ஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார் ஞானமுள் ளோர்வேடம் இன்றெனில் நன்முத்தர் ஞான முளதாக வேண்டுவார் நக்கன்போல் ஞான முளவேடம் நண்ணிநிற் பாரே.
|
1
|
புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணி துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர் பின்ஞானத் தோர் ஒன்றும் பேசகி லாரே.
|
2
|
சிவஞானி கட்கும் சிவயோகி கட்கும் அவமான சாதனம் ஆகாது தேரில் நவமாம் அவர்க்கது சாதனம் நன்கும் உவமான மில்பொருள் உள்ளுற லாமே.
|
3
|
கத்தித் திரிவர் கழுவடி நாய்கள்போல் கொத்தித் திரிவர் குரற்களி ஞானிகள் ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவும் செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.
|
4
|
அடியா ரவரே அடியா ரலாதார்? அடியாரு மாகாதவ் வேடமு மாகா அடியார் சிவஞான மானது பெற்றோர் அடியா ராலாதார் அடியார்கள் அன்றே.
|
5
|
Go to top |
ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம் தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே ஆனஅவ் வேடம் அருள்ஞான சாதனம் ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.
|
6
|
ஞானத்தி னாற்பதம் நண்ணும் சிவஞானி தானத்தில் வைத்த தனிஆ லயத்தனாம் மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம் ஏனைத் தவசி இவனென லாகுமே
|
7
|
தானற்ற தன்மையும் தான் அவ னாதலும் ஏனைய அச்சிவ மான இயற்கையும் தானுறு சாதக முத்திரை சாத்தலும் மோனமும் நந்தி பதமுத்தி பெற்றவே.
12, |
8
|