ஏரொளி உள்எழு தாமரை நாலிதழ் ஏரொளி விந்துவி னால்எழும் நாதமாம் ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின் ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே.
|
1
|
வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன வன்னி எழுத்தவை வானுற ஓங்கின வன்னி எழுத்தவை மாபெருஞ் சக்கரம் வன்னி எழுத்திடு மாறது சொல்லுமே.
|
2
|
சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம் சொல்லிடும் அப்பதி அவ்வெழுத் தாவன சொல்லிடு நூறொடு நாற்பத்து நால்உருச் சொல்லிடு சக்கர மாய்வரும் ஞாலமே.
|
3
|
மேல்வரும் விந்துவும் அவ்வெழுத் தாய்விடும் மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின் மேல்வரு சக்கர மாய்வரும் ஞாலமே.
|
4
|
ஞாலம தாக விரிந்தது சக்கரம் ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும் ஞாலம தாயிடும் அப்பதி யோசனை ஞாலம தாக விரிந்த எழுத்தே.
|
5
|
Go to top |
விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும் விரிந்த எழுத்தது சக்கர மாக விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.
|
6
|
அப்பது வாக விரிந்தது சக்கரம் அப்பினில் அப்புறம் அவ் அன லாயிடும் அப்பினில் அப்புறம் மாருத மாய் எழ அப்பினில் அப்புறம் ஆகாச மாமே.
|
7
|
ஆகாச அக்கர மாவது சொல்லிடில் ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம் ஆகாச அக்கரம் ஆவ தறிமினே.
|
8
|
அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து அறிந்திடும் சக்கரம் நாத முதலா அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி ஓர்க்கும் அறிந்திடும் அப்பக லோன்நிலை ஆமே.
|
9
|
அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும் எம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும் இரும்முதல் நாலும் இருந்திடு வன்னியே இரும்முத லாகும் எழுத்தவை எல்லாம்.
|
10
|
Go to top |
எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும் எழுத்தவை ஆறது அந்நடு வன்னி எழுத்தவை அந்நடு அச்சுட ராகி எழுத்தவை தான்முதல் அந்தமு மாமே.
|
11
|
அந்தமும் ஈறும் முதலா னவைஅற அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால் அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின் அந்தமும் இந்துகை ஆருட மானதே.
|
12
|
ஆஇன மானவை முந்நூற் றறுபதும் ஆஇனம் அப்பதி னைந்தின மாய்உறும் ஆஇனம் அப்பதி னெட்டுட னாய்உறும் ஆஇனம் அக்கதி ரோன்வர வந்தே.
|
13
|
வந்திடும் ஆகாச ஆறது நாழிகை வந்திடும் அக்கரம் முப்ப திராசியும் வந்திடும் நாளது முந்நூற் றறுபதும் வந்திடும் ஆண்டும் வகுத்துறை அவ்விலே.
|
14
|
அவ்வினம் மூன்றும்அவ் ஆடது வாய்வரும் கெவ்வினம் மூன்றும் கிளர்தரு ஏறதாம் தவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம் இவ்வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.
|
15
|
Go to top |
இராசியுட் சக்கரம் எங்கும் நிறைந்தபின் இராசியுட் சக்கரம் என்றறி விந்துவாம் இராசியுட் சக்கரம் நாதமும் ஒத்தபின் இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.
|
16
|
நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெலாம் நின்றிடும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில் நின்றிடும் அப்புறம் தாரகை யானதே.
|
17
|
தாரகை யாகச் சமைந்தது சக்கரம் தாரகை மேலோர் தழைத்ததோர் பேரொளி தாரகை சந்திரன் நற்பக லோன்வரத் தாரகை தாரகை தாரகை கண்டதே.
|
18
|
கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம் கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக் கண்டிடு வன்னிக் கொழுந்தள வொத்தபின் கண்டிடும் அப்புறங் காரொளி யானதே.
|
19
|
காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும் பாரொளி நீரொளி சாரொளி காலொளி வானொளி ஒக்க வளர்ந்து கிடந்த பின் நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.
|
20
|
Go to top |
நின்றது அண்டமும் நீளும் புவியெலாம் நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட நின்ற இவ் அண்டமும் மூல மலமொக்கும் நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே.
|
21
|
விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில் விந்துவும் நாதமும் ஒக்க விதையதாம் விந்திற் குறைந்திட்டு நாதம் எழுந்திடில் விந்துவை எண்மடி கொண்டது வீசமே.
|
22
|
வீசம் இரண்டுள நாதத் தெழுவன வீசமும் ஒன்று விரிந்திடும் மேலுற வீசமும் நாதம் எழுந்துடன் ஒத்தபின் வீசமும் விந்து விரிந்தது காணுமே.
|
23
|
விரிந்தது விந்துவும் கெட்டது வீசம் விரிந்தது விந்துவும் நாதத் தளவு விரிந்தது உட்பட்ட எட்டெட்டு மாகில் விரிந்தது விந்து விதையது வாமே.
|
24
|
விதையது விந்து விளைந்தன எல்லாம் விதையது விந்து விளைந்த உயிரும் விதையது விந்து விளைந்தவிஞ் ஞானம் விதையது விந்து விளைந்தவன் தாளே.
|
25
|
Go to top |
விளைந்த எழுத்தவை விந்துவும் நாதம் விளைந்த எழுத்தவை சக்கர மாக விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும் விளைந்த எழுத்தவை மந்திர மாமே.
|
26
|
மந்திரம் சக்கர மானவை சொல்லிடில் தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம் தந்திரத் துள்ளும் இரேகையில் ஒன்றில்லை பெந்தம தாகும் பிரணவம் உன்னிடே.
|
27
|
உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம் பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை தன்னிட்ட டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப் பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.
|
28
|
பார்க்கலு மாகும் பகையறு சக்கரம் காக்கலு மாகும் கருத்தில் தடம்எங்கும் நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள் ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.
|
29
|
அறிந்திடுஞ் சக்கரம் ஆதி எழுத்து விரிந்திடுஞ் சக்கரம் மேலெழுத் தம்மை பரிந்திடுஞ் சக்கரம்பார் அங்கி நாலும் குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே.
|
30
|
Go to top |
கூறிய சக்கரத் துள்எழு மந்திரம் ஆறியல் பாக அமைந்து விரிந்திடும் தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.
|
31
|
மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும் மதித்திடும் அம்மையும் மங்கனல் ஒக்கும் மதித்தங் கெழுந்தவை மாரண மாகில் கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.
|
32
|
கூடிய தம்பனம் மாரணம் வச்சியம் ஆடியல் பாக அமைந்து செறிந்தடும் பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார் தேடிஉள் ஆகத் தெளிந்துகொள் வார்க்கே.
|
33
|
தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே அளிந்த அகாரத்தை அந்நடு வாக்கிக் குளிர்ந்த அரவினைக் கூடிஉள் வைத்து அளிந்தவை அங்கெழும் ஆடிய காலே.
|
34
|
காலரை முக்கால் முழுதெனும் மந்திரம் ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்தவாய்ப் பாலித் தெழுந்து பகையற நின்றபின் மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.
|
35
|
Go to top |
கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப் பண்டைஉள் நாவில் பகையற விண்டபின் மன்றுள் நிறைந்த மணிவிளக் காத்ஞிளி என்றும் இதயத் தெழுந்து நமவே.
10, |
36
|