தவம்வேண்டும் ஞானந் தலைப்பட வேண்டில் தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில் தவம்வேண்டா அச்சக சன்மார்க்கத் தோர்க்குத் தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.
|
1
|
ஓதலும் வேண்டா உயிர்க்கு யிருள்ளுற்றால் காதலும் வேண்டாமெய்க் காயம் இடங்கண்டால் சாதலும் வேண்டா சமாதிகை கூடினால் போதலும் வேண்டா புலன்வழி போதார்க்கே.
|
2
|
கத்தவும் வேண்டா கருத்தறிந் தாறினால் சத்தமும் வேண்டா சமாதிகை கூடினால் சுத்தமும் வேண்டா துடக்கற்று நிற்றலால் சித்தமும் வேண்டா செயலற் றிருக்கிலே.
|
3
|
விளைவறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார் விளைவறி வார்பண்டை மெய்உரை செய்வார் விளைவறி வார்பண்டை மெய்யறம் செய்வார் விளைவறி வார்விண் ணின்மிக் காரே.
|
4
|
கூடித் தவம்செய்து கண்டேன் குரைகழல் தேடித் தவம்செய்து கண்டேன் சிவகதி வாடித் தவம்செய்வ தேதம் இவைகளைந்(து) ஊடிற் பலஉல கோர்எத் தவரே.
|
5
|
Go to top |
மனத்துரை மாகடல் ஏழுங்கை நீந்தித் தவத்திடை யாளர்தம் சார்வத்து வந்தார் பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின் முகத்திடை நந்தியை முந்தலு மாமே.
|
6
|
மனத்திடை நின்ற மதிவாள் உருவி இனத்திடை நீக்கி இரண்டற வீர்ந்து புனத்திடை அஞ்சும்போ காமல் மறித்தால் தவத்திடை ஆறொளி தன்ணொளி யாமே.
|
7
|
ஒத்து மிகவும்நின் றானை யுரைப்பது பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ முத்தி கொடுக்கும் முனிவ ரெனும்பதம் சத்தான செய்வது தான்தவந் தானே.
|
8
|
இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி மலர்தொட்டுக் கொண்டேன் வரும்பலன்காணேன் தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளம் தலைதொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.
|
9
|
படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க் கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும் விடரடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில் உடரடை செய்வதோ ருன்மத்த மாமே.
|
10
|
Go to top |
ஆற்றில் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய் ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட வாறொக்கும் நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர் சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.
|
11
|
பழுக்கின்ற வாறும் பழம்உண்ணு மாறும் குழக்கன்று துள்ளிஅக் கோணியில் புல்காக் குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள் இழுக்காது நெஞ்சத் திடஒன்று மாமே.
|
12
|
சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால் சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால் சித்தஞ் சிவமாக வேசித்தி முத்திஆம் சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.
7, |
13
|