இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் உகந்தருள் செய்திடும் உத்தம நாதன் கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே.
|
1
|
இன்பம் பிறவிக் கியல்வது செய்தவன் துன்பப் பிறவித் தொழில்பல என்னினும் அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த முன்பிப் பிறவி முடிவது தானே.
|
2
|
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனன் துன்புறு கண்ணிஐந் தாடுந் தொடக்கற்று நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.
|
3
|
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக் குணர்ச்சியில் லாது குலாவி உலாவி அணைத்தலும் இன்பமதுஇது வாமே.
|
4
|
உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச் சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
|
5
|
Go to top |
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை கண்டேன் கமல மலர்உறை வானடி கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.
|
6
|
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென் றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும் அன்பனை யாரும் அறியகி லாரே.
|
7
|
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார் அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர் இன்பப் பிறப்பும் இறப்பும் இலார்நந்தி யன்பில் அவனை அறியகி லாரே.
|
8
|
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத் தேசுற் றறிந்து செயலற் றிருந்திட ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே.
|
9
|
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத் தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை மட்டுக் கலப்பது மஞ்சன மாமே.
23, |
10
|
Go to top |