சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில் ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேலதாக் காண்பதம் தத்துவம் நால்உள் நயனமும் நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.
|
1
|
நாடறி மண்டலம் நல்லஇக் குண்டத்துள் கோடற வீதி கொணர்ந்துள் இரண்டழி பாடறி பத்துடன் ஆறு நெடுவீதி ஈடற நாலைந் திடவகை ஆமே.
|
2
|
நாலைந் திடவகை உள்ளதோர் மண்டலம் நாலுநல் வீதியுள் நந்நால் இலிங்கமா நாலுநற் கோணமும் நண்ணால் இலிங்கமா நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.
|
3
|
ஆறிரு பத்துநால் அஞ்செழுத் தஞ்சையும் வேறுரு வாக விளைந்து கிடந்தது தேறிநீர் உம்மில் சிவாய நமஎன்று கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.
|
4
|
குறைவதும் இல்லை குரைகழல் கூடும் அறைவதும் ஆரணம் அவ்வெழுத் தாகில் திறம்அது வாகத் தெளியவல் லாருக் கிறவில்லை என்றென் றியம்பினர் காண.
|
5
|
Go to top |
காணும் பொருளும் கருதிய தெய்வமும் பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும் ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக் காணுங் கனகமும் காரிகை யாமே.
|
6
|
ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேஆகப் போமே அதுதானும்? போம்வழி யேபோனால் நாமே நினைத்தன செய்யலும் ஆகும் பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.
|
7
|
பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால் நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும் வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை தகையில்லை தானும் சலமது வாமே.
|
8
|
ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே ஆரும் அறியாத ஆனந்த ரூபம்ஆம் பாரும் விசும்பும் பகலும் மதியதில் ஊரும் உயிரும் உணர்வது மாமே.
12, |
9
|