் அருளிதுவோ
சாற்றுமெனக் கோற்றொடியார்
மொழிந்தருளத் தனித்தொண்டர்.
131

முன்செய்த அருள்வழியே
முருகலர்பூங் குழற்பரவை
தன்செய்ய வாயில்நகை
தாராமே தாருமென
மின்செய்த நூன்மார்பின்
வேதியர்தாம் முதுகுன்றில்
பொன்செய்த மேனியினீர்
எனப்பதிகம் போற்றிசைத்து.
132

முட்டஇமை யோரறிய
முதுகுன்றில் தந்தபொருள்
சட்டநான் பெறாதொழிந்த
தளர்வினால் கையறவாம்
இட்டளத்தை இவளெதிரே
133

ஏத்தாதே இருந்தறியேன்
எனுந்திருப்பாட் டெவ்வுலகும்
காத்தாடும் அம்பலத்துக்
கண்ணுளனாங் கண்ணுதலைக்
கூத்தாதந் தருளாய்இக்
கோமளத்தின் முன்னென்று
நீத்தாருந் தொடர்வரிய
நெறிநின்றார் பரவுதலும்.
134

கொந்தவிழ்பூங் கொன்றைமுடிக்
கூத்தனார் திருவருளால்
வந்தெழுபொன் திரளெடுத்து
வரன்முறையாற் கரையேற்ற
அந்தரத்து மலர்மாரி
பொழிந்திழிந்த தவனியுளோர்
இந்தஅதி சயமென்னே
யார்பெறுவார் எனத்தொழுதார்.
135
Go to top

ஞாலம்வியப் பெய்தவரு
நற்கனகம் இடையெடுத்து
மூலமெனக் கொடுபோந்த
ஆணியின்முன் னுரைப்பிக்க
நீலமிடற் றவரருளால்
உரைதாழப் பின்னும் நெடு
மாலயனுக் கரியகழல்
வழுத்தினார் வன்றொண்டர்.
136

மீட்டுமவர் பரவுதலும்
மெய்யன்ப ரன்பில்வரும்
பாட்டுவந்து கூத்துவந்தார்
படுவாசி முடிவெய்தும்
ஓட்டறுசெம் பொன்னொக்க
ஒருமாவுங் குறையாமல்
காட்டுதலும் மகிழ்ந்தெடுத்துக்
கொண்டுகரை யேறினார்.
137

கரையேறிப் பரவையா
ருடன்கனக மானதெலாம்
நிரையேஆ ளிற்சுமத்தி
நெடுநிலைமா ளிகைபோக்கித்
திரையேறும் புனற்சடிலத்
திருமூலட் டானத்தார்
விரையேறு மலர்ப்பாதந்
தொழுதணைந்தார் வீதியினில்.
138

வந்திரு மாளிகையி
னுட்புகுந்து மங்கலவாழ்த்து
அந்தமிலா வகையேத்து
மளவிறந்தா ரொலிசிறப்பச்
சிந்தைநிறை மகிழ்ச்சியுடன்
சேயிழையா ருடனமர்ந்தார்
கந்தமலி மலர்ச்சோலை
நாவலர்தங் காவலனார்.
139

அணியாரூர் மணிப்புற்றில்
அமர்ந்தருளும் பரம்பொருளைப்
பணிவார்அங் கொருநாளில்
பாராட்டுந் திருப்பதிகம்
தணியாத ஆனந்தம்
தலைசிறப்பத் தொண்டருடன்
துணிவாய பேரருள்வினவித்
தொழுதாடிப் பாடுவார்.
140
Go to top

பண்ணிறையும் வகைபாறு
தாங்கியென வெடுத்தருளி
உண்ணிறையும் மனக்களிப்பால்
உறுபுளகம் மயிர்முகிழ்ப்பக்
கண்ணிறையும் புனல்பொழியக்
கரையிகந்த ஆனந்தம்
எண்ணிறைந்த படிதோன்ற
ஏத்திமதிழ்ந் தின்புற்றார்.
141

இன்புற்றங் கமர்நாளில்
ஈறிலரு மறைபரவும்
வன்புற்றில் அரவணிந்த
மன்னவனா ரருள்பெற்றே
அன்புற்ற காதலுடன்
அளவிறந்த பிறபதியும்
பொன்புற்கென் றிடவொளிருஞ்
சடையாரைத் தொழப்போவார்.
142

பரிசனமும் உடன்போதப்
பாங்கமைந்த பதிகள்தொறும்
கரியுரிவை புனைந்தார்தம்
கழல்தொழுது மகிழ்ந்தேத்தித்
துரிசறுநற் பெருந்தொண்டர்
நள்ளாறு தொழுவதற்குப்
புரிவுறுமெய்த் திருத்தொண்டர்
எதிர்கொள்ளப் புக்கணைந்தார்.
143

விண்தடவு கோபுரத்தைப்
பணிந்துகர மேல்குவித்துக்
கொண்டுபுகுந் தண்ணலார்
கோயிலினை வலஞ்செய்து
மண்டியபே ரன்பினொடு
மன்னுதிரு நள்ளாறர்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப்
பொருந்தநில மிசைப்பணிந்தார்.
144

அங்கணரைப் பணிந்தேத்தி
அருளினால் தொழுதுபோய்
மங்குலணி மணிமாடத்
திருக்கடவூர் வந்தெய்தித்
திங்கள்வளர் முடியார்தந்
திருமயா னமும்பணிந்து
பொங்குமிசைப் பதிகம்மரு
வார்கொன்றை யெனப்போற்றி.
145
Go to top

திருவீரட் டானத்துத்
தேவர்பிரான் சினக்கூற்றின்
பொருவீரந் தொலைத்தகழல்
பணிந்துபொடி யார்மேனி
மருவீரத் தமிழ்மாலை
புனைந்தேத்தி மலைவளைத்த
பெருவீரர் வலம்புரத்துப்
பெருகார்வத் தொடுஞ்சென்றார்.
146

வரையோடு நிகர்புரிசை
வலம்புரத்தார் கழல்வணங்கி
உரையோசைப் பதிகம்எனக்
கினியோதிப் போய்ச்சங்க
நிரையோடு துமித்தூப
மணித்தீப நித்திலப்பூந்
திரையோதங் கொண்டிறைஞ்சுந்
திருச்சாய்க்கா டெய்தினார்.
147

தேவர்பெரு மான்தன்னைத்
திருச்சாய்க்காட் டினிற்பணிந்து
பாவலர்செந் தமிழ்மாலைத்
திருப்பதிகம் பாடிப்போய்
மேவலர்தம் புரமெரித்தார்
வெண்காடு பணிந்தேத்தி
நாவலர்கா வலரடைந்தார்
நனிபள்ளித் திருநகரில்.
148

நனிபள்ளி யமர்ந்தபிரான்
கழல்வணங்கி நற்றமிழின்
புனிதநறுந் தொடைபுனைந்து
திருச்செம்பொன் பள்ளிமுதல்
பனிமதிசேர் சடையார்தம்
பதிபலவும் பணிந்துபோய்த்
தனிவிடைமேல் வருவார்தம்
திருநின்றி யூர்சார்ந்தார்.
149

நின்றியூர் மேயாரை
நேயத்தால் புக்கிறைஞ்சி
ஒன்றியஅன் புள்ளுருகப்
பாடுவார் உடையஅர
சென்றுமுல கிடர்நீங்கப்
பாடியஏ ழெழுநூறும்
அன்றுசிறப் பித்தஞ்சொல்
திருப்பதிகம் அருள்செய்தார்.
150
Go to top

அப்பதியில் அன்பருடன்
அமர்ந்தகல்வார் அகலிடத்தில்
செப்பரிய புகழ்நீடூர்
பணியாது செல்பொழுதில்
ஒப்பரிய வுணர்வினால்
நினைந்தருளித் தொழலுறுவார்
மெய்ப்பொருள்வண் தமிழ்மாலை
விளம்பியே மீண்டணைந்தார்.
151

மடலாரும் புனல்நீடூர்
மருவினர்தாள் வணங்காது
விடலாமே எனுங்காதல்
விருப்புறும்அத் திருப்பதிகம்
அடலார்சூ லப்படையார்
தமைப்பாடி அடிவணங்கி
உடலாரும் மயிர்ப்புளகம்
மிகப்பணிந்தங் குறைகின்றார்.
152

அங்கண்இனி தமர்ந்தருளால்
திருப்புன்கூ ரணைத்திறைஞ்சிக்
கொங்கலரும் மலர்ச்சோலைத்
திருக்கோலக் காஅணையக்
கங்கைசடைக் கரந்தவர்தாம்
எதிர்காட்சி கொடுத்தருளப்
பொங்குவிருப் பால்தொழுது
திருப்பதிகம் போற்றிசைப்பார்.
153

திருஞான சம்பந்தர்
திருக்கைக ளால் ஒற்றிப்
பெருகார்வத் துடன்பாடப்
பிஞ்ஞகனார் கண்டிரங்கி
அருளாலே திருத்தாளம்
அளித்தபடி சிறப்பித்துப்
பொருள்மாலைத் திருப்பதிகம்
பாடியே போற்றிசைத்தார்.
154

மூவாத முழுமுதலார்
முதற்கோலக் காஅகன்று
தாவாத புகழ்ச்சண்பை
வலங்கொண்டு தாழ்ந்திறைஞ்சி
நாவார்முத் தமிழ்விரகர்
நற்பதங்கள் பரவிப்போய்
மேவார்தம் புரஞ்செற்றார்
குருகாவூர் மேவுவார்.
155
Go to top

உண்ணீரின் வேட்கையுடன்
உறுபசியால் மிகவருந்திப்
பண்ணீர்மை மொழிப்பரவை
யார்கொழுநர் வரும்பாங்கர்க்
கண்ணீடு திருநுதலார்
காதலவர் கருத்தறிந்து
தண்ணீரும் பொதிசோறும்
கொண்டுவழிச் சார்கின்றார்.
156

வேனிலுறு வெயில்வெம்மை
தணிப்பதற்கு விரைக்குளிர்மென்
பானல்மலர்த் தடம்போலும்
பந்தரொரு பாலமைத்தே
ஆனமறை வேதியராய்
அருள்வேடங் கொண்டிருந்தார்
மானமருந் திருக்கரத்தார்
வன்தொண்டர் தமைப்பார்த்து.
157

குருகாவூர் அமர்ந்தருளும்
குழகர்வழி பார்த்திருப்பத்
திருவாரூர்த் தம்பிரான்
தோழர்திருத் தொண்டருடன்
வருவார்அப் பந்தரிடைப்
புகுந்துதிரு மறையவர்பால்
பெருகார்வஞ் செலவிருந்தார்
சிவாயநம வெனப்பேசி.
158

ஆலநிழற் கீழிருந்தார்
அவர்தம்மை எதிர்நோக்கிச்
சாலமிகப் பசித்தீர்இப்
பொதிசோறு தருகின்றேன்
காலமினித் தாழாமே
கைக்கொண்டிங் கினிதருந்தி
ஏலநறுங் குளிர்தண்ணீர்
குடித்திளைப்புத் தீரஎன.
159

வன்தொண்டர் அதுகேட்டு
மறைமுனிவர் தரும்பொதிசோறு
இன்றுநமக் கெதிர்விலக்க
லாகாதென் றிசைந்தருளிப்
பொன்றயங்கு நூல்மார்பர்
தரும்பொதிசோ றதுவாங்கிச்
சென்றுதிருத் தொண்டருடன்
திருவமுது செய்தருளி.
160
Go to top

எண்ணிறந்த பரிசனங்கள்
எல்லாரும் இனிதருந்தப்
பண்ணியபின் அம்மருங்கு
பசித்தணைந்தார் களும்அருந்த
உண்ணிறைந்த ஆரமுதாய்
ஒருகாலும் உலவாதே
புண்ணியனார் தாமளித்த
பொதிசோறு பொலிந்ததால்.
161

சங்கரனார் திருவருள்போல்
தண்ணீரின் சுவையார்ந்து
பொங்கிவரும் ஆதரவால்
அவர் நாமம் புகழ்ந்தேத்தி
அங்கயர்வால் பள்ளியமர்ந்
தருகணைந்தார் களுந்துயிலக்
கங்கைசடைக் கரந்தார்அப்
பந்தரொடுந் தாங்கரந்தார்.
162

சித்தநிலை திரியாத
திருநாவ லூர்மன்னர்
அத்தகுதி யினிற்பள்ளி
யுணர்ந்தவரைக் காணாமை
இத்தனையா மாற்றை
அறிந்திலேன் எனவெடுத்து
மெய்த்தகைய திருப்பதிகம்
விளம்பியே சென்றடைந்தார்.
163

குருகாவூர் அமர்ந்தருளும்
குழகனார் கோயிலினுக்
கருகார்பொற் கோபுரத்தை
யணைந்திறைஞ்சி யுள்புக்கு
வருகாதல் கூரவலங்
கொண்டுதிரு முன்வணங்கிப்
பருகாவின் னமுதத்தைக்
கண்களாற் பருகினார்.
164

கண்ணார்ந்த இன்னமுதைக்
கையாரத் தொழுதிறைஞ்சிப்
பண்ணார்ந்த திருப்பதிகம்
பாடியே பணிந்தேத்தி
உள்நாடும் பெருங்காதல்
உடையவர்தாம் புறத்தெய்தி
நண்ணார்வத் தொண்டருடன்
அங்கினிது நயந்திருந்தார்.
165
Go to top

அந்நாளில் தம்பெருமான்
அருள்கூடப் பணிந்தகன்று
மின்னார்செஞ் சடைமுடியார்
விரும்புமிடம் பலவணங்கிக்
கன்னாடும் எயில்புடைசூழ்
கழிப்பாலை தொழுதேத்தித்
தென்னாவ லூர்மன்னர்
திருத்தில்லை வந்தடைந்தார்.
166

