அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல் வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.
|
1
|
சாங்கம தாகவே சாந்தொடு சந்தனம் தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில் பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத் தாங்கே அணிந்துநீர் அற்சியும் அன்பொடே.
|
2
|
அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே பொன்செய் விளக்கும் புகையும் திசைதொறும் துன்பம் அகற்றித் தொழுவார் நினையுங்கால் இன்ப முடனேவந் தெய்திடும் முத்தியே.
|
3
|
எய்தி வழிபடில் எய்தா தனஇல்லை எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்உண் டெய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும் எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே
|
4
|
நண்ணும் பிறதாரம் நீத்தார் அவித்தார் அண்ணிய நைவேத் தியம்அனு சந்தானம் நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபம்மன்னும் மண்ணும் அனல்பவ னத்தொடு வைகுமே.
|
5
|
Go to top |
வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர் வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை யற்றபேர் வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள் வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே.
|
6
|
அறிவரு ஞானத் தெவரும் அறியார் பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள் நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில் எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.
|
7
|
இருளும்வெளி யும்போல் இரண்டாம் இதயம் மருள்அறி யாமையும் மன்னும் அறிவும் அருள் இவை விட்டறியாமை மயங்கும் மருளும் சிதைத்தோ ரவர்களா வாரே.
|
8
|
தானவ னாக அவனேதா னாயிட ஆன இரண்டில் அறிவன் சிவமாகப் போனவன் அன்பிது நாலாம் மரபுறத் தானவன் ஆகும்ஓர் ஆசித்த தேவனே.
|
9
|
ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா அகராமும் நீள்கண்டத் தாயிடும் பாங்கார் உகாரம் பயில்நெற்றி உற்றிடும் வீங்காகும் விந்துவும் நாதம்மேல் ஆகுமே.
|
10
|
Go to top |
நமஅது ஆசன மான பசுவே சிவமது சித்திச் சிவமாம் பதியே நமஅற ஆதி நாடுவ தன்றாம் சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே.
|
11
|
தெளிவரும் நாளில் சிவஅமு தூறும் ஒளிவரும் நாளில் ஓர் எட்டில் உகளும் ஒளிவரும் அப்பதத் தோரிரண் டாகில் வெளிதரும் நாதன் வெளியாய் இருந்தே.
4, |
12
|