கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன் வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம் வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.
|
1
|
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத் தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி யிட்டு நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித் தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.
|
2
|
எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும் தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற அங்கச் சுதனை உதிரங்கொண் டானே.
|
3
|
எங்கும் கலந்தும்என் உள்ளத் தெழுகின்ற அங்க முதல்வன் அருமறை யோதிபாற் பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின் அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.
|
4
|
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறி வாரே.
|
5
|
Go to top |
முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள் அத்தி யுரிஅர னாவ தறிகிலர் சத்தி கருதிய தாம்பல தேவரும் அத்தீயி னுள்ளெழுந் தன்று கொலையே.
|
6
|
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற் காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.
|
7
|
இருந்த மனத்தை இசைய இருத்திப் பொருந்திய லிங்க வழியது போக்கித் திருந்திய காமன் செயலழித் தங்கண் அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே.
3, |
8
|