கட்டக் கழன்றுகீழ் நான்றுவீ ழாமலே அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி விட்டத்தைப் பூட்டிப்பின் மேற்பையைத் தாட்கோத்துநட்ட மிருக்க நமனில்லை தானே.
|
1
|
வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற் கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால் அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.
|
2
|
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட் கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.
|
3
|
ஆய்ந்துரை செய்யில் அமுதம்நின் றூறிடும் வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப் பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.
|
4
|
நாவின் நுனியை நடுவே சிவிறிடிற் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர் சாவதும் இல்லை சதகோடி ஊனே.
|
5
|
Go to top |
ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல் வானூறல் பாயும் வகையறி வாரில்லை வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத் தேனூறல் உண்டு தெளியலு மாமே.
|
6
|
மேலைஅண் ணாவில் விரைந்திரு காலிடிற் காலனும் இல்லை கதவும் திறந்திடும் ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவான் பராநந்தி ஆணையே.
|
7
|
நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச் சந்தித் திருக்கில் தரணி முழுதாளும் பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச் சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.
|
8
|
தீவினை ஆடத் திகைத்தங் கிருந்தவர் நாவினை நாடின் நமனுக் கிடமில்லை பாவினை நாடிப் பயனறக் கண்டவர் தேவினை ஆடிய தீங்கரும் பாமே.
|
9
|
தீங்கரும் பாகவே செய்தொழில் உள்ளவர் ஆங்கரும் பாக அடையநா ஏறிட்டுக் கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே.
|
10
|
Go to top |
ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத் தேனீர் பருகிச் சிவாய நமவென்று கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும் வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.
|
11
|
வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர் காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும் பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக் கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே.
|
12
|
கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர் தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும் காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந் தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.
|
13
|
தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன் பூவினை யாளர்தம் பொற்பதி யானவன் பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன் மாவினை யாளர் மதியிலுள் ளானே.
|
14
|
மதியின் எழுங்கதிர் போற்பதி னாறாய்ப் பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க் கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.
|
15
|
Go to top |
இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ இருந்தனள் கன்னியும் அந்நடு வாக இருந்தனள் மான்ஏர் முகநில வார இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.
|
16
|
பொழிந்தவி ரும்வெள்ளி பொன்மன் றடையில் வழிந்துள் ளிருந்தது வான்முதல் அங்குக் கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக் கொழுந்தது வாகும் குணமது தானே.
|
17
|
குணமது வாகிய கோமள வல்லி மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில் தனமது வாகிய தத்துவ ஞானம் இனமது வாக இருந்தனன் தானே.
|
18
|
இருந்த பிராணனும் உள்ளே எழுமா பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின் மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.
|
19
|
மண்டலத் துள்ளே மனஒட்டி யாணத்தைக் கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப் பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக் குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே.
19, |
20
|
Go to top |