சீர்வளருந் திருத்தில்லைத்
திருவீதி பணிந்துபுகுந்
தேர்வளர்பொன் திருமன்றுள்
எடுத்தசே வடியிறைஞ்சிப்
பார்வளர மறைவளர்க்கும்
பதியதனில் பணிந்துறைவார்
போர்வளர்மே ருச்சிலையார்
திருத்தினைமா நகர்புகுந்தார்.
167

திருத்தினைமா நகர்மேவும்
சிவக்கொழுந்தைப் பணிந்துபோய்
நிருத்தனார் அமர்ந்தருளும்
நிறைபதிகள் பலவணங்கிப்
பொருத்தமிகுந் திருத்தொண்டர்
போற்றுதிரு நாவலூர்
கருத்தில்வரு மாதரவால்
கைதொழச்சென் றெய்தினார்.
168

திருநாவ லூர்மன்னர்
சேர்கின்றார் எனக்கேட்டுப்
பெருநாமப் பதியோரும்
தொண்டர்களும் பெருவாழ்வு
வருநாள்என் றலங்கரித்து
வந்தெதிர்கொண் டுள்ளணையச்
செருநாகத் துரிபுனைந்தார்
செழுங்கோயி லுள்ளணைந்தார்.
169

மேவியஅத் தொண்டர்குழாம்
மிடைந்தரவென் றெழுமோசை
மூவுலகும் போயொலிப்ப
முதல்வனார் முன்பெய்தி
ஆவியினு மடைவுடையா
ரடிக்கமலத் தருள்போற்றிக்
கோவலனான் முகனெடுத்துப்
பாடியே கும்பிட்டார்.
170
Go to top

நலம்பெருகும் அப்பதியில்
நாடியஅன் பொடுநயந்து
குலம்பெருகுந் திருத்தொண்டர்
குழாத்தோடு மினிதமர்ந்து
சலம்பெருகுஞ் சடைமுடியார்
தாள்வணங்கி யருள்பெற்றுப்
பொலம்புரிநூல் மணிமார்பர்
பிறபதியுந் தொழப்போவார்.
171

தண்டகமாந் திருநாட்டுத்
தனிவிடையார் மகிழ்விடங்கள்
தொண்டர்எதிர் கொண்டணையத்
தொழுதுபோய்த் தூயநதி
வண்டறைபூம் புறவுமலை
வளமருதம் பலகடந்தே
எண்திசையோர் பரவுதிருக்
கழுக்குன்றை யெய்தினார்.
172

தேனார்ந்த மலர்ச்சோலை
திருக்கழுக்குன் றத்தடியார்
ஆனாத விருப்பினொடு
மெதிர்கொள்ள அடைந்தருளித்
தூநாள்வெண் மதியணிந்த
சுடர்க்கொழுந்தைத் தொழுதிறைஞ்சிப்
பாநாடு மின்னிசையின்
திருப்பதிகம் பாடினார்.
173

பாடியஅப் பதியின்கண்
இனிதமர்ந்து பணிந்துபோய்
நாடியநல் லுணர்வினொடும்
திருக்கச்சூர் தனைநண்ணி
ஆடகமா மதில்புடைசூழ்
ஆலக்கோ யிலின்அமுதைக்
கூடியமெய் யன்புருகக்
கும்பிட்டுப் புறத்தணைந்தார்.
174

அணைந்தருளும் அவ்வேலை
அமுதுசெயும் பொழுதாகக்
கொணர்ந்தமுது சமைத்தளிக்கும்
பரிசனமும் குறுகாமைத்
தணந்தபசி வருத்தத்தால்
தம்பிரான் திருவாயில்
புணர்ந்தமதில் புறத்திருந்தார்
முனைப்பாடிப் புரவலனார்.
175
Go to top

வன்தொண்டர் பசிதீர்க்க
மலையின்மேல் மருந்தானார்
மின்தங்கு வெண்டலையோ
டொழிந்தொருவெற் றோடேந்தி
அன்றங்கு வாழ்வாரோர்
அந்தணராய்ப் புறப்பட்டுச்
சென்றன்பர் முகநோக்கி
அருள்கூரச் செப்புவார்.
176

மெய்ப்பசியால் மிகவருந்தி
இளைத்திருந்தீர் வேட்கைவிட
இப்பொழுதே சோறிரந்திங்
கியானுமக்குக் கொணர்கின்றேன்
அப்புறநீர் அகலாதே
சிறிதுபொழு தமருமெனச்
செப்பியவர் திருக்கச்சூர்
மனைதோறும் சென்றிரப்பார்.
177

வெண்திருநீற் றணிதிகழ
விளங்குநூல் ஒளிதுளங்கக்
கண்டவர்கள் மனமுருகக்
கடும்பகற்போ திடும்பலிக்குப்
புண்டரிகக் கழல்புவிமேல்
பொருந்தமனை தொறும்புக்குக்
கொண்டுதாம் விரும்பியாட்
கொண்டவர்முன் கொடுவந்தார்.
178

இரந்துதாங் கொடுவந்த
இன்னடிசி லுங்கறியும்
அரந்தைதரும் பசீதீர
அருந்துவீ ரெனவளிப்பப்
பெருந்தகையார் மறையவர்தம்
பேரருளின் திறம்பேணி
நிரந்தபெருங் காதலினால்
நேர்தொழுது வாங்கினார்.
179

வாங்கிஅத் திருவமுது
வன்தொண்டர் மருங்கணைந்த
ஓங்குதவத் தொண்டருடன்
உண்டருளி யுவந்திருப்ப
ஆங்கருகு நின்றார்போல்
அவர்தம்மை யறியாமே
நீங்கினா ரெப்பொருளும்
நீங்காத நிலைமையினார்.
180
Go to top

திருநாவ லூராளி
சிவயோகி யார்நீங்க
வருநாம மறையவனார்
இறையவனா ரெனமதித்தே
பெருநாதச் சிலம்பணிசே
வடிவருந்தப் பெரும்பகற்கண்
உருநாடி எழுந்தருளிற்
றென்பொருட்டாம் எனவுருகி.
181

முதுவா யோரி என்றெடுத்து
முதல்வ னார்தம் பெருங்கருணை
அதுவா மிதுவென் றதிசயம்வந்
தெய்தக் கண்ணீர் மழையருவிப்
புதுவார் புனலின் மயிர்ப்புளகம்
புதையப் பதிகம் போற்றிசைத்து
மதுவார் இதழி முடியாரைப்
பாடி மகிழ்ந்து வணங்கினார்.
182

வந்தித் திறைவ ரருளாற்போய்
மங்கை பாகர் மகிழ்ந்தவிடம்
முந்தித் தொண்ட ரெதிர்கொள்ளப்
புக்கு முக்கட்பெருமானைச்
சிந்தித் திடவந் தருள்செய்கழல்
பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே
அந்திச் செக்கர்ப் பெருகொளியார்
அமருங் காஞ்சி மருங்கணைந்தார்.
183

அன்று வெண்ணெய் நல்லூரில்
அரியும் அயனுந் தொடர்வரிய
வென்றி மழவெள் விடையுயர்த்தார்
வேத முதல்வ ராய்வந்து
நின்று சபைமுன் வழக்குரைத்து
நேரே தொடர்ந்தாட் கொண்டவர்தாம்
இன்றிங் கெய்தப் பெற்றோமென்று
எயில்சூழ் காஞ்சிநகர் வாழ்வார்.
184

மல்கு மகிழ்ச்சி மிகப்பெருக
மறுகு மணித்தோ ரணம்நாட்டி
அல்கு தீபம் நிறைகுடங்கள்
அகிலின் தூபங் கொடியெடுத்துச்
செல்வ மனைகள் அலங்கரித்துத்
தெற்றி யாடன் முழவதிரப்
பல்கு தொண்ட ருடன்கூடிப்
பதியின் புறம்போய் எதிர்கொண்டார்.
185
Go to top

ஆண்ட நம்பி யெதிர்கொண்ட
அடியார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதிற்கோ புரங்கடந்து
நிறைமா ளிகைவீ தியிற்போந்து
பூண்ட காதல் வாழ்த்தினுடன்
புனைமங் கலதூ ரியம்ஒலிப்ப
ஈண்டு தொண்டர் பெருகுதிரு
ஏகாம் பரஞ்சென் றெய்தினார்.
186

ஆழிநெடுமா லயன்முதலாம்
அமரர் நெருங்கு கோபுரமுன்
பூமி யுறமண் மிசைமேனி
பொருந்த வணங்கிப் புகுந்தருளிச்
சூழு மணிமா ளிகைபலவுந்
தொழுது வணங்கி வலங்கொண்டு
வாழி மணிபபொற் கோயிலினுள்
வந்தார் அணுக்க வன்தொண்டர்.
187

கைகள் கூப்பி முன்னணைவார்
கம்பை யாறு பெருகிவர
ஐயர் தமக்கு மிகஅஞ்சி
ஆரத் தழுவிக் கொண்டிருந்த
மையு லாவுங் கருநெடுங்கண்
மலையா ளென்றும் வழிபடுபூஞ்
செய்ய கமலச் சேவடிக்கீழ்த்
திருந்து காத லுடன் வீழ்ந்தார்.
188

வீழ்ந்து போற்றிப் பரவசமாய்
விம்மி யெழுந்து மெய்யன்பால்
வாழ்ந்த சிந்தை யுடன்பாடி
மாறா விருப்பிற் புறம்போந்து
சூழ்ந்த தொண்ட ருடன்மருவும்
நாளில் தொல்லைக் கச்சிநகர்த்
தாழ்ந்த சடையா ராலயங்கள்
பலவுஞ் சார்ந்து வணங்குவார்.
189

சீரார் காஞ்சி மன்னுதிருக்
காமக் கோட்டம் சென்றிறைஞ்சி
நீரார் சடையா ரமர்ந்தருளும்
நீடு திருமேற் றளிமேவி
ஆரா அன்பிற் பணிந்தேத்து
மளவில்நுந்தா வொண்சுடராம்
பாரார் பெருமைத் திருப்பதிகம்
பாடி மகிழ்ந்து பரவினார்.
190
Go to top

ஓண காந்தன் தளிமேவும்
ஒருவர் தம்மை யுரிமையுடன்
பேணி யமைந்த தோழமையால்
பெருகும் அடிமைத் திறம்பேசிக்
காண மோடு பொன்வேண்டி
நெய்யும் பாலும் கலைவிளங்கும்
யாணர்ப் பதிகம் எடுத்தேத்தி
யெண்ணில் நிதிபெற் றினிதிருந்தார்.
191

அங்கண் அமர்வார் அனேகதங்கா
வதத்தை யெய்தி யுள்ளணைந்து
செங்கண் விடையார் தமைப்பணிந்து
தேனெய் புரிந்தென் றெடுத்ததமிழ்
தங்கு மிடமா மெனப்பாடித்
தாழ்ந்து பிறவுந் தானங்கள்
பொங்கு காத லுடன்போற்றிப்
புரிந்தப் பதியிற் பொருந்துநாள்.
192

பாட இசையும் பணியினால்
பாவை தழுவக் குழைகம்பர்
ஆடல் மருவுஞ் சேவடிகள்
பரவிப் பிரியா தமர்கின்றார்
நீட மூதூர்ப் புறத்திறைவர்
நிலவும் பதிகள் தொழவிருப்பால்
மாட நெருங்கு வன்பார்த்தான்
பனங்காட் டூரில் வந்தடைந்தார்.
193

செல்வ மல்கு திருப்பனங்காட்
டூரிற் செம்பொற் செழுஞ்சுடரை
அல்லல் அறுக்கும் அருமருந்தை
வணங்கி யன்பு பொழிகண்ணீர்
மல்கநின்று விடையின்மேல்
வருவார் எனும்வண் டமிழ்ப்பதிகம்
நல்ல இசையி னுடன்பாடிப்
போந்து புறம்பு நண்ணுவார்.
194

மன்னு திருமாற் பேறணைந்து
வணங்கிப் பரவித் திருவல்லம்
தன்னுள் எய்தி இறைஞ்சிப்போய்ச்
சாரும் மேல்பாற் சடைக்கற்றைப்
பின்னல் முடியா ரிடம்பலவும்
பேணி வணங்கிப் பெருந்தொண்டர்
சென்னி முகில்தோய் தடங்குவட்டுத்
திருக்கா ளத்தி மலைசேர்ந்தார்.
195
Go to top

தடுக்க லாகாப் பெருங்காதல்
தலைநின் றருளுங் கண்ணப்பர்
இடுக்கண் களைந்தாட் கொண்டருளும்
இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்துபணிந்
தருளா லேறி அன்பாறு
மடுப்பத் திருமுன் சென்றெய்தி
மலைமேல் மருந்தை வணங்கினார்.
196

வணங்கி உள்ளங் களிகூர
மகிழ்ந்து போற்றி மதுரஇசை
197

வடமா திரத்துப் பருப்பதமும்
திருக்கே தார மலையுமுதல்
இடமா அரனார் தாமுவந்த
வெல்லா மிங்கே இருந்திறைஞ்சி
நடமா டியசே வடியாரை
நண்ணி னார்போ லுண்ணிறைந்து
திடமாங் கருத்தில் திருப்பதிகம்
பாடிக் காதல் சிறந்திருந்தார்.
198

அங்குச் சிலநாள் வைகியபின்
அருளாற் போந்து பொருவிடையார்
தங்கும் இடங்க ளெனைப்பலவுஞ்
சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப்
பொங்கு புணரிக் கரைமருங்கு
புவியுட் சிவலோகம் போலத்
திங்கள் முடியா ரமர்ந்ததிரு
வொற்றியூரைச் சென்றடைந்தார்.
199

அண்ணல் தொடர்ந்தா வணங்காட்டி
ஆண்ட நம்பி யெழுந்தருள
எண்ணில் பெருமை ஆதிபுரி
இறைவ ரடியா ரெதிர்கொள்வார்
வண்ண வீதி வாயில்தொறும்
வாழை கமுகு தோரணங்கள்
சுண்ண நிறைபொற் குடந்தூப
தீப மெடுத்துத் தொழவெழுங்கால்.
200
Go to top

