அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
|
1
|
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன் மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப் பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.
|
2
|
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி என்பொன் மணியினை எய்தவொண் ணாதே.
|
3
|
ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை ஈரம் உடையவர் காண்பார் இணையடி பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக் கோர நெறிகொடு கொங்குபுக் காரே.
|
4
|
என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின் முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின் பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும் தன்னன் பெனக்கே தலைநின்ற வாறே.
|
5
|
Go to top |
தானொரு காலம் சயம்புவென் றேத்தினும் வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும் தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன் யானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.
|
6
|
முன்படைத் தின்பம் படைத்த முதலிடை அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார் வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில் அன்படைத் தான்தன் அகலிடத் தானே.
|
7
|
கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி இருத்தியும் வைத்தும் இறைவஎன் றேத்தியும் அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில் விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.
|
8
|
நித்தலுந் துஞ்சும் பிறப்பையுஞ் செய்தவன் வைத்த பரிசறிந் தேயும் மனிதர்கள் இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று நச்சியே அண்ணலை நாடகி லாரே.
|
9
|
அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான் முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன் அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள் அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.
22, |
10
|
Go to top |