பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்றான் போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக் காலன்றிற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில் ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.
|
1
|
மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தண்மைப் புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக் கலையான்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த அலையார்புனல் வருகாவிரி யாலந்துறை யதுவே.
|
2
|
கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல் பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச் சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந் துறையானவ னறையார்கழல் தொழுமின்துதி செய்தே.
|
3
|
தணியார்மதி யரவின்னொடு வைத்தானிட மொய்த்தெம் பணியாயவ னடியார்தொழு தேத்தும்புள மங்கை மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும் அணியார்மண லணைகாவிரி யாலந்துறை யதுவே.
|
4
|
மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின் கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல் பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே.
|
5
|
Go to top |
மன்னானவ னுலகிற்கொரு மழையானவன் பிழையில் பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை என்னானவ னிசையானவ னிளஞாயிறின் சோதி அன்னானவ னுறையும்மிடம் ஆலந்துறை யதுவே.
|
6
|
முடியார்தரு சடைமேன்முளை யிளவெண்மதி சூடிப் பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கைக் கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும் அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே.
|
7
|
இலங்கைமனன் முடிதோளிற வெழிலார்திரு விரலால் விலங்கல்லிடை யடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப் புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே.
|
8
|
செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்றிரு முண்டப் பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே.
|
9
|
நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப் போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை ஆதியவர் கோயில்திரு வாலந்துறை தொழுமின் சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.
|
10
|
Go to top |
பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக் கந்தம்மலி கமழ்காழியுட் கலைஞானசம் பந்தன் சந்தம்மலி பாடல்சொலி யாடத்தவ மாமே.
|
11
|