வரமங் கலநல் லியம்முழங்க
வாச மாலை யணியரங்கில்
புரமங் கையர்கள் நடமாடப்
பொழியும் வெள்ளப் பூமாரி
அரமங் கையரும் அமரர்களும்
வீச அன்ப ருடன்புகுந்தார்
பிரமன் தலையிற் பலியுகந்த
பிரானார் விரும்பு பெருந் தொண்டர்.
201

ஒற்றியூரி னுமையோடுங்
கூட நின்றா ருயர்தவத்தின்
பற்று மிக்க திருத்தொண்டர்
பரந்த கடல்போல் வந்தீண்டிச்
சுற்றம் அணைந்து துதிசெய்யத்
தொழுது தம்பி ரானன்பர்
கொற்ற மழவே றுடையவர்தங்
கோயில் வாயி லெய்தினார்.
202

வானை அளக்குங் கோபுரத்தை
மகிழ்ந்து பணிந்து புகுந்துவளர்
கூனல் இளவெண் பிறைச்சடையார்
கோயில் வலங்கொண் டெதிர்குறுகி
ஊனும் உயிருங் கரைந்துருக
உச்சி குவித்த கையினுடன்
ஆன காத லுடன் வீழ்ந்தார்
ஆரா வன்பி னாரூரர்.
203

ஏட்டு வரியில் ஒற்றியூர்
நீங்கல் என்ன எழுத்தறியும்
நாட்ட மலருந் திருநுதலார்
நறும்பொற் கமலச் சேவடியிற்
கூட்டு முணர்வு கொண்டெழுந்து
கோதி லமுத இசைகூடப்
பாட்டும் பாடிப் பரவிஎனும்
பதிக மெடுத்துப் பாடினார்.
204

பாடி அறிவு பரவசமாம்
பரிவு பற்றப் புறம்போந்து
நீடு விருப்பிற் பெருங்காதல்
நிறைந்த அன்பர் பலர்போற்றத்
தேடும் அயனும் திருமாலும்
அறிதற் கரிய திருப்பாதங்
கூடுங் காலங் களில்அணைந்து
பரவிக் கும்பிட் டினிதிருந்தார்.
205
Go to top

இந்த நிலைமை யாரிவரிங்
கிருந்தார் முன்பே இவர்க்காக
அந்தண் கயிலை மலைநீங்கி
அருளாற் போந்த அநிந்திதையார்
வந்து புவிமேல் அவதரித்து
வளர்ந்து பின்பு வன்தொண்டர்
சந்த விரைசூழ் புயஞ்சேர்ந்த
பரிசு தெரியச் சாற்றுவாம்.
206

நாலாங் குலத்திற் பெருகுநல
முடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை
மிக்க திருஞா யிறுகிழவர்
பாலா தரவு தருமகளார்
ஆகிப் பார்மேல் அவதரித்தார்
ஆலா லஞ்சேர் கறைமிடற்றார்
அருளால் முன்னை அநிந்திதையார்.
207

மலையான் மடந்தை மலர்ப்பாதம்
மறவா அன்பால் வந்தநெறி
தலையா முணர்வு வந்தணையத்
தாமே யறிந்த சங்கிலியார்
அலையார் வேற்கண் சிறுமகளி
ராயத் தோடும் விளையாட்டு
நிலையா யினஅப் பருவங்கள்
தோறும் நிகழ நிரம்புவார்.
208

சீர்கொள் மரபில் வருஞ்செயலே
யன்றித் தெய்வ நிகழ்தன்மை
பாரில் எவரும் அதிசயிக்கும்
பண்பில் வளரும் பைந்தொடியார்
வாரும் அணிய அணியவாம்
வளர்மென் முலைகள் இடைவருத்தச்
சாரும் பதத்தில் தந்தையார்
தங்கள் மனைவி யார்க்குரைப்பார்.
209

வடிவும் குணமும் நம்முடைய
மகட்கு மண்ணு ளோர்க்கிசையும்
படிவ மன்றி மேற்பட்ட
பரிசாம் பான்மை அறிகிலோம்
கடிசேர் மணமும் இனிநிகழுங்
கால மென்னக் கற்புவளர்
கொடியே அனைய மனைவியார்
ஏற்கு மாற்றால் கொடுமென்றார்.
210
Go to top

தாய ரோடும் தந்தையார்
பேசக் கேட்ட சங்கிலியார்
ஏயும் மாற்றம் அன்றிதுஎம்
பெருமா னீசன் திருவருளே
மேய வொருவர்க் குரிய தியான்
வேறென் விளையும் எனவெருவுற்று
ஆய வுணர்வு மயங்கிமிக
அயர்ந்தே அவனி மிசைவிழுந்தார்.
211

பாங்கு நின்ற தந்தையார்
தாயார் பதைத்துப் பரிந்தெடுத்தே
ஏங்கும் உள்ளத் தினராகி
இவளுக் கென்னோ உற்றதெனத்
தாங்கிச் சீத விரைப்பனிநீர்
தெளித்துத் தைவந் ததுநீங்க
வாங்கு சிலைநன் னுதலாரை
வந்த துனக்கிங் கென்னென்றார்.
212

என்று தம்மை ஈன்றெடுத்தார்
வினவ மறைவிட் டியம்புவார்
இன்றென் திறத்து நீர்மொழிந்த
திதுஎன் பரிசுக் கிசையாது
வென்றி விடையா ரருள் செய்தார்
ஒருவர்க் குரியேன் யானினிமேல்
சென்று திருவொற்றி யூரணைந்து
சிவனார் அருளிற் செல்வனென.
213

அந்த மாற்றங் கேட்டவர்தாம்
அயர்வும் பயமும் அதிசயமும்
வந்த வுள்ளத் தினராகி
மற்ற மாற்றம் மறைத்தொழுகப்
பந்தம் நீடும் இவர்குலத்து
நிகராம் ஒருவன் பரிசறியான்
சிந்தை விரும்பி மகட்பேச
விடுத்தான் சிலருஞ் சென்றிசைத்தார்.
214

தாதை யாரும் அதுகேட்டுத்
தன்மை விளம்பத் தகாமையினால்
ஏத மெய்தா வகைமொழிந்து
போக்க அவராங் கெய்தாமுன்
தீதங் கிழைத்தே யிறந்தான்போற்
செல்ல விடுத்தா ருடன் சென்றான்
மாத ராரைப் பெற்றார்மற்று
அதனைக் கேட்டு மனமருண்டார்.
215
Go to top

தைய லார்சங் கிலியார்தம்
திறத்துப் பேசத் தகாவார்த்தை
உய்ய வேண்டும் நினைவுடையார்
உரையா ரென்றங் குலகறியச்
செய்த விதிபோல் இதுநிகழச்
சிறந்தார்க் குள்ள படிசெப்பி
நையும் உள்ளத் துடன்அஞ்சி
நங்கை செயலே உடன்படுவார்.
216

அணங்கே யாகும் இவள்செய்கை
அறிந்தோர் பேச அஞ்சுவரால்
வணங்கும் ஈசர் திறமன்றி
வார்த்தை யறியாள் மற்றொன்றும்
குணங்க ளிவையா மினியிவள் தான்
குறித்த படியே ஒற்றிநகர்ப்
பணங்கொ ளரவச் சடையார்தம்
பாற்கொண் டணைவோம் எனப்பகர்வார்.
217

பண்ணார் மொழிச்சங் கிலியாரை
நோக்கிப் பயந்தா ரொடுங்கிளைஞர்
தெண்ணீர் முடியார் திருவொற்றி
யூரிற் சேர்ந்து செல்கதியும்
கண்ணார் நுதலார் திருவருளால்
ஆகக் கன்னி மாடத்துத்
தண்ணார் தடஞ்சூ ழந்நகரிற்
றங்கிப் புரிவீர் தவமென்று.
218

பெற்ற தாதை சுற்றத்தார்
பிறைசேர் முடியார் விதியாலே
மற்றுச் செயலொன் றறியாது
மங்கை யார்சங் கிலியார் தாம்
சொற்ற வண்ணஞ் செயத்துணிந்து
துதைந்த செல்வத் தொடும்புரங்கள்
செற்ற சிலையார் திருவொற்றி
யூரிற் கொண்டு சென்றணைந்தார்.
219

சென்னி வளர்வெண் பிறையணிந்த
சிவனார் கோயி லுள்புகுந்து
துன்னுஞ் சுற்றத் தொடும்பணிந்து
தொல்லைப் பதியோர் இசைவினால்
கன்னி மாட மருங்கமைத்துக்
கடிசேர் முறைமைக் காப்பியற்றி
மன்னுஞ் செல்வந் தகவகுத்துத்
தந்தை யார்வந் தடிவணங்கி.
220
Go to top

யாங்கள் உமக்குப் பணிசெய்ய
ஈசற் கேற்ற பணிவிரும்பி
ஓங்கு கன்னி மாடத்தில்
உறைகின் றீரென் றுரைக்கின்றார்
தாங்கற் கரிய கண்கள்நீர்த்
தாரை ஒழுகத் தரியாதே
ஏங்கு சுற்றத் தொடும்இறைஞ்சிப்
போனார் எயில்சூழ் தம்பதியில்.
221

காதல் புரிந்து தவம்புரியுங்
கன்னி யாரங் கமர்கின்றார்
பூத நாதர் கோயிலினிற்
காலந் தோறும் புக்கிறைஞ்சி
நீதி முறைமை வழுவாது
தமக்கு நேர்ந்த பணி செய்யச்
சீத மலர்ப்பூ மண்டபத்துத்
திரைசூழ் ஒருபாற் சென்றிருந்து.
222

பண்டு கயிலைத் திருமலையில்
செய்யும் பணியின் பான்மைமனம்
கொண்ட உணர்வு தலைநிற்பக்
குலவு மலர்மென் கொடியனையார்
வண்டு மருவுந் திருமலர்மென்
மாலை காலங் களுக்கேற்ப
அண்டர் பெருமான் முடிச்சாத்த
அமைத்து வணங்கி யமருநாள்.
223

அந்தி வண்ணத் தொருவர்திரு
வருளால் வந்த ஆரூரர்
கந்த மாலைச் சங்கிலியார்
தம்மைக் காதல் மணம்புணர
வந்த பருவ மாதலால்
வகுத்த தன்மை வழுவாத
முந்தை விதியால் வந்தொருநாள்
முதல்வர் கோயி லுட்புகுந்தார்.
224

அண்டர் பெருமான் அந்தணராய்
ஆண்ட நம்பி யங்கணரைப்
பண்டை முறைமை யாற்பணிந்து
பாடிப் பரவிப் புறம்போந்து
தொண்டு செய்வார் திருத்தொழில்கள்
கண்டு தொழுது செல்கின்றார்
புண்ட ரீகத் தடம்நிகர்பூந்
திருமண் டபத்தி னுட்புகுந்தார்.
225
Go to top

அன்பு நாரா அஞ்செழுத்து
நெஞ்சு தொடுக்க அலர்தொடுத்தே
என்புள் ளுருகும் அடியாரைத்
தொழுது நீங்கி வேறிடத்து
முன்பு போலத் திரைநீக்கி
முதல்வர் சாத்தும் பணிகொடுத்து
மின்போல் மறையுஞ் சங்கிலியார்
தம்மை விதியாற் கண்ணுற்றார்.
226

கோவா முத்தும் சுரும்பேறாக்
கொழுமென் முகையு மனையாரைச்
சேவார் கொடியார் திருத்தொண்டர்
கண்ட போது சிந்தைநிறை
காவா தவர்பால் போய்வீழத்
தம்பாற் காம னார் துரந்த
பூவா ளிகள்வந் துறவீழத்
தரியார் புறமே போந்துரைப்பார்.
227

இன்ன பரிசென் றறிவரிதால்
ஈங்கோர் மருங்கு திரைக்குள்ளால்
பொன்னும் மணியும் மலர்ந்தவொளி
யமுதில் அளாவிப் புதியமதி
தன்னுள் நீர்மை யால்குழைத்துச்
சமைத்த மின்னுக் கொடிபோல்வாள்
என்னை யுள்ளந் திரிவித்தாள்
யார்கொல் என்றங் கியம்புதலும்.
228

அருகு நின்றார் விளம்புவார்
அவர்தாம் நங்கை சங்கிலியார்
பெருகு தவத்தால் ஈசர்பணி
பேணுங் கன்னி யாரென்ன
இருவ ராலிப் பிறவியைஎம்
பெருமான் அருளால் எய்துவித்தார்
மருவும் பரவை ஒருத்திஇவள்
மற்றை யவளாம் எனமருண்டார்.
229

மின்னார் சடையார் தமக்காளாம்
விதியால் வாழும் எனைவருத்தித்
தன்னா ரருளால் வரும்பேறு
தவத்தால் அணையா வகைதடுத்தே
என்னா ருயிரும் எழின்மலரும்
கூடப் பிணைக்கும் இவள்தன்னைப்
பொன்னார் இதழி முடியார்பால்
பெறுவே னென்று போய்ப்புக்கார்.
230
Go to top

மலர்மே லயனும் நெடுமாலும்
வானும் நிலனுங் கிளைத்தறியா
நிலவு மலருங் திருமுடியும்
நீடுங் கழலும் உடையாரை
உலக மெல்லாந் தாமுடையார்
ஆயும் ஒற்றி யூரமர்ந்த
இலகு சோதிப் பரம்பொருளை
இறைஞ்சி முன்னின் றேத்துவார்.
231

மங்கை யொருபால் மகிழந்ததுவும்
அன்றி மணிநீண் முடியின்கண்
கங்கை தன்னைக் கரந்தருளும்
காதலுடையீர் அடியேனுக்
கிங்கு நுமக்குத் திருமாலை
தொடுத் தெனுள்ளத் தொடையவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத்
தந்தென் வருத்தந் தீருமென.
232

