இலிங்கம தாகுவ தியாரும் அறியார் இலிங்கம தாகுவ தெண்டிசை யெல்லாம் இலிங்கம தாகுவ தெண்ணெண் கலையும் இலிங்கம தாக எடுத்த துலகே.
|
1
|
உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவா உலகில் எடுத்தது சத்தி குணமா உலகம் எடுத்த சதாசிவன் றானே.
|
2
|
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம் ஏகமும் நல்கி யிருக்கும் சதாசிவம் ஆகம அத்துவா ஆறும் சிவமே.
|
3
|
ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் மீசனை வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென் றார்த்தனர் அண்டங் கடந்தப் புறம்நின்று சாத்தனன் என்னும் கருத்தறி யாரே.
|
4
|
ஒண்சுட ரோன் அயன் மால் பிர சாபதி ஒண்சுட ரான இரவியோ டிந்திரன் கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள் தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே.
|
5
|
Go to top |
தாபரத் துள்நின் றருளவல் லான் சