![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=jc-3lGGQv64 Add audio link
1.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருச்சிரபுரம் (சீர்காழி) - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்
வில்லடைந்த புருவநல்லாண் மேனியில் வைத்தலென்னே
சொல்லடைந்த தொன்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்
செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுர மேயவனே.
1
கொல்லைமுல்லை நகையினாளோர் கூறதுவன் றியும்போய்
அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணு மாதரவென் னைகொலாஞ்
சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
செல்லநீண்ட செல்வமல்கு சிரபுர மேயவனே.
2
நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
ஊரடைந்த வேறதேறி யுண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வமோங்கு சிரபுர மேயவனே.
3
கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தலென்னே
கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுர மேயவனே.
4
புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானைதன்னை
கரமெடுத்துத் தோலுரித்த காரண மாவதென்னே
மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்
சிரமெடுத்த கைகள் கூப்புஞ் சிரபுர மேயவனே.
5
Go to top
கண்ணுமூன்று முடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்தலென்னே
எண்ணுமூன்று கனலுமோம்பி யெழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுர மேயவனே.
6
குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்
பொறைபடாத வின்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே
இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
சிறைபடாத பாடலோங்கு சிரபுர மேயவனே.
7
மலையெடுத்த வாளரக்க னஞ்சவொ ருவிரலால்
நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்
துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்
சிலையெடுத்த தோளினானே சிரபுர மேயவனே.
8
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
நாலுவேத மோதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்
சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுர மேயவனே.
9
புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்
மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொடும்முடனே
சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுர மேயவனே.
10
Go to top
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுர மேயவனை
அங்கநீண்ட மறைகள்வல்ல வணிகொள்சம் பந்தனுரை
பங்கநீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்
சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருச்சிரபுரம் (சீர்காழி)
1.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பல் அடைந்த வெண் தலையில்
Tune - பழந்தக்கராகம்
(திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.109
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வார் உறு வனமுலை மங்கை
Tune - வியாழக்குறிஞ்சி
(திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அன்ன மென் நடை அரிவையோடு
Tune - நட்டராகம்
(திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000