அண்ண லார்முன் பலவும்அவர்
அறிய வுணர்த்திப் புறத்தணைந்தே
எண்ண மெல்லாம் உமக்கடிமை
யாமா றெண்ணும் என்னெஞ்சில்
திண்ண மெல்லா முடைவித்தாள்
செய்வ தொன்று மறியேன் யான்
தண்ணி லாமின் னொளிர்பவளச்
சடையீர் அருளும் எனத்தளர்வார்.
233

மதிவாள் முடியார் மகிழ்கோயிற்
புறத்தோர் மருங்கு வந்திருப்பக்
கதிரோன் மேலைக் கடல்காண
மாலைக் கடலைக் கண்டயர்வார்
முதிரா முலையார் தம்மைமணம்
புணர்க்க வேண்டி முளரிவளை
நிதியா னண்பர் தமக்கருளும்
நண்பால் நினைந்து நினைந்தழிய.
234

உம்ப ருய்ய உலகுய்ய
ஓல வேலை விடமுண்ட
தம்பி ரானார் வன்தொண்டர்
தம்பா லெய்திச் சங்கிலியை
இம்ப ருலகில் யாவருக்கும்
எய்த வொண்ணா இருந்தவத்துக்
கொம்பை உனக்குத் தருகின்றோம்
கொண்ட கவலை ஒழிகென்ன.
235
Go to top

அன்று வெண்ணெய் நல்லூரில்
வலிய ஆண்டு கொண்டருளி
ஒன்று மறியா நாயேனுக்
குறுதி யளித்தீர் உயிர்காக்க
இன்றும் இவளை மணம்புணர்க்க
ஏன்று நின்றீர் எனப்போற்றி
மன்றல் மலர்ச்சே வடியிணைக்கீழ்
வணங்கி மகிழ்ந்தார் வன்தொண்டர்.
236

ஆண்டு கொண்ட அந்தணனார்
அவருக் கருளிக் கருணையினால்
நீண்ட கங்குல் யாமத்து
நீங்கி வானில் நிறைமதியந்
தீண்டு கன்னி மாடத்துச்
சென்று திகழ்சங் கிலியாராம்
தூண்டு சோதி விளக்கனையார்
தம்பால் கனவில் தோன்றினார்.
237

தோற்றும் பொழுதிற் சங்கிலியார்
தொழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற அன்பு பொங்கியெழுந்
தடியே னுய்ய எழுந் தருளும்
பேற்றுக் கென்யான் செய்வதெனப்
பெரிய கருணை பொழிந்தனைய
நீற்றுக் கோல வேதியரும்
நேர்நின் றருளிச் செய்கின்றார்.
238

சாருந் தவத்துச் சங்கிலிகேள்
சால என்பா லன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட
தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரு மறிய யான்ஆள
உரியான் உன்னை யெனையிரந்தான்
வார்கொள் முலையாய் நீயவனை
மணத்தால் அணைவாய் மகிழ்ந்தென்றார்.
239

ஆதி தேவர் முன்னின்றங்
கருளிச் செய்த பொழுதின்கண்
மாத ரார்சங் கிலியாரும்
மாலும் மயனு மறிவரிய
சீத மலர்த்தா மரையடிக்கீழ்ச்
சேர்ந்து வீழ்ந்து செந்நின்று
வேத முதல்வர் முன்னடுக்கம்
எய்தித் தொழுது விளம்புவார்.
240
Go to top

எம்பி ரானே நீரருளிச்
செய்தார்க் குரியேன் யான்இமையோர்
தம்பி ரானே அருள்தலைமேற்
கொண்டேன் தக்க விதிமணத்தால்
நம்பி யாரூ ரருக்கென்னை
நல்கி யருளும் பொழுதிமயக்
கொம்பி னாகங் கொண்டீர்க்குக்
கூறுந் திறமொன் றுளதென்பார்.
241

பின்னும் பின்னல் முடியார்முன்
பெருக நாணித் தொழுரைப்பார்
மன்னுந் திருவா ரூரின்கண்
அவர்தாம் மிகவும் மகிழ்ந்துறைவ
தென்னுந் தன்மை யறிந்தருளும்
எம்பி ராட்டி திருமுலைதோய்
மின்னும் புரிநூல் அணிமார்பீர்
என்றார் குன்றா விளக்கனையார்.
242

மற்றவர்தம் உரைகொண்டு
வன்தொண்டர் நிலைமையினை
ஒற்றிநகர் அமர்ந்தபிரான்
உணர்ந்தருளி யுரைசெய்வார்
பொற்றொடியா யுனையிகந்து
போகாமைக் கொருசபதம்
அற்றமுறு நிலைமையினால்
அவன்செய்வா னெனவருளி.
243

வேயனைய தோளியார்
பால்நின்று மீண்டருளித்
தூயமனம் மகிழ்ந்திருந்த
தோழனார் பால்அணைந்து
நீஅவளை மணம்புணரும்
நிலையுரைத்தோம் அதற்கவள்பால்
ஆயதொரு குறைஉன்னால்
அமைப்பதுள தென்றருள.
244

வன்தொண்டர் மனங்களித்து
வணங்கிஅடி யேன்செய்ய
நின்றகுறை யாதென்ன
நீயவளை மணம்புணர்தற்
கொன்றியுட னேநிகழ
ஒருசபத மவள்முன்பு
சென்றுகிடைத் திவ்விரவே
செய்கவென வருள்செய்தார்.
245
Go to top

என்செய்தால் இதுமுடியும்
ஆதுசெய்வன் யானிதற்கு
மின்செய்த புரிசடையீர்
அருள்பெறுதல் வேண்டுமென
முன்செய்த முறுவலுடன்
முதல்வரவர் முகநோக்கி
உன்செய்கை தனக்கினியென்
வேண்டுவதென் றுரைத்தருள.
246

வம்பணிமென் முலையவர்க்கு
மனங்கொடுத்த வன்தொண்டர்
நம்பரிவர் பிறபதியும்
நயந்தகோ லஞ்சென்று
கும்பிடவே கடவேனுக்
கிதுவிலக்கா மெனுங்குறிப்பால்
தம்பெருமான் றிருமுன்பு
தாம்வேண்டுங் குறையிரப்பார்.
247

சங்கரர்தாள் பணிந்திருந்து
தமிழ்வேந்தர் மொழிகின்றார்
மங்கையவள் தனைப்பிரியா
வகைசபதஞ் செய்வதனுக்
கங்கவளோ டியான்வந்தால்
அப்பொழுது கோயில்விடத்
தங்குமிடந் திருமகிழ்க்கீழ்க்
கொளவேண்டு மெனத்தாழ்ந்தார்.
248

தம்பிரான் தோழரவர்
தாம்வேண்டிக் கொண்டருள
உம்பர்நா யகருமதற்
குடன்பாடு செய்வாராய்
நம்பிநீ சொன்னபடி
நாஞ்செய்தும் என்றருள
எம்பிரா னேயரிய
தினியெனக்கென் னெனவேத்தி.
249

அஞ்சலிசென் னியில்மன்ன
அருள்பெற்றுப் புறம்போதச்
செஞ்சடையார் அவர்மாட்டுத்
திருவிளையாட் டினைமகிழ்ந்தோ
வஞ்சியிடைச் சங்கிலியார்
வழியடிமைப் பெருமையோ
துஞ்சிருள்மீ ளவும்அணைந்தார்
அவர்க்குறுதி சொல்லுவார்.
250
Go to top

சங்கிலியார் தம்மருங்கு
முன்புபோற் சார்ந்தருளி
நங்கையுனக் காரூரன்
நயந்துசூ ளுறக்கடவன்
அங்கு நமக் கெதிர்செய்யும்
அதற்குநீ யிசையாதே
கொங்கலர்பூ மகிழின்கீழ்க்
கொள்கவெனக் குறித்தருள.
251

மற்றவருங் கைகுவித்து
மாலயனுக் கறிவரியீர்
அற்றமெனக் கருள்புரிந்த
அதனில்அடி யேனாகப்
பெற்றதியான் எனக்கண்கள்
பெருந்தாரை பொழிந்திழிய
வெற்றிமழ விடையார்தம்
சேவடிக்கீழ் வீழ்ந்தெழுந்தார்.
252

தையலார் தமக்கருளிச்
சடாமகுடர் எழுந்தருள
எய்தியபோ ததிசயத்தால்
உணர்ந்தெழுந்தவ் விரவின்கண்
செய்யசடை யாரருளின்
திறம்நினைந்தே கண்துயிலார்
ஐயமுடன் அருகுதுயில்
சேடியரை அணைந்தெழுப்பி.
253

நீங்குதுயிற் பாங்கியர்க்கு
நீங்கல்எழுத் தறியுமவர்
தாங்கனவில் எழுந்தருளித்
தமக்கருளிச் செய்ததெலாம்
பாங்கறிய மொழியஅவர்
பயத்தினுடன் அதிசயமும்
தாங்குமகிழ்ச் சியும்எய்தச்
சங்கிலியார் தமைப்பணிந்தார்.
254

சேயிழையார் திருப்பள்ளி
யெழுச்சிக்கு மலர்தொடுக்கும்
தூயபணிப் பொழுதாகத்
தொழில்புரிவா ருடன்போதத்
கோயிலின்முன் காலமது
வாகவே குறித்தணைந்தார்
ஆயசப தஞ்செய்ய
வரவுபார்த் தாரூரர்.
255
Go to top

நின்றவர்அங் கெதிர்வந்த
நேரிழையார் தம்மருங்கு
சென்றணைந்து தம்பெருமான்
திருவருளின் திறங்கூற
மின்தயங்கு நுண்ணிடையார்
விதியுடன்பட் டெதிர்விளம்பார்
ஒன்றியநா ணொடுமடவார்
உடனொதுங்கி உட்புகுந்தார்.
256

அங்கவர்தம் பின்சென்ற
ஆரூரர் ஆயிழையீர்
இங்குநான் பிரியாமை
உமக்கிசையும் படியியம்பத்
திங்கள்முடி யார்திருமுன்
போதுவீர் எனச்செப்பச்
சங்கிலியார் கனவுரைப்பக்
கேட்டதா தியர்மொழிவார்.
257

எம்பெருமான் இதற்காக
எழுந்தருளி யிமையவர்கள்
தம்பெருமான் திருமுன்பு
சாற்றுவது தகாதென்ன
நம்பெருமான் வன்தொண்டர்
நாதர்செயல் அறியாதே
கொம்பனையீர் யான்செய்வ
தெங்கென்று கூறுதலும்.
258

மாதரவர் மகிழ்க்கீழே
அமையுமென மனமருள்வார்
ஈதலரா கிலும்ஆகும்
இவர்சொன்ன படிமறுக்கில்
ஆதலினால் உடன்படலே
அமையுமெனத் துணிந்தாகில்
போதுவீ ரெனமகிழ்க்கீழ்
அவர்போதப் போயணைந்தார்.
259

தாவாத பெருந்தவத்துச்
சங்கிலியா ருங்காண
மூவாத திருமகிழை
முக்காலும் வலம்வந்து
மேவாதிங் கியானகலேன்
எனநின்று விளம்பினார்
பூவார்தண் புனற்பொய்கை
முனைப்பாடிப் புரவலனார்.
260
Go to top

மேவியசீ ராரூரர்
மெய்ச்சபத வினைமுடிப்பக்
காவியினேர் கண்ணாருங்
கண்டுமிக மனங்கலங்கிப்
பாவியேன் இதுகண்டேன்
தம்பிரான் பணியால்என்
றாவிசோர்ந் தழிவார்அங்
கொருமருங்கு மறைந்தயர்ந்தார்.
261

திருநாவ லூராளி
தம்முடைய செயல்முற்றிப்
பொருநாகத் துரிபுனைந்தார்
கோயிலினுட் புகுந்திறைஞ்சி
அருள்நாளுந் தரவிருந்தீர்
செய்தவா றழகிதெனப்
பெருநாமம் எடுத்தேத்திப்
பெருமகிழ்ச்சி யுடன்போந்தார்.
262

வார்புனையும் வனமுலையார்
வன்தொண்டர் போனதற்பின்
தார்புனையும் மண்டபத்துத்
தம்முடைய பணிசெய்து
கார்புனையும் மணிகண்டர்
செயல்கருத்திற் கொண்டிறைஞ்சி
ஏர்புனையுங் கன்னிமா
டம்புகுந்தார் இருள்புலர.
263

அன்றிரவே ஆதிபுரி
ஒற்றிகொண்டார் ஆட்கொண்ட
பொன்றிகழ்பூண் வன்தொண்டர்
புரிந்தவினை முடித்தருள
நின்றபுகழ்த் திருவொற்றி
யூர்நிலவு தொண்டருக்கு
மன்றல்வினை செய்வதற்கு
மனங்கொள்ள வுணர்த்துவார்.
264

நம்பியா ரூரனுக்கு
நங்கைசங் கிலிதன்னை
இம்பர்ஞா லத்திடைநம்
ஏவலினால் மணவினைசெய்
தும்பர்வா ழுலகறிய
அளிப்பீரென் றுணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர்
அருள்தலைமேற் கொண்டெழுவார்.
265
Go to top

மண்ணிறைந்த பெருஞ்செல்வத்
திருவொற்றி யூர்மன்னும்
எண்ணிறைந்த திருத்தொண்டர்
எழிற்பதியோ ருடனீண்டி
உண்ணிறைந்த மகிழ்ச்சியுடன்
உம்பர்பூ மழைபொழியக்
கண்ணிறைந்த பெருஞ்சிறப்பிற்
கலியாணஞ் செய்தளித்தார்.
266

பண்டுநிகழ் பான்மையினால்
பசுபதிதன் னருளாலே
வண்டமர்பூங் குழலாரை
மணம்புணர்ந்த வன்தொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப்
புறங்கண்ட தூநலத்தைக்
கண்டுகேட் டுண்டுயிர்த்துற்
றமர்ந்திருந்தார் காதலினால்.
267

