![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=jcWixEfewp0 Add audio link
1.015
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநெய்த்தானம் - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு வாலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நெய்யாடியப்பர் திருவடிகள் போற்றி
மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.
1
பறையும்பழி பாவம்படு துயரம் பலதீரும்
பிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி யலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.
2
பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.
3
சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மன லேந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்
கடுவாளிள வரவாடுமிழ் கடனஞ்சம துண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே.
4
நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்
பகராவரு புனல்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதண்கரை நிகழ்வாயநெய்த் தான
நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.
5
Go to top
விடையார் கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்
உடையார்நறு மாலைசடை யுடையாரவர் மேய
புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்ந்தநெய்த் தானம்
அடையாதவ ரென்றும்அம ருலகம்அடை யாரே.
6
நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்
தழலானவ னனலங்கையில் ஏந்தியழ காய
கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்
தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே.
7
அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்
இறையாரமு னெடுத்தானிரு பதுதோளிற வூன்றி
நிறையார்புனல் நெய்த்தானன்நல் நிகழ்சேவடி பரவக்
கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே.
8
கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம்
காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
ஞாலம்புக ழடியாருடல் உறுநோய்நலி யாவே.
9
மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
சித்தம் முடை யடியாருடல் செறுநோயடை யாவே.
10
Go to top
தலமல்கிய புனற்காழியுட் டமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநெய்த்தானம்
1.015
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மை ஆடிய கண்டன், மலை
Tune - நட்டபாடை
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
4.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
காலனை வீழச் செற்ற கழல்
Tune - திருநேரிசை
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
4.089
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் இடம் சாடிய பல்
Tune - திருவிருத்தம்
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
5.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
Tune - திருக்குறுந்தொகை
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
6.041
திருநாவுக்கரசர்
தேவாரம்
வகை எலாம் உடையாயும் நீயே
Tune - திருத்தாண்டகம்
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
6.042
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று
Tune - திருத்தாண்டகம்
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000