வசையில் விழுப்பொருள் வானும் நிலனும் திசையுந் திசைபெறு தேவர் குழாமும் விசையம் பெருகிய வேதம் முதலாம் அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.
|
1
|
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர் தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி தாமறி வாலே தலைப்பட்ட வாறே.
|
2
|
அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான இணைதுணை யாமத் தியங்கும் பொழுது துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.
|
3
|
போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும் தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள் வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.
|
4
|
நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்று மைநின் றெரியும் வகையறி வார்கட்கு மைநின் றவிழ்தரு மந்திர மும்என்றும் செய்நின்ற செல்வமும் தீயது வாமே.
|
5
|
Go to top |
பாழி அகலுள் எரியும் திரிபோலிட் டூழி அகலும் உறுவினை நோய்பல வாழிசெய் தங்கி உதிக்க அவைவிழும் வீழிசெய் தங்கி வினைசுடு மாமே.
|
6
|
பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும் வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணி அருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றீரே.
|
7
|
ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை ஒண்சுட ராகி என்னுள்ளத் திருக்கின்ற கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத் தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.
|
8
|
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன் வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல் கோமத் துளங்கிக் குரைகடல் தானே.
|
9
|
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணந் தங்கி இருக்கும் தகையருள்செய்தவர் எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி பொங்கி நிறுத்தும் புகழது வாமே.
15, |
10
|
Go to top |