யாழின்மொழி எழின்முறுவல்
இருகுழைமேற் கடைபிறழும்
மாழைவிழி வனமுலையார்
மணியல்குல் துறைபடிந்து
வீழுமவர்க் கிடைதோன்றி
மிகும்புலவிப் புணர்ச்சிக்கண்
ஊழியா மொருகணந்தான்
அவ்வூழி யொருகணமாம்.
268

இந்நிலையில் பேரின்பம்
269

பொங்குதமிழ்ப் பொதியமலைப்
பிறந்துபூஞ் சந்தனத்தின்
கொங்கணைந்து குளிர்சாரல்
இடைவளர்ந்த கொழுந்தென்றல்
அங்கணையத் திருவாரூர்
அணிவீதி அழகரவர்
மங்கலநாள் வசந்தமெதிர்
கொண்டருளும் வகைநினைந்தார்.
270
Go to top

வெண்மதியின் கொழுந்தணிந்த
வீதிவிடங் கப்பெருமான்
ஒண்ணுதலார் புடைபரந்த
ஓலக்க மதனிடையே
பண்ணமரும் மொழிப்பரவை
யார்பாட லாடல்தனைக்
கண்ணுறமுன் கண்டுகேட்
டார்போலக் கருதினார்.
271

பூங்கோயில் அமர்ந்தாரைப்
புற்றிடங்கொண் டிருந்தாரை
நீங்காத காதலினால்
நினைந்தாரை நினைவாரைப்
பாங்காகத் தாமுன்பு
பணியவரும் பயனுணர்வார்
ஈங்குநான் மறந்தேனென்
றேசறவால் மிகவழிவார்.
272

மின்னொளிர்செஞ் சடையானை
வேதமுத லானானை
மன்னுபுகழ்த் திருவாரூர்
மகிழ்ந்தானை மிகநினைந்து
பன்னியசொற் பத்திமையும்
அடிமையையுங் கைவிடுவான்
என்னுமிசைத் திருப்பதிகம்
எடுத்தியம்பி யிரங்கினார்.
273

பின்னொருநாள் திருவாரூர்
தனைப்பெருக நினைந்தருளி
உன்னஇனி யார்கோயில்
புகுந்திறைஞ்சி ஒற்றிநகர்
தன்னையக லப்புக்கார்
தாஞ்செய்த சபதத்தால்
முன்னடிகள் தோன்றாது
கண்மறைய மூர்ச்சித்தார்.
274

செய்வதனை யறியாது
திகைத்தருளி நெடிதுயிர்ப்பார்
மைவிரவு கண்ணார்பால்
சூளுறவு மறுத்ததனால்
இவ்வினைவந் தெய்தியதாம்
எனநினைந்தெம் பெருமானை
வெவ்வியஇத் துயர்நீங்கப்
பாடுவேன் எனநினைந்து.
275
Go to top

அழுக்கு மெய்கொடென் றெடுத்தசொற் பதிகம்
ஆதி நீள்புரி யண்ணலை யோதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்துநின் றுரைப்பார்
மாதொர் பாகனார் மலர்ப்பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும்என் றிரந்தே
எய்து வெந்துயர்க் கையற வினுக்கும்
பழிக்கும் வெள்கிநல் லிசைகொடு பரவிப்
பணிந்து சாலவும் பலபல நினைவார்.
276

அங்கு நாதர்செய் அருளது வாக
அங்கை கூப்பியா ரூர்தொழ நினைந்தே
பொங்கு காதன்மீ ளாநிலை மையினால்
போது வார்வழி காட்டமுன் போந்து
திங்கள் வேணியார் திருமுல்லை வாயில்
சென்றி றைஞ்சிநீ டிய திருப் பதிகம்
சங்கிலிக் காகஎன் கண்களை மறைத்தீர்
என்று சாற்றிய தன்மையிற் பாடி.
277

தொண்டை மானுக்கன் றருள்கொடுத் தருளுந்
தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்
கொண்ட வெந்துயர் களைகெனப் பரவிக்
குறித்த காதலின் நெறிக்கொள வருவார்
வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து
மாட மாளிகை நீடுவெண் பாக்கம்
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி
காயும்நா கத்தர் கோயிலை யடைந்தார்.
278

அணைந்த தொண்டர்க ளுடன்வல மாக
அங்கண் நாயகர் கோயில்முன் னெய்திக்
குணங்க ளேத்தியே பரவியஞ் சலியால்
குவித்த கைதலை மேற்கொண்டு நின்று
வணங்கி நீர்மகிழ் கோயிலு ளீரே
என்ற வன்தொண்டர்க் கூன்றுகோ லருளி
இணங்கி லாமொழி யால்உளோம் போகீர்
என்றி யம்பினார் ஏதிலார் போல.
279

பிழையுளன பொறுத்திடுவர்
என்றெடுத்துப் பெண்பாகம்
விழைவடிவிற் பெருமானை
வெண்பாக்கம் மகிழ்ந்தானை
இழையெனமா சுணமணிந்த
விறையானைப் பாடினார்
மழை தவழு நெடும்புரிசை
நாவலூர் மன்னவனார்.

280
Go to top

முன்னின்று முறைப்பாடு
போல்மொழிந்த மொழிமாலைப்
பன்னும்இசைத் திருப்பதிகம்
பாடியபின் பற்றாய
என்னுடைய பிரானருள்இங்
கித்தனைகொ லாமென்று
மன்னுபெருந் தொண்டருடன்
வணங்கியே வழிக்கொள்வார்.
281

அங்கணர்தம் பதியதனை
அகன்றுபோய் அன்பருடன்
பங்கயப்பூந் தடம்பணைசூழ்
பழையனுர் உழையெய்தித்
தங்குவார் அம்மைதிருத்
தலையாலே வலங்கொள்ளும்
திங்கண்முடி யாராடுந்
திருவாலங் காட்டினயல்.
282

முன்னின்று தொழுதேத்தி
முத்தாஎன் றெடுத்தருளிப்
பன்னும்இசைத் திருப்பதிகம்
பாடிமகிழ்ந் தேத்துவார்
அந்நின்று வணங்கிப்போய்த்
திருவூறல் அமர்ந்திறைஞ்சிக்
கன்னிமதில் மணிமாடக்
காஞ்சிமா நகரணைந்தார்.
283

தேனிலவு பொழிற்கச்சித்
திருக்காமக் கோட்டத்தில்
ஊனில்வளர் உயிர்க்கெல்லாம்
ஒழியாத கருணையினால்
ஆனதிரு வறம்புரக்கும்
அம்மைதிருக் கோயிலின்முன்
வானில்வளர் திருவாயில்
வணங்கினார் வன்தொண்டர்.
284

தொழுது விழுந் தெழுந்தருளாற்
துதித்துப்போய்த் தொல்லுலகம்
முழுதும்அளித் தழித்தாக்கும்
முதல்வர்திரு வேகம்பம்
பழுதில்அடி யார்முன்பு
புகப்புக்குப் பணிகின்றார்
இழுதையேன் திருமுன்பே
என்மொழிவேன் என்றிறைஞ்சி.
285
Go to top

விண்ணாள்வார் அமுதுண்ண
மிக்கபெரு விடமுண்ட
கண்ணாளா கச்சியே
கம்பனே கடையானேன்
எண்ணாத பிழைபொறுத்திங்
கியான்காண எழிற்பவள
வண்ணாகண் ணளித்தருளாய்
எனவீழ்ந்து வணங்கினார்.
286

பங்கயச்செங் கைத்தளிரால்
பனிமலர்கொண் டருச்சித்துச்
செங்கயற்கண் மலைவல்லி
பணிந்தசே வடிநினைந்து
பொங்கியஅன் பொடுபரவிப்
போற்றியஆ ரூரருக்கு
மங்கைதழு வக்குழைந்தார்
மறைந்தஇடக் கண்கொடுத்தார்.
287

ஞாலந்தான் இடந்தவனும்
நளிர்விசும்பு கடந்தவனும்
மூலந்தான் அறிவரியார்
கண்ணளித்து முலைச்சுவட்டுக்
கோலந்தான் காட்டுதலும்
குறுகிவிழுந் தெழுந்துகளித்
தாலந்தா னுகந்தவன் என்
றெடுத்தாடிப் பாடினார்.
288

பாடிமிகப் பரவசமாய்ப்
பணிவார்க்குப் பாவையுடன்
நீடியகோ லங்காட்ட
நிறைந்தவிருப் புடனிறைஞ்சிச்
சூடியஅஞ் சலியினராய்த்
தொழுதுபுறம் போந்தன்பு
கூடியமெய்த் தொண்டருடன்
கும்பிட்டங் கினிதமர்வார்.
289

மாமலையாள் முலைச்சுவடும்
வளைத்தழும்பும் அணிந்தமதிப்
பூமலிவார் சடையாரைப்
போற்றியரு ளதுவாகத்
தேமலர்வார் பொழிற்காஞ்சித்
திருநகரங் கடந்தகல்வார்
பாமலர்மா லைப்பதிகம்
திருவாரூர் மேற்பரவி.
290
Go to top

அந்தியும்நண் பகலும்என
எடுத்தார்வத் துடனசையால்
எந்தைபிரான் திருவாரூர்
என்றுகொல்எய் துவதென்று
சந்தஇசை பாடிப்போய்த்
தாங்கரிய ஆதரவு
வந்தணைய அன்பருடன்
மகிழ்ந்துவழிக் கொள்கின்றார்.
291

மன்னுதிருப் பதிகள்தொறும்
வன்னியொடு கூவிளமும்
சென்னிமிசை வைத்துவந்தார்
கோயிலின்முன் சென்றிறைஞ்சிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப்
பரவியே போந்தணைந்தார்
அன்னமலி வயற்றடங்கள் சூழ்ந்ததிரு வாமாத்தூர்.
292

அங்கணரை ஆமாத்தூர்
அழகர்தமை யடிவணங்கித்
தங்கும்இசைத் திருப்பதிகம்
பாடிப்போய்த் தாரணிக்கு
மங்கலமாம் பெருந்தொண்டை
வளநாடு கடந்தணைந்தார்
செங்கண்வள வன்பிறந்த
சீர்நாடு நீர்நாடு.
293

அந்நாட்டின் மருங்குதிரு வரத்துறையைச் சென்றெய்தி
மின்னாரும் படைமழுவார்
விரைமலர்த்தாள் பணிந்தெழுந்து
சொன்மாலை மலர்க்கல்வா
யகில்என்னுந் தொடைசாத்தி
மன்னார்வத் திருத்தொண்ட
ருடன்மகிழ்ந்து வைகினார்.
294

பரமர்திரு வரத்துறையைப்
பணிந்துபோய்ப் பலபதிகள்
விரவிமழ விடையுயர்த்தார்
விரைமலர்த்தாள் தொழுதேத்தி
உரவுநீர்த் தடம்பொன்னி
அடைந்தன்ப ருடனாடி
அரவணிந்தார் அமர்ந்ததிரு
வாவடுதண் டுறைஅணைந்தார்.
295
Go to top

அங்கணைவார் தமையடியார்
எதிர்கொள்ளப் புக்கருளிப்
பொங்குதிருக் கோயிலினைப்
புடைவலங்கொண்டு உள்ளணைந்து
கங்கைவாழ் சடையாய்ஓர்
கண்ணிலேன் எனக்கவல்வார்
இங்கெனக்கா ருறவென்னுந்
திருப்பதிக மெடுத்திசைத்தார்.
296

திருப்பதிகங் கொடுபரவிப்
பணிந்துதிரு வருளாற்போய்
விருப்பினொடுந் திருத்துருத்தி
தனைமேவி விமலர்கழல்
அருத்தியினாற் புக்கிறைஞ்சி
யடியேன்மே லுற்றபிணி
வருத்தமெனை ஒழித்தருள
வேண்டுமென வணங்குவார்.
297

பரவியே பணிந்தவர்க்குப்
பரமர் திரு வருள்புரிவார்
விரவியஇப் பிணியடையத்
தவிர்ப்பதற்கு வேறாக
வரமலர்வண் டறைதீர்த்த
வடகுளத்துக் குளிஎன்னக்
கரவில்திருத் தொண்டர்தாங்
கைதொழுது புறப்பட்டார்.
298

மிக்கபுனல் தீர்த்தத்தின்
முன்னணைந்து வேதமெலாந்
தொக்கவடி வாயிருந்த
துருத்தியார் தமைத்தொழுது
புக்கதனில் மூழ்குதலும்
புதியபிணி யதுநீங்கி
அக்கணமே மணியொளிசேர்
திருமேனி யாயினார்.
299

கண்டவர்கள் அதிசயிப்பக்
கரையேறி உடைபுனைந்து
மண்டுபெருங் காதலினால்
கோயிலினை வந்தடைந்து
தொண்டரெதிர் மின்னுமா
மேகம்எனுஞ் சொற்பதிகம்
எண்திசையு மறிந்துய்ய
ஏழிசையால் எடுத்திசைத்தார்.
300
Go to top

பண்ணிறைந்த தமிழ்பாடிப்
பரமர்திரு வருள்மறவா
தெண்ணிறைந்த தொண்டருடன்
பணிந்தங்கண் உறைந்தேகி
உண்ணிறைந்த பதிபிறவும்
உடையவர்தாள் வணங்கிப்போய்க்
கண்ணிறைந்த திருவாரூர்
முன்தோன்றக் காண்கின்றார்.
301

அன்றுதிரு நோக்கொன்றால்
ஆரக்கண் டின்புறார்
நின்றுநில மிசைவீழ்ந்து
நெடிதுயிர்த்து நேரிறைஞ்சி
வன்தொண்டர் திருவாரூர்
மயங்குமா லையிற்புகுந்து
துன்றுசடைத் தூவாயார்
தமைமுன்னந் தொழவணைந்தார்.
302

