அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ் வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ் வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ் வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.
|
1
|
இலயங்கள் மூன்றினுள் ஒன்றுகற் பாந்தம் நிலையன் றழிந்தமை நின்றுணர்ந்தேனால் உலைதந்த மெல்லரி போலும் உலகம் மலைதந்த மாநிலந் தான்வெந் ததுவே.
|
2
|
பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும் உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங் குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.
|
3
|
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக் குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.
|
4
|
நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம் வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம் சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம் உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.
|
5
|
Go to top |
நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல் வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம் சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல் உய்த்தசங் காரஞ் சிவன்அருள் உண்மையே.
|
6
|
நித்தசங் காரங் கருவிடர் நீக்கினால் ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல் சுத்தசங் காரம் அதீதத்துள் தோய்வுறல் உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.
|
7
|
நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின் வைத்தசங் காரமும் மன்னும் அனாதியில் சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள் உய்த்தசங் காரமுன் நாலாம் உதிக்கிலே.
|
8
|
பாழே முதலா எழும்பயிர் அப்பயிர் பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம் பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.
|
9
|
தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர் ஆயம்வைத் தாய்உணர் வாரவைத் தானே.
12, |
10
|
Go to top |