கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற் கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம் பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.
|
1
|
நாவிக்குக் கீழே பன்னிரண் டங்குலந் தாவிக்கும் மந்திரந் தன்னை அறிகிலர் தாவிக்கும் மந்திரந் தன்னை அறிந்தபின் கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே.
|
2
|
மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே.
|
3
|
நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்யும் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே.
|
4
|
சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற் கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின் நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால் ஓதுவ தும்முடல் உன்மத்த மாமே.
|
5
|
Go to top |
மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு காலத்தை வெல்லுங் கருத்திது தானே.
|
6
|
எருவிடும் வாசற் கிருவிரல் மேலே கருவிடும் வாசற் கிருவிரற் கீழே உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.
|
7
|
ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப் பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக் கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல் பிரத்தியா காரப் பெருமைய தாமே.
|
8
|
புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந் திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால் உறப்பட்டு நின்றதவ் வுள்ளமும் அங்கே புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.
|
9
|
குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும் வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ் சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில் அறிப்புறு காட்சி அமரனு மாமே.
7, |
10
|
Go to top |