பொங்குதிருத் தொண்டருடன்
உள்ளணைந்து புக்கிறைஞ்சி
துங்கவிசைத் திருப்பதிகம்
தூவாயா என்றெடுத்தே
இங்கெமது துயர்களைந்து
கண்காணக் காட்டாயென்
றங்கணர்தம் முன்னின்று
பாடியருந் தமிழ்புனைந்தார்.
303

ஆறணியுஞ் சடையாரைத்
தொழுதுபுறம் போந்தங்கண்
வேறிருந்து திருத்தொண்டர்
விரவுவா ருடன்கூடி
ஏறுயர்த்தார் திருமூலட்
டானத்துள் இடைதெரிந்து
மாறில்திரு அத்தயா
மத்திறைஞ்ச வந்தணைந்தார்.
304

ஆதிதிரு அன்பரெதிர்
அணையஅவர் முகநோக்கிக்
கோதிலிசை யாற்குருகு
பாயவெனக் கோத்தெடுத்தே
ஏதிலார் போல்வினவி
ஏசறவால் திருப்பதிகம்
காதல்புரி கைக்கிளையாற்
பாடியே கலந்தணைவார்.
305
Go to top

சீர்பெருகுந் திருத்தேவா
சிரியன்முன் சென்றிறைஞ்சிக்
கார்விரவு கோபுரத்தைக்
கைதொழுதே உட்புகுந்து
தார்பெருகு பூங்கோயில்
தனைவணங்கிச் சார்ந்தணைவார்
ஆர்வமிகு பெருங்காத
லால்அவனி மேல்வீழ்ந்தார்.
306

வீழ்ந்தெழுந்து கைதொழுது
முன்னின்று விம்மியே
வாழ்ந்தமலர்க் கண்ணொன்றால்
ஆராமல் மனமழிவார்
ஆழ்ந்ததுயர்க் கடலிடைநின்
றடியேனை யெடுத்தருளித்
தாழ்ந்தகருத் தினைநிரப்பிக்
கண்தாரும் எனத்தாழ்ந்தார்.
307

திருநாவ லூர்மன்னர்
திருவாரூர் வீற்றிருந்த
பெருமானைத் திருமூலட்
டானஞ்சேர் பிஞ்ஞகனைப்
பருகாஇன் னமுதத்தைக்
கண்களாற் பருகுதற்கு
மருவார்வத் துடன்மற்றைக்
கண்தாரீ ரெனவணங்கி.
308

மீளா வடிமை எனவெடுத்து
309

பூத முதல்வர் புற்றிடங்கொண்
டிருந்த புனிதர் வன்தொண்டர்
காதல் புரிவே தனைக்கிரங்கிக்
கருணைத் திருநோக் களித்தருளிக்
சீத மலர்க்கண் கொடுத்தருளச்
செவ்வே விழித்து முகமலர்ந்து
பாத மலர்கள் மேற்பணிந்து
வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய்.
310
Go to top

விழுந்தும் எழுந்தும் பலமுறையால்
மேவிப் பணிந்து மிகப்பரவி
எழுந்த களிப்பி னாலாடிப்
பாடி இன்ப வெள்ளத்தில்
அழுந்தி யிரண்டு கண்ணாலும்
அம்பொற் புற்றி னிடையெழுந்த
செழுந்தண் பவளச் சிவக்கொழுந்தின்
அருளைப் பருகித் திளைக்கின்றார்.
311

காலம் நிரம்பத் தொழுதேத்திக்
கனக மணிமா ளிகைக்கோயில்
ஞால முய்ய வரும்நம்பி
நலங்கொள் விருப்பால் வலங்கொண்டு
மாலும் அயனு முறையிருக்கும்
வாயில் கழியப் புறம்போந்து
சீல முடைய அன்பருடன்
தேவா சிரியன் மருங்கணைந்தார்.
312

நங்கை பரவை யார்தம்மை
நம்பி பிரிந்து போனதற்பின்
தங்கு மணிமா ளிகையின்கண்
தனிமை கூரத் தளர்வார்க்குக்
கங்குல் பகலாய்ப் பகல்கங்கு
லாகிக் கழியா நாளெல்லாம்
பொங்கு காதல் மீதூரப்
புலர்வார் சிலநாள் போனதற்பின்.
313

செம்மை நெறிசேர் திருநாவ
லூரர் ஒற்றி யூர்சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார்
தம்மைக் குலவு மணம்புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம்அவர்பால்
விட்டார் வந்து கட்டுரைப்பத்
தம்மை யறியா வெகுளியினால்
தரியா நெஞ்சி னொடுந்தளர்வார்.
314

மென்பூஞ் சயனத் திடைத்துயிலும்
மேவார் விழித்தும் இனிதமரார்
பொன்பூந் தவிசின் மிசையினிரார்
நில்லார் செல்லார் புறம்பொழியார்
மன்பூ வாளி மழைகழியார்
மறவார் நினையார் என்செய்வார்
என்பூ டுருக்கும் புலவியோ
பிரிவோ இரண்டின் இடைப்பட்டார்.
315
Go to top

ஆன கவலைக் கையறவால்
அழியும் நாளில் ஆரூரர்
கூனல் இளவெண் பிறைக்கண்ணி
முடியார் கோயில் முன்குறுகப்
பானல் விழியார் மாளிகையில்
பண்டு செல்லும் பரிசினால்
போன பெருமைப் பரிசனங்கள்
புகுதப் பெறாது புறநின்றார்.
316

நின்ற நிலைமை அவர்கள் சிலர்
நிலவு திருவா ரூரர்எதிர்
சென்று மொழிவார் திருவொற்றி
யூரில் நிகழ்ந்த செய்கையெலாம்
ஒன்று மொழியா வகையறிந்தங்
குள்ளார் தள்ள மாளிகையில்
இன்று புறமுஞ் சென்றெய்தப்
பெற்றி லோம்என் றிறைஞ்சினார்.
317

மற்ற மாற்றங் கேட்டழிந்த
மனத்த ராகி வன்தொண்டர்
உற்ற இதனுக் கினியென்னோ
செயலேன் றுயர்வார் உலகியல்பு
கற்ற மாந்தர் சிலர் தம்மைக்
காதற் பரவை யார்கொண்ட
செற்ற நிலைமை யறிந்தவர்க்குத்
தீர்வு சொல்லச் செலவிட்டார்.
318

நம்பி யருளால் சென்றவரும்
நங்கை பரவை யார்தமது
பைம்பொன் மணிமா ளிகையணைந்து
பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவிக் கடலழுந்தும்
மின்னே ரிடையார் முன்னெய்தி
எம்பி ராட்டிக் கிதுதகுமோ
என்று பலவும் எடுத்துரைப்பார்.
319

பேத நிலைமை நீதியினாற்
பின்னும் பலவுஞ் சொன்னவர்முன்
மாத ரவரும் மறுத்துமனங்
கொண்ட செற்றம் மாற்றாராய்
ஏதம் மருவு மவர்திறத்தில்
இந்த மாற்றம் இயம்பில்உயிர்
போத லொழியா தெனவுரைத்தார்
அவரும் அஞ்சிப் புறம்போந்தார்.
320
Go to top

போந்து புகுந்த படியெல்லாம்
பூந்தண் பழன முனைப்பாடி
வேந்தர் தமக்கு விளம்புதலும்
வெருவுற் றயர்வார் துயர்வேலை
நீந்தும் புணையாந் துணைகாணார்
நிகழ்ந்த சிந்தா குலம்நெஞ்சில்
காந்த அழிந்து தோய்ந்தெழார்
கங்குல் இடையா மக்கடலுள்.
321

அருகு சூழ்ந்தார் துயின்றுதிரு
அத்த யாமம் பணிமடங்கிப்
பெருகு புவனஞ் சலிப்பின்றிப்
பேயும் உறங்கும் பிறங்கிருள்வாய்
முருகு விரியு மலர்க்கொன்றை
முடிமேல் அரவும் இளமதியுஞ்
செருகு மொருவர் தோழர்தனி
வருந்தி இருந்து சிந்திப்பார்.
322

முன்னை வினையால் இவ்வினைக்கு
மூல மானாள் பாலணைய
என்னை உடையாய் நினைந்தருளாய்
இந்த யாமத் தெழுந்தருளி
அன்ன மனையாள் புலவியினை
அகற்றில் உய்ய லாமன்றிப்
பின்னை யில்லைச் செயவென்று
பெருமா னடிகள் தமைநினைந்தார்.
323

அடியார் இடுக்கண் தரியாதார்
ஆண்டு கொண்ட தோழர்குறை
முடியா திருக்க வல்லரே
முற்று மளித்தாள் பொற்றளிர்க்கைத்
தொடியார் தழும்பும் முலைச்சுவடும்
உடையார் தொண்டர் தாங்காணும்
படியால் அணைந்தார் நெடியோனுங்
காணா அடிகள் படிதோய.
324

தம்பி ரானார் எழுந்தருளத்
தாங்கற் கரிய மகிழ்ச்சியினால்
கம்பி யாநின் றவயவங்கள்
கலந்த புளகம் மயிர்முகிழ்ப்ப
நம்பி யாரூ ரரும்எதிரே
நளின மலர்க்கை தலைகுவிய
அம்பி காவல் லவர்செய்ய
அடித்தா மரையின் கீழ்வீழ்ந்தார்.
325
Go to top

விழுந்து பரவி மிக்கபெரு
விருப்பி னோடும் எதிர் போற்றி
எழுந்த நண்பர் தமைநோக்கி
யென்நீ யுற்ற தென்றருளத்
தொழுந்தங் குறையை விளம்புவார்
யானே தொடங்குந் துரிசிடைப்பட்
டழுந்து மென்னை யின்னமெடுத்
தாள வேண்டு முமக்கென்று.
326

அடியே னங்குத் திருவொற்றி
யூரில் நீரே யருள்செய்ய
வடிவே லொண்கண் சங்கிலியை
மணஞ்செய் தணைந்த திறமெல்லாம்
கொடியே ரிடையாள் பரவைதா
னறிந்து தன்பால் யான்குறுகின்
முடிவே னென்று துணிந்திருந்தா
ளென்னான் செய்வ தெனமொழிந்து.
327

நாய னீரே நான்உமக்கிங்
கடியே னாகில் நீர்எனக்குத்
தாயி னல்ல தோழருமாந்
தம்பி ரானா ரேயாகில்
ஆய வறிவும் இழந்தழிவேன்
அயர்வு நோக்கி அவ்வளவும்
போயிவ் விரவே பரவையுறு
புலவி தீர்த்துத் தாருமென.
328

அன்பு வேண்டும் தம்பெருமான்
அடியார் வேண்டிற் றேவேண்டி
முன்பு நின்று விண்ணப்பம்
செய்த நம்பி முகம்நோக்கித்
துன்பம் ஒழிநீ யாம்உனக்கோர்
தூத னாகி இப்பொழுதே
பொன்செய் மணிப்பூண் பரவைபால்
போகின் றோம்என் றருள்செய்தார்.
329

எல்லை யில்லாக் களிப்பின ராய்
இறைவர் தாளில் வீழ்ந்தெழுந்து
வல்ல பரிசெல் லாந்துதித்து
வாழ்ந்து நின்ற வன்தொண்டர்
முல்லை முகைவெண் ணகைப்பரவை
முகில்சேர் மாடத் திடைச்செல்ல
நில்லா தீண்ட எழுந்தருளி
நீக்கும் புலவி யெனத்தொழுதார்.
330
Go to top

அண்டர் வாழக் கருணையினால்
ஆல காலம் அமுதாக
உண்ட நீலக் கோலமிடற்
றொருவர் இருவர்க் கறிவரியார்
வண்டு வாழும் மலர்க்கூந்தல்
பரவை யார்மா ளிகைநோக்கித்
தொண்ட னார்தம் துயர்நீக்கத்
தூத னாராய் எழுந்தருள.
331

தேவா சிரியன் முறையிருக்குந்
தேவ ரெல்லாஞ் சேவித்துப்
போவார் தம்மில் வேண்டுவார்
போத ஒழிந்தார் புறத்தொழிய
ஓவா அணுக்கச் சேவகத்தில்
உள்ளோர் பூத கணநாதர்
மூவா முனிவர் யோகிகளின்
முதலா னார்கள் முன்போக.
332

அருகு பெரிய தேவருடன்
அணைந்து வரும்அவ் விருடிகளும்
மருவு நண்பின் நிதிக்கோனும்
முதலா யுள்ளோர் மகிழ்ந்தேத்தத்
தெருவும் விசும்பும் நிறைந்துவிரைச்
செழும்பூ மாரி பொழிந்தலையப்
பொருவி லன்பர் விடுந்தூதர்
புனித வீதி யினிற்போத.
333

மாலும் அயனுங் காணாதார்
மலர்த்தாள் பூண்டு வந்திறைஞ்சும்
காலம் இதுவென் றங்கவரை
அழைத்தா லென்னக் கடல்விளைத்த
ஆல மிருண்ட கண்டத்தான்
அடித்தா மரைமேற் சிலம்பொலிப்ப
நீல மலர்க்கட் பரவையார்
திருமா ளிகையை நேர்நோக்கி.
334

இறைவர் விரைவில் எழுந்தருள
எய்து மவர்கள் பின்தொடர
அறைகொள் திரைநீர் தொடர்சடையில்
அரவு தொடர அரியஇளம்
பிறைகொள் அருகு நறைஇதழிப்
பிணையல் சுரும்பு தொடரவுடன்
மறைகள் தொடர வன்தொண்டர்
மனமுந் தொடர வரும்பொழுது.
335
Go to top

பெருவீ ரையினும் மிகமுழங்கிப்
பிறங்கு மதகுஞ் சரம்உரித்து
மரவீ ருரிவை புனைந்தவர்தம்
மருங்கு சூழ்வார் நெருங்குதலால்
திருவீ தியினில் அழகரவர்
மகிழுஞ் செல்வத் திருவாரூர்
ஒருவீ தியிலே சிவலோகம்
முழுதுங் காண வுளதாமால்.

