வெங்கணானை யீருரிவை போர்த்துவிளங் கும்மொழி மங்கைபாகம் வைத்துகந்த மாண்பதுவென் னைகொலாம் கங்கையோடு திங்கள்சூடிக் கடிகமழுங் கொன்றைத் தொங்கலானே தூயநீற்றாய் சோபுரமே யவனே.
|
1
|
விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவிரிந் திலங்கு சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கியதென் னைகொலாம் கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தனலுள் ளழுந்தத் தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுரமே யவனே.
|
2
|
தீயராய வல்லரக்கர் செந்தழலுள் ளழுந்தச் சாயவெய்து வானவரைத் தாங்கியதென் னைகொலாம் பாயும்வெள்ளை யேற்றையேறிப் பாய்புலித்தோலுடுத்த தூயவெள்ளை நீற்றினானே சோபுரமே யவனே.
|
3
|
பல்லிலோடு கையிலேந்திப் பல்கடையும் பலிதேர்ந் தல்லல்வாழ்க்கை மேலதான வாதரவென் னைகொலாம் வில்லைவென்ற நுண்புருவ வேனெடுங்கண் ணியொடும் தொல்லையூழி யாகிநின்றாய் சோபுரமே யவனே.
|
4
|
நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடைமேன் மதியம் ஏற்றமாக வைத்துகந்த காரணமென் னைகொலாம் ஊற்றமிக்க காலன் றன்னை யொல்கவுதைத் தருளி தோற்றமீறு மாகிநின்றாய் சோபுரமே யவனே.
|
5
|
Go to top |
கொன்னவின்ற மூவிலைவேற் கூர்மழுவாட் படையன் பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற்பென் னைகொலாம் அன்னமன்ன மென்னடையாள் பாகமமர்ந் தரைசேர் துன்னவண்ண ஆடையினாய் சோபுரமே யவனே.
|
6
|
குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடியார் பணிவார் கற்றகேள்வி ஞானமான காரணமென் னைகொலாம் வற்றலாமை வாளரவம் பூண்டயன்வெண் டலையில் துற்றலான கொள்கையானே சோபுரமே யவனே.
|
7
|
விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர் குலங்கள்வாழு மூரெரித்த கொள்கையிதென் னைகொலாம் இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால் துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே.
|
8
|
விடங்கொணாக மால்வரையைச் சுற்றிவிரி திரைநீர் கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரணமென் னைகொலாம் இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர்மே லயனும் தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுரமே யவனே.
|
9
|
புத்தரோடு புன்சமணர் பொய்யுரையே யுரைத்துப் பித்தராகக் கண்டுகந்த பெற்றிமையென் னைகொலாம் மத்தயானை யீருரிவை போர்த்துவளர் சடைமேல் துத்திநாகஞ் சூடினானே சோபுரமே யவனே
|
10
|
Go to top |
சோலைமிக்க தண்வயல் சூழ் சோபுரமே யவனைச் சீலமிக்க தொல்புகழார் சிரபுரக்கோன் நலத்தான் ஞாலமிக்க தண்டமிழான் ஞானசம்பந்தன் சொன்ன கோலமிக்க மாலைவல்லார் கூடுவர்வா னுலகே.
|
11
|