இறப்பும் பிறப்பும் இருமையும நீங்கித் துறக்கும் தவங்கண்ட சோதிப் பிரானை மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட் கறப்பயன் காட்டும் அமரர் பிரானே.
|
1
|
பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே மறந்த மலஇருள் நீங்க மறைந்து சிறந்த சிவன் அருள் சேர்பரு வத்துத் துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.
|
2
|
அறவன் பிறப்பிலி யாரு மிலாதான் உறைவது காட்டகம் உண்பது பிச்சை துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப் பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.
|
3
|
நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும் நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு நெறியில் நெருஞ்சில்முட் பாயகி லாவே.
|
4
|
கேடும் கடமையும் கேட்டுவந் தைவரும் நாடி வளைந்தது நான்கட வேனலேன் ஆடல் விடையுடை யண்ணல் திருவடி கூடும் தவம்செய்த கொள்கையன் றானே.
|
5
|
Go to top |
உழவன் உழவுழ வானம் வழங்க உழவன் உழவினிற் பூத்த குவளை உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு உழவன் அதனை உழவொழிந் தானே.
|
6
|
மேற்றுறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன் நாட்டுறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி கார்த்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும் பார்த்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.
|
7
|
நாகமும் ஒன்று படம் ஐந்து நாலது போகம் முட் புற்றில் பொருந்தி நிறைந்தது ஆகம் இரண்டும் படம்விரித் தாட்டொழிந் தேகப் படஞ்செய் துடம்பிட மாமே.
|
8
|
அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும் இவன்றான் எனநின் றெளியனும் அல்லன் சிவன்றான் பலபல சீவனு மாகும் நயன்றான் வரும்வழி நாமறி யோமே.
|
9
|
தூம்பு திறந்தன்ன ஒம்பது வாய்தலும் ஆம்பற் குழலி னகஞ்சுளிப் பட்டது வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற் கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.
5, |
10
|
Go to top |