நேர்ந்திடும் மூலன் சரியை நெறியேதென் றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான் ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத் தோர்ந்திடுஞ் சுத்தசை வத்த துயிரதே.
|
1
|
உயிர்க்குயிர் ஆய்நிற்றல் ஒண்ஞான பூசை உயிர்கொளி நோக்கல் மகாயோக பூசை உயிர்ப்புறும் ஆவாகனம் புறப் பூசை செயிர்க்கடை நேசம் சிவபூசை யாமே.
|
2
|
நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.
|
3
|
பத்தர் சரியை படுவோர் கிரியையோர் அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர் சுத்த இயமாதி தூயோகர் சாதகர் சித்தர் சிவஞானம் சென்றெய்து வோர்களே.
|
4
|
சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர் சேர்ந்தஎண் யோகத்தர் சித்த சமாதியோர் ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே
|
5
|
Go to top |
கிரியையோ கங்கள் கிளர்ஞான பூசை அரிய சிவனுரு அமரும் அரூபம் தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை உரியன நேயத் துயர்பூசை யாமே.
|
6
|
சரியாதி நான்கும் தகும்ஞான நான்கும் விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும் பொருளானது நந்தி பொன்னகர் போந்து மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.
|
7
|
சமையம் பலசுத்தி தன்செயல் அற்றிடும் அமையும் விசேடம் அரன்மந் திரசுத்தி சமையுநிரு வாணங் கலாசுத்தி யாகும் அமைமன்னு ஞானமார்க் கம்அபி டேகமே.
6, |
8
|