எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம் வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும் பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
|
1
|
ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப் பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.
|
2
|
அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந் திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப் புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.
|
3
|
இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந் தருமஞ்செய் யாதவர் தம்பால வாகும் உருமிடி நாக முரோணி கழலை தருமஞ்செய் வார்பக்கல் சாரகி லாவே.
|
4
|
பரவப் படுவான் பரமனை ஏத்தீர் இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர் கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர் நரகத்தில் நிற்றிரோ நாள்எஞ்சி னீரே.
|
5
|
Go to top |
வழிநடப் பாரின்றி வானோர் உலகங் கழிநடப் பார்கடந் தார்கரும் பாரும் மழிநடக் கும்வினை மாசற வோட்டி ஒழிநடக் கும்வினை ஓங்கி நின்றாரே.
|
6
|
கெடுவது மாவதுங் கேடில் புகழோன் நடு அல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான் இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம் படுவது செய்யிற் பசுவது வாமே.
|
7
|
இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது முன்பவர் செய்கையி னாலே முடிந்தது இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.
|
8
|
செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும் புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் இல்லங் கருதிஇறைவனை ஏத்துமின் வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.
|
9
|
கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர் துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர் மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.
21, |
10
|
Go to top |