சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version
Add audio link Add Audio

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
 
விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை குனிய வாங்கிப்
படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே! பரம யோகி!
கடைத்தலைப் புகுந்து நின்றோம்; கலிமறைக் காடு(ட்) அமர்ந்தீர்!
அடைத்திடும், கதவு தன்னை அப்படித் தாளி னாலே!


1


முடைத்தலைப் பலிகொள் வானே! முக்கணா! நக்க மூர்த்தீ!
மடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல்மறைக் காடு(ட்) அமர்ந்தாய்!
அடைத்திடும், கதவை! என்று(று) இங்கு(கு) அடியனேன் சொல்ல, வல்லே
அடைத்தனை கதவு(வ்); இது(து) அன்றோ, எம்மை ஆள் உகக்கும் ஆறே!


2


கொங்கு(கு) அணா மலர்கள் மேவும் குளிர்பொழில் இமையப் பாவை
பங்கு(கு) அணா(வ்) உருவினானே! பருமணி உமிழும் வெம்மைச்
செங்கண் ஆர் அரவம் பூண்ட திகழ்மறைக் காடு(டு) அமர்ந்தாய்!
அங்கணா! இது அன்றோதான், எம்மை ஆள் உகக்கும் ஆறே!


3


இருள் உடை மிடற்றினானே! எழில்மறைப் பொருள்கள் எல்லாம்
தெருள் பட முனிவர்க்கு(கு) ஈந்த திகழ்மறைக் காடு(டு) அமர்ந்தாய்!
மருள் உடைமனத்த னேனும் வந்து அடி பணிந்து நின்றேற்கு(கு)
அருள் அது புரிவது(து) அன்றோ, எம்மை ஆள் உகக்கும் ஆறே!


4


பெருந்தகை வேழம் தன்னைப் பிளிறிட உரி செய் தானே!
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
கருத்தில னேனும் நின் தன் கழல் அடி பணிந்து நின்றேன்
அருத்தியை அறிவது(து) அன்றோ, எம்மை ஆள் உகக்கும் ஆறே!


5


Go to top
செப்பு(பு) அமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளும் தேசோடு(டு)
ஒப்பு(பு) அம்நர் பலிகொள் வானே! ஒளிமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
அப்பு(பு) அமர் சடையினானே! அடியனேன் பணி உகந்த
அப்பனே! அளவில் சோதீ! அடிமையை உகக்கும் ஆறே!


6


மதி துன்றும் இதழி, மத்தம், மன்னிய சென்னி யானே!
கதி ஒன்றும் ஏற்றி னானே! கலிமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
விதி ஒன்று பாவின் மாலை கேட்டருள் வியக்கும் தன்மை
இது அன்றோ, உலகில் நம்பி எம்மை ஆள் உகக்கும் ஆறே!


7


நீசன் ஆம் அரக்கன் திண்தோள் நெரிதர விரலால் ஊன்றும்
தேசனே! ஞானமூர்த்தீ! திருமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
ஆசையை அறுக்க உய்ந்திட்டு(டு) அவன் அடி பரவ, மெய்யே
ஈசனார்க்(கு) ஆள் அது(து) ஆனேன் என்பதை அறிவித்தாயே.


8


மைதிகழ் உருவினானும், மலரவன் தானும், மெய்ம்மை
எய்து மா(று) அறிய மாட்டார்; எழில்மறைக் காடு அமர்ந்தாய்!
பொய்தனை இன்றி நின்னைப் போற்றினார்க்(கு) அருளைச் சேரச்
செய்தனை, எனக்கு நீ இன்று அருளிய திறத்தினாலே.


9


மண் தலத்து(து) அமணர் பொய்யும், தேரர்கள் பொழியும், மாறக்
கண்டனை; அடிகள்! என்றும் கலிமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
தண்டியைத் தானா வைத்தான் என்னும் அத் தன்மை யாலே
எண்திசைக்கு(கு) அறிய வைத்தாய், இக்கதவு(வு) அடைப்பித்து(து) அன்றே!


10


Go to top
மதம் உடைக் களிறு செற்ற மாமறைக் காட்டு(டு) உளானைக்
கதவு(வு) அடைத் திறமும் செப்பிக் கடிபொழில் காழி வேந்தன்
தகவு(வு) உடைப் புகழின் மிக்க தமிழ்கெழு விரகன்சொன்ன
பதம் உடைப் பத்தும் வல்லார், பரமனுக்கு(கு) அடியர் தாமே.


11


   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal pathigam no 7.102