336

ஞாலம் உய்ய எழுந்தருளும்
நம்பி தூதர் பரவையார்
கோல மணிமா ளிகைவாயில்
குறுகு வார்முன் கூடத்தம்
பால்அங் கணைந்தார் புறநிற்பப்
பண்டே தம்மை யர்ச்சிக்கும்
சீல முடைய மறைமுனிவர்
ஆகித் தனியே சென்றணைந்தார்.
337

சென்று மணிவா யிற்கதவம்
செறிய அடைத்த அதன்முன்பு
நின்று பாவாய் திறவாய்என்று
அழைப்ப நெறிமென் குழலாரும்
ஒன்றுந் துயிலா துணர்ந்தயர்வார்
உடைய பெருமான் பூசனைசெய்
துன்றும் புரிநூல் மணிமார்பர்
போலும் அழைத்தார் எனத்துணிந்து.
338

பாதி மதிவாழ் முடியாரைப்
பயில்பூ சனையின் பணிபுரிவார்
பாதி யிரவில் இங்கணைந்த
தென்னோ என்று பயமெய்திப்
பாதி உமையாள் திருவடிவிற்
பரம ராவ தறியாதே
பாதி மதிவாள் நுதலாரும்
பதைத்து வந்து கடைதிறந்தார்.
339

மன்னும் உரிமை வன்தொண்டர்
வாயில் தூதர் வாயிலிடை
முன்னின் றாரைக் கண்டிறைஞ்சி
முழுது முறங்கும் பொழுதின்கண்
என்னை யாளும் பெருமானிங்
கெய்தி யருளி னாரென்ன
மின்னு மணிநூ லணிமார்பீர்
எய்த வேண்டிற் றென்என்றார்.
340
Go to top

கங்கைநீர் கரந்த வேணி
கரந்தவர் அருளிச் செய்வார்
நங்கைநீ மறாது செய்யின்
நான்வந்த துரைப்ப தென்ன
அங்கயல் விழியி னாரும்
அதனைநீ ரருளிச் செய்தால்
இங்கெனக் கிசையு மாகில்
இசையலாம் என்று சொல்லி.
341

என்னினைந் தணைந்த தென்பால்
இன்னதென் றருளிச் செய்தால்
பின்னைய தியலு மாகில்
ஆம்எனப் பிரானார் தாமும்
மின்னிடை மடவாய் நம்பி
வரஇங்கு வேண்டு மென்ன
நன்னுத லாருஞ் சால
நன்றுநம் பெருமை யென்பார்.
342

பங்குனித் திருநா ளுக்குப்
பண்டுபோல் வருவா ராகி
இங்கெனைப் பிரிந்து போகி
ஒற்றியூர் எய்தி யங்கே
சங்கிலித் தொடக்குண் டாருக்
கிங்கொரு சார்வுண் டோநீர்
கங்குலின் வந்து சொன்ன
காரியம் அழகி தென்றார்.
343

நாதரும் அதனைக் கேட்டு
நங்கைநீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்துக் கொள்ளா
தெய்திய வெகுளி நீங்கி
நோதகவு ஒழித்தற் கன்றோ
நுன்னையான் வேண்டிக் கொண்ட
தாதலின் மறுத்தல் செய்ய
அடாதென அருளிச் செய்தார்.
344

அருமறை முனிவ ரான
ஐயரைத் தைய லார்தாம்
கருமம்ஈ தாக நீர்
கடைத்தலை வருதல் நுந்தம்
பெருமைக்குத் தகுவ தன்றால்
ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற் கிசையேன் நீரும்
போம்என மறுத்துச் சொன்னார்.
345
Go to top

நம்பர்தாம் அதனைக் கேட்டு
நகையும்உட் கொண்டு மெய்ம்மைத்
தம்பரி சறியக் காட்டார்
தனிப்பெருந் தோழ னார்தம்
வெம்புறு வேட்கை காணும்
திருவிளை யாட்டின் மேவி
வம்பலர் குழலி னார்தாம்
மறுத்ததே கொண்டு மீண்டார்.
346

தூதரைப் போக விட்டு
வரவுபார்த் திருந்த தொண்டர்
நாதரைஅறிவி லாதேன்
நன்னுதல் புலவி நீக்கப்
போதரத் தொழுதேன் என்று
புலம்புவார் பரவை யாரைக்
காதலில் இசைவு கொண்டு
வருவதே கருத்துட் கொள்வார்.
347

போயவள் மனையில் நண்ணும்
புண்ணியர் என்செய் தாரோ
நாயனார் தம்மைக் கண்டால்
நன்னுதல் மறுக்கு மோதான்
ஆயஎன் அயர்வு தன்னை
அறிந்தெழுந் தருளி னார்தாம்
சேயிழை துனிதீர்த் தன்றி
மீள்வதும் செய்யார் என்று.
348

வழியெதிர் கொள்ளச் செல்வர்
வரவுகா ணாது மீள்வர்
அழிவுற மயங்கி நிற்பர்
அசைவுடன் இருப்பர் நெற்றி
விழியவர் தாழ்த்தா ரென்று
மீளவு மெழுவர் மாரன் பொழிமலர் மாரி வீழ
ஒதுங்குவார் புன்க ணுற்றார்.
349

பரவையார் தம்பால் நம்பி
தூதராம் பாங்கிற் போன
அரவணி சடையார் மீண்டே
அறியுமாறு அணையும் போதில்
இரவுதான் பகலாய்த் தோன்ற
எதிரெழுந் தணையை விட்ட
உரவுநீர் வெள்ளம் போல
ஓங்கிய களிப்பிற் சென்றார்.
350
Go to top

சென்றுதம் பிரானைத் தாழ்ந்து
திருமுகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட் டோரார்
உறுதிசெய் தணைந்தா ரென்றே
அன்றுநீ ராண்டு கொண்ட
அதனுக்குத் தகவே செய்தீர்
இன்றிவள் வெகுளி யெல்லாந்
தீர்த்தெழுந் தருளி என்றார்.
351

அம்மொழி விளம்பு நம்பிக்
கையர்தா மருளிச் செய்வார்
நம்மைநீ சொல்ல நாம்போய்ப்
பரவைதன் இல்லம் நண்ணிக்
கொம்மைவெம் முலையி னாட்குன்
திறமெலாங் கூறக் கொள்ளாள்
வெம்மைதான் சொல்லி நாமே
வேண்டவும் மறுத்தா ளென்றார்.
352

அண்ணலார் அருளிச் செய்யக்
கேட்டஆ ரூரர் தாமும்
துண்ணென நடுக்க முற்றே
தொழுதுநீ ரருளிச் செய்த
வண்ணமும் அடியா ளான
பரவையோ மறுப்பாள் நாங்கள்
எண்ணஆர் அடிமைக் கென்ப
தின்றறி வித்தீ ரென்று.
353

வானவர் உய்ய வேண்டி
மறிகடல் நஞ்சை யுண்டீர்
தானவர் புரங்கள் வேவ
மூவரைத் தவிர்த்தாட் கொண்டீர்
நான்மறைச் சிறுவர்க் காகக்
காலனைக் காய்ந்து நட்டீர்
யான்மிகை யுமக்கின் றானால்
என்செய்வீர் போதா தென்றார்.
354

ஆவதே செய்தீர் இன்றென்
அடிமைநீர் வேண்டா விட்டால்
பாவியேன் தன்னை அன்று
வலியஆட் கொண்ட பற்றென்
நோவும்என் னழிவுங் கண்டீர்
நுடங்கிடை யவள்பால் இன்று
மேவுதல் செய்யீ ராகில்
விடுமுயிர் என்று வீழ்ந்தார்.
355
Go to top

தம்பிரான் அதனைக் கண்டு
தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால் நோக்கி
நாம்இன்னம் அவள்பாற் போய்அக்
கொம்பினை இப்போ தேநீ
குறுகுமா கூறு கின்றோம்
வெம்புறு துயர்நீங் கென்றார்
வினையெலாம் விளைக்க வல்லார்.
356

மயங்கிய நண்பர் உய்ய
வாக்கெனும் மதுர வாய்மை
நயங்கிள ரமுதம் நல்க
நாவலூர் மன்னர் தாமும்
உயங்கிய கலக்கம் நீக்கி
யும்மடித் தொழும்ப னேனைப்
பயங்கெடுத்து இவ்வா றன்றோ
பணிகொள்வ தென்று போற்ற.
357

அன்பர்மேற் கருணை கூர
ஆண்டவர் மீண்டுஞ் செல்லப்
பின்புசென்றிறைஞ்சி நம்பி
பேதுற வோடு மீண்டார்
முன்புடன் போதா தாரும்
முறைமையிற் சேவித் தேகப்
பொன்புரி சடையார் மாதர்
புனிதமா ளிகையிற் சென்றார்.
358

மதிநுதற் பரவை யார்தாம்
மறையவர் போன பின்பு
முதிர்மறை முனியாய் வந்தார்
அருளுடை முதல்வ ராகும்
.அதிசயம் பலவும் தோன்ற
அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்
எதிர்மொழி எம்பி ரான்முன்
என்செய மறுத்தேன் என்பார்.
359

கண்துயில் எய்தார் வெய்ய
கையற வெய்தி ஈங்குஇன்று
அண்டர்தம் பிரானார் தோழர்க்
காகஅர்ச் சிப்பார் கோலம்
கொண்டணைந் தவரை யானுட்
கொண்டிலேன் பாவி யேன்என்
றொண்சுடர் வாயி லேபார்த்
துழையரோ டழியும் போதில்.
360
Go to top

வெறியுறு கொன்றை வேணி
விமலருந் தாமாந் தன்மை
அறிவுறு கோலத் தோடும்
மளவில்பல் பூத நாதர்
செறிவுறு தேவர் யோகர்
முனிவர்கள் சூழ்ந்து செல்ல
மறுவில்சீர்ப் பரவை யார்தம்
மாளிகை புகுந்தார் வந்து.
361

பாரிடத் தலைவர் முன்னாம்
பல்கண நாதர் தேவர்
நேர்வுறு முனிவர் சித்தர்
இயக்கர்கள் நிறைத லாலே
பேரரு ளாள ரெய்தப்
பெற்றமா ளிகைதான் தென்பால்
சீர்வளர் கயிலை வெள்ளித்
திருமலை போன்ற தன்றே.
362

ஐயர்அங் கணைந்த போதில்
அகிலலோ கத்துள் ளாரும்
எய்தியே செறிந்து சூழ
எதிர்கொண்ட பரவை யார்தாம்
மெய்யுறு நடுக்கத் தோடு
மிக்கெழும் மகிழ்ச்சி பொங்கச்
செய்யதா ளிணைமுன் சேர
விரைவினாற் சென்று வீழ்ந்தார்.
363

அரிஅயற் கரியார் தாமும்
ஆயிழை யாரை நோக்கி
உரிமையால் ஊரன் ஏவ
மீளவும் உன்பால் வந்தோம்
முருகலர் குழலாய் இன்னம்
முன்புபோல் மறாதே நின்பால்
பிரிவுற வருந்து கின்றான்
வரப்பெற வேண்டும் என்றார்.
364

பெருந்தடங் கண்ணி னாரும்
பிரான்முன்பு மிகவும் அஞ்சி
வருந்திய வுள்ளத் தோடு
மலர்க்கரங் குழல்மேற் கொண்டே
அருந்திரு மறையோ ராகி
அணைந்தீர்முன் னடியேன் செய்த
இருந்தவப் பயனாம் என்ன
எய்திய நீரோ என்பார்.
365
Go to top

துளிவளர் கண்ணீர் வாரத்
தொழுதுவிண் ணப்பஞ் செய்வார்
ஒளிவளர் செய்ய பாதம்
வருந்தஓர் இரவு மாறா
தளிவரும் அன்பர்க் காக
அங்கொடிங் குழல்வீ ராகி
எளிவரு வீரு மானால்
என்செய்கேன் இசையா தென்றார்.
366

நங்கைநின் தன்மைக் கேற்கும்
நன்மையே மொழிந்தா யென்று
மங்கையோர் பாகம் வைத்த
வள்ளலார் விரைந்து போகத்
திங்கள் வாணுதலி னாருஞ்
சென்றுபின் னிறைஞ்சி மீண்டார்
எங்களை யாளும் நம்பி
தூதர்மீண் டேகு கின்றார்.
367

ஆதியும் மேலும் மால்அயன்
நாடற் கருளாதார்
தூதினில் ஏகித் தொண்டரை
யாளுந் தொழில்கண்டே
வீதியில் ஆடிப் பாடி
மகிழ்ந்தே மிடைகின்றார்
பூதியில் நீடும் பல்கண
நாதர் புகழ்வீரர்.
368

அன்னவர் முன்னும் பின்னும்
மருங்கும் அணைவெய்த
மின்னிடை யார்பால் அன்பரை
உய்க்கும் விரைவோடும்
சென்னியில் நீடுங் கங்கை
ததும்பத் திருவாரூர்
மன்னவ னார்அம் மறையவ
னார்பால் வந்துற்றார்.
369

அன்பரும் என்பால் ஆவி
யளிக்கும் படிபோனார்
என்செய்து மீள்வார் இன்னமும்
என்றே யிடர்கூரப்
பொன்புரி முந்நூல் மார்பினர்
செல்லப் பொலிவீதி
முன்புற நேருங் கண்ணிணை
தானும் முகிழாரால்.
370
Go to top

அந்நிலை மைக்கண் மன்மதன்
வாளிக் கழிவார்தம்
மன்னுயிர் நல்குந் தம்பெரு
மானார் வந்தெய்த
முன்னெதிர் சென்றே மூவுல
குஞ்சென் றடையுந்தாள்
சென்னியில் வைத்தென் சொல்லுவ
ரென்றே தெளியாதார்.
371

எம்பெரு மானீர் என்னுயிர்
காவா திடர்செய்யும்
கொம்பனை யாள்பால் என்கொடு
வந்தீர் குறையென்னத்
தம்பெரு மானும் தாழ்குழல்
372

நந்தி பிரானார் வந்தருள்
செய்ய நலமெய்தும்
சிந்தையு ளார்வங் கூர்களி
யெய்தித் திகழ்கின்றார்
பந்தமும் வீடும் தீரருள்
செய்யும் படிசெய்தீர்
எந்தைபி ரானே என்னினி
யென்பால் இடரென்றார்.
373

என்றடி வீழும் நண்பர்தம்
அன்புக் கெளிவந்தார்
சென்றணை நீஅச் சேயிழை
பாலென் றருள்செய்து
வென்றுயர் சேமேல் வீதி
விடங்கப் பெருமாள் தம்
பொன்றிகழ் வாயிற் கோயில்
புகுந்தார் புவிவாழ.
374

தம்பிரா னார்பின் சென்று
375
Go to top

முன்துயில் உணர்ந்து சூழ்ந்த
பரிசனம் மருங்கு மொய்ப்ப
மின்திகழ் பொலம்பூ மாரி
விண்ணவர் பொழிந்து வாழ்த்த
மன்றல்செய் மதுர சீத
சீகரங் கொண்டு மந்தத்
தென்றலும் எதிர்கொண் டெய்துஞ்
சேவகம் முன்பு காட்ட.
376

மாலைதண் கலவைச் சேறு
மான்மதச் சாந்து பொங்கும்
கோலநற் பசுங்கர்ப் பூரம்
குங்குமம் முதலா யுள்ள
சாலுமெய்க் கலன்கள் கூடச்
சாத்தும்பூ ணாடை வர்க்கம்
பாலனம் பிறவும் ஏந்தும்
பரிசனம் முன்பு செல்ல.
377

இவ்வகை இவர்வந் தெய்த
எய்திய விருப்பி னோடும்
மைவளர் நெடுங்கண் ணாரும்
மாளிகை அடைய மன்னும்
செய்வினை அலங்கா ரத்துச்
சிறப்பணி பலவுஞ் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம்
நிறைகுடம் நிரைத்துப் பின்னும்.
378

பூமலி நறும்பொன் தாமம்
புனைமணிக் கோவை நாற்றிக்
காமர்பொற் சுண்ணம் வீசிக்
கமழ்நறுஞ் சாந்து நீவித்
தூமலர் வீதி சூழ்ந்த
தோகையர் வாழ்த்தத் தாமும்
மாமணி வாயில் முன்பு
வந்தெதி ரேற்று நின்றார்.
379

வண்டுலாங் குழலார் முன்பு
வன்தொண்டர் வந்து கூடக்
கண்டபோ துள்ளங் காதல்
வெள்ளத்தின் கரைகா ணாது
கொண்டநாண் அச்சங் கூர
வணங்கஅக் குரிசி லாரும்
தண்டளிர்ச் செங்கை பற்றிக்
கொண்டுமா ளிகையுள் சார்ந்தார்.
380
Go to top

இருவருந் தம்பி ரானார்
தாமிடை யாடிச் செய்த
திருவருட் கருணை வெள்ளத்
திறத்தினைப் போற்றிச் சிந்தை
மருவிய வின்ப வெள்ளத்
தழுந்திய புணர்ச்சி வாய்ப்ப
ஒருவரு ளொருவர் மேவு
நிலைமையி லுயிரொன் றானார்.
381

ஆரணக் கமலக் கோயின்
மேவிப்புற் றிடங்கொண் டாண்ட
நீரணி வேணி யாரை
.
382

நம்பியா ரூரர் நெஞ்சில்
நடுக்கம்ஒன் றின்றி நின்று
தம்பிரா னாரைத் தூது
தையல்பால் விட்டார் என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை
ஏயர்கோ னார்தாங் கேட்டு
வெம்பினார் அதிச யித்தார்
வெருவினார் விளம்ப லுற்றார்.
383

நாயனை அடியான் ஏவும்
காரியம் நன்று சாலம்
ஏயுமென் றிதனைச் செய்வான்
தொண்டனாம் என்னே பாவம்
பேயனேன் பொறுக்க வொண்ணாப்
பிழையினைச் செவியால் கேட்ப
தாயின பின்னும் மாயா
திருந்ததென் னாவி யென்பார்.
384

காரிகை தன்பால் செல்லும்
காதலால் ஒருவன் ஏவப்
பாரிடை நடந்து செய்ய
பாததா மரைகள் நோவத்
தேரணி வீதியூடு செல்வது
வருவ தாகி
ஓரிர வெல்லாம் தூதுக்
குழல்வராம் ஒருவ ரென்று.
385
Go to top

நம்பர்தாம் அடியார் ஆற்றாராகியே
நண்ணி னாரேல்
உம்பரார் கோனும் மாலும்அயனுநேர்
உணர வொண்ணா
எம்பிரா னிசைந்தார் ஏவப்
பெறுவதே இதனுக் குள்ளம்
கம்பியா தவளை யான்முன்
காணுநாள் எந்நா ளென்று.
386

அரிவைகா ரணத்தி னாலே
ஆளுடைப் பரமர் தம்மை
இரவினில் தூது போக
ஏவியங் கிருந்தான் தன்னை
வரவெதிர் காண்பே னாகில்
வருவதென் னாங்கொல் என்று
விரவிய செற்றம் பற்றி
விள்ளும்உள் ளத்த ராகி.
387

ஈறிலாப் புகழின் ஓங்கும்
ஏயர்கோ னார்தாம் எண்ணப்
பேறிது பெற்றார் கேட்டுப்
பிழையுடன் படுவா ராகி
வேறினி யிதற்குத் தீர்வு
வேண்டுவார் விரிபூங் கொன்றை
ஆறிடு சடைய னாருக்
கதனைவிண் ணப்பஞ் செய்து.
388

நாள்தொறும் பணிந்து போற்ற
நாதரும் அதனை நோக்கி
நீடிய தொண்டர் தம்முள்
இருவரும் மேவும் நீர்மை
கூடுதல் புரிவார் ஏயர்
குரிசிலார் தம்பால் மேனி
வாடுறு சூலை தன்னை
அருளினார் வருந்து மாற்றால்.
389

ஏதமில் பெருமைச் செய்கை
ஏயர்தம் பெருமான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை
அனல்செய்வேல் குடைவ தென்ன
வேதனை மேன்மேற் செய்ய
மிகஅதற் குடைந்து வீழ்ந்து
பூதநா யகர்தம் பொற்றாள்
பற்றியே போற்று கின்றார்.
390
Go to top

சிந்தையால் வாக்கால் அன்பர்
திருந்தடி போற்றி செய்ய
எந்தமை யாளும் ஏயர்
காவலர் தம்பால் ஈசர்
வந்துனை வருத்துஞ் சூலை
வன்தொண்டன் தீர்க்கி லன்றி
முந்துற வொழியா தென்று
மொழிந்தருள் செய்யக் கேட்டு.
391

எம்பிரான் எந்தை தந்தை
தந்தைஎங் கூட்ட மெல்லாம்
தம்பிரான் நீரே யென்று
வழிவழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை
யென்னைநின் றீருஞ் சூலை
வம்பென ஆண்டு கொண்டான்
ஒருவனோ தீர்ப்பான் வந்து.
392

மற்றவன் தீர்க்கில் தீரா
தொழிந்தெனை வருத்தல் நன்றால்
பெற்றம்மே லுயர்த்தீர் செய்யும்
பெருமையை அறிந்தார் யாரே
உற்றவன் தொண்டற் கேயாம்
393

வன்தொண்டர் தம்பால் சென்று
வள்ளலா ரருளிச் செய்வார்
இன்றுநம் ஏவ லாலே
ஏயர்கோ னுற்ற சூலை
சென்றுநீ தீர்ப்பா யாகென்
றருள்செயச் சிந்தை யோடு
நன்றுமெய்ம் மகிழ்ந்து போற்றி
வணங்கினார் நாவ லூரர்.
394

அண்ணலார் அருளிச் செய்து
நீங்கஆரூரர் தாமும்
விண்ணவர் தம்பி ரானார்
ஏவலால் விரைந்து செல்வார்
கண்ணிய மனத்தின் மேவுங்
காதலாற் கலிக்கா மர்க்குத்
திண்ணிய சூலை தீர்க்க
வருந்திறஞ் செப்பி விட்டார்.
395
Go to top

நாதர்தம் அருளால் நண்ணும்
சூலையும் அவர்பாற் கேட்ட
கேதமும் வருத்த மீண்டும்
வன்தொண்டர் வரவு கேட்டுத்
தூதனாய் எம்பி ரானை
ஏவினான் சூலை தீர்க்கும்
ஏதமிங் கெய்த வெய்தில்
யான்செய்வது என்னாம் என்பார்.
396

மற்றவன் இங்கு வந்து
தீர்ப்பதன் முன்நான் மாயப்
பற்றிநின் றென்னை நீங்காப்
பாதகச் சூலை தன்னை
உற்றஇவ் வயிற்றி னோடும்
கிழிப்பன்என் றுடைவாள் தன்னால்
செற்றிட வுயிரி னோடும்
சூலையுந் தீர்ந்த தன்றே.
397

கருதரும் பெருமை நீர்மைக்
கலிக்காமர் தேவி யாரும்
பொருவருங் கணவ ரோடு
போவது புரியுங் காலை
மருவிஇங் கணைந்தார் நம்பி
என்றுமுன் வந்தார் கூற
ஒருவரும் அழுதல் செய்யா
தொழிகவென் றுரைத்துப் பின்னும்.
398

கணவர்தஞ் செய்கை தன்னைக்
கரந்துகா வலரை நம்பி
அணைவுறும் பொழுது சால
அலங்கரித் தெதிர்போம் என்னப்
புணர்நிலை வாயில் தீபம்
பூரண கும்பம் வைத்துத்
துணர்மலர் மாலை தூக்கித்
தொழுதெதிர் கொள்ளச் சென்றார்.
399

செம்மைசேர் சிந்தை மாந்தர்
சென்றெதிர் கொண்டு போற்ற
நம்மையா ளுடைய நம்பி
நகைமுகம் அவர்க்கு நல்கி
மெய்ம்மையாம் விருப்பி னோடும்
மேவியுட் புகுந்து மிக்க
மொய்ம்மலர்த் தவிசின் மீது
முகம்மலர்ந் திருந்த போது.
400
Go to top

பான்மைஅர்ச் சனைக ளெல்லாம்
பண்பினில் வழாமை ஏய்ந்த
நான்மறை தொடர்ந்த வாய்மை
நம்பியா ரூரர் கொண்டிங்
கியான்மிக வருந்து கின்றேன்
ஏயர்கோ னார்தாம் உற்ற
ஊனவெஞ் சூலை நீக்கி
யுடனிருப் பதனுக் கென்றார்.
401

மாதர்தம் ஏவ லாலே
மனைத்தொழில் மாக்கள் மற்றிங்
கேதமொன் றில்லை யுள்ளே
பள்ளிகொள் கின்றார் என்னத்
தீதணை வில்லை யேனும்
என்மனந் தெருளா தின்னம்
ஆதலால் அவரைக் காண
வேண்டுமென் றருளிச் செய்தார்.
402

வன்தொண்டர் பின்னுங் கூற
மற்றவர் தம்மைக் காட்டத்
துன்றிய குருதி சோரத்
தொடர்குடர் சொரிந்துள் ளாவி
பொன்றியே கிடந்தார் தம்மைக்
கண்டபின் புகுந்த வாறு
நன்றென மொழிந்து நானும்
நண்ணுவேன் இவர்முன் பென்பார்.
403

கோளுறு மனத்த ராகிக்
குற்றுடை வாளைப் பற்ற
ஆளுடைத் தம்பி ரானார்
அருளினால் அவரும் உய்ந்து
கேளிரே யாகிக் கெட்டேன்
எனவிரைந் தெழுந்து கையில்
வாளினைப் பிடித்துக் கொள்ள
வன்தொண்டர் வணங்கி வீழ்ந்தார்.
404

மற்றவர் வணங்கி வீழ
வாளினை மாற்றி ஏயர்
கொற்றவ னாரும் நம்பி
குரைகழல் பணிந்து வீழ்ந்தார்
அற்றைநாள் நிகழ்ந்த இந்த
அதிசயங் கண்டு வானோர்
பொற்றட மலரின் மாரி
பொழிந்தனர் புவனம் போற்ற.
405
Go to top

இருவரும் எழுந்து புல்லி
இடைவிடா நண்பி னாலே
பொருவரு மகிழ்ச்சி பொங்கத்
திருப்புன்கூர்ப் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று
வன்தொண்டர் தம்பி ரானார்
அருளினை நினைந்தே அந்த
ணாளன்என் றெடுத்துப் பாடி.
406

சிலபகல் கழிந்த பின்பு
திருமுனைப் பாடி நாடர்
மலர்புகழ்த் திருவா ரூரின்
மகிழ்ந்துடன் வந்த ஏயர்
குலமுதற் றலைவ னாருங்
கூடவே குளிர்பூங் கோயில்
நிலவினார் தம்மைக் கும்பிட்
டுறைந்தனர் நிறைந்த அன்பால்.
407

அங்கினி தமர்ந்து நம்பி
அருளினான் மீண்டு போந்து
பொங்கிய திருவின் மிக்க
தம்பதி புகுந்து பொற்பில்
தங்குநாள் ஏயர் கோனார்
தமக்கேற்ற தொண்டு செய்தே
செங்கண்மால் விடையார் பாதம்
சேர்ந்தனர் சிறப்பி னோடும்.
408

நள்ளிருள் நாய னாரைத்
தூதுவிட் டவர்க்கே நண்பாம்
வள்ளலார் ஏயர் கோனார்
மலரடி வணங்கிப் புக்கேன்
உள்ளுணர் வான ஞானம்
முதலிய வொருநான் குண்மை
தெள்ளுதீந் தமிழாற் கூறுந்
திருமூலர் பெருமை செப்ப.
409

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000