விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத் தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின் அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம் விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.
|
1
|
விஞ்ஞானர் கேவலத் தாராது விட்டவர் தஞ்ஞானர் அட்டவித் தேசுரம் சார்ந்துளோர் எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர் மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.
|
2
|
இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை இரண்டாவ துள்ளே இருமல பெத்தர் இரண்டாகு நூற்றெட் டுருத்திரர் என்பர் முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.
|
3
|
பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய் மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார் சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.
|
4
|
விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர் தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர் அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம் விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.
|
5
|
Go to top |
வெஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியே தஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக் கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய். மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.
|
6
|
ஆணவந் துற்ற அவித்தா நனவற்றோர் காணிய விந்துவாம் நாத சகலாதி ஆணவ மாதி யடைந்தோர்க்க வரன்றே சேணுயர் சத்தி சிவதத்வ மாமே
|
7
|
சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர் அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார் பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர் நவமான தத்துவம் நாடிக்கண் டோரே.
16, |
8
|