எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள் எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம் துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே.
|
1
|
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள் ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள் ஏகின்ற அக்கலை யெல்லாம் இடைவழி ஆகின்ற யோகி அறிந்த அறிவே.
|
2
|
ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன் நாறா நலங்கிளர் ஞாலங் கவர்கொளப் பேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும் மாறாக் கதிர்கொள்ளும் மற்றங்கி கூடவே.
|
3
|
பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை பத்தினொ டாறும் உயர்கலை பால்மதி ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே.
|
4
|
எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட் சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை கட்டப் படுமீரெட் டாகும் மதிக்கலை ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாகவே.
|
5
|
Go to top |
எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர் சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக் கட்டப் படும்தா ரகைக்கதிர் நாலுள கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே.
|
6
|
எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச் சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலம் செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால் நல்லார் திருவடி நண்ணிநிற் பாரே.
|
7
|
அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத் தங்கிய தாரகை யாகும் சசிபானு பங்கிய தாரகை யாகும் பரையொளி தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே.
|
8
|
தரணி சலங்கனல் கால்தக்க வானம் அரணிய பானு அருந்திங்கள் அங்கி முரணிய தாரகை முன்னிய ஒன்பான் பிரணவ மாகும் பெருநெறி தானே.
|
9
|
தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத் தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத் தாரகை பூவிற் சகலத்தி யோனிகள் தாரகைத் தாரகை தானாம் சொரூபமே.
|
10
|
Go to top |
முற்பதி னஞ்சின் முளைத்துப் பெருத்திடும் பிற்பதி னஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும் அப்பதி னஞ்சும் அறியவல் லார்கட்குச் செப்பரி யான்கழல் சேர்தலு மாமே.
|
11
|
அங்கி எழுப்பி அருங்கதிர் வட்டத்துத் தங்குஞ் சசியினால் தாமம்ஐந் தைந்தாகிப் பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத் திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே.
|
12
|
ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள் கன்றிய காலன் கருக்குழி வைத்தபின் சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.
|
13
|
அங்கி மதிகூட ஆகும் கதிரொளி அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை தங்கி அதுவே சகலமு மாமே.
|
14
|
ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே.
|
15
|
Go to top |
காணும் பரிதியின் காலை இடத்திட்டு மாணும் மதியதன் காலை வலத்திட்டுப் பேணியிவ் வாறு பிழையாமற் செய்வீரேல் ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.
|
16
|
பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில் ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்கும் காலைக்குச் சங்கு கதிரவன் தானே.
|
17
|
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும் அதிரவன் அண்டப் புறஞ்சென் றடர்ப்ப எதிரவன் ஈசன் இடமது தானே.
|
18
|
உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலார் அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின் தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.
|
19
|
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல் வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.
|
20
|
Go to top |
பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு தீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும் பாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீஇ நீங்கல் கொடானே நெடுந்தகை யானே.
|
21
|
அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப் பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று நயந்தரு பூரணை உள்ளம் நடத்தின் வியந்தரு பூரணை மேவும் சசியே.
|
22
|
சசியுதிக் கும்அள வந்துயி லின்றிச் சசியுதித் தானேல் தனதூண் அருந்திச் சசிசரிக் கின்றள வுந்துயி லாமற் சசிசரிப் பிற்கண்தன் கண்டுயில் கொண்டதே.
|
23
|
ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள் நாழிகை யாக நமனை அளப்பர்கள் ஊழி முதலாய் உயர்வார் உலகினில் தாழஅல் லார்இச் சசிவன்னர் தாமே.
|
24
|
தண்மதி பானுச் சரிபூமி யேசென்று மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின் கண்மதி வீழ்வள விற்கண மின்றே.
|
25
|
Go to top |
வளர்கின்ற ஆதித்தன் தன்கலை ஆறும் தளர்கின்ற சந்திரன் தன்கலை ஆறும் மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே.
|
26
|
ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக் காமுற வின்மையிற் கட்டுண்ணும் மூலத்தில் ஓமதி யுள்விட் டுரையுணர் வாலே.
|
27
|
வேறுறச் செங்கதிர் மெய்க்கலை ஆறொடுஞ் சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும் ஈறில் இனன்கலை ஈரைந்தொ டேமதித் தாறுட் கலையுள் அகலுவா வாமே.
|
28
|
உணர்விந்து சோணி உறஇனன் வீசும் புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில் உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில் உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே.
|
29
|
அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல் குமிழிக்கத் தற்சுடர் ஐந்தையுங் கூட்டிச் சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே.
|
30
|
Go to top |
உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத்திறந் தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத் தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங் கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே.
|
31
|
மாறும் மதியும்ஆ தித்தனும் மாறின்றித் தாறு படாமல்தண் டோடே தலைப்படில் ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும் பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.
|
32
|
விடாத மனம்பவ னத்தொடு மேவி நடாவு சிவசங்க நாதங் கொளுவிக் கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு படாதன இன்பம் பருகார் அமுதமே.
1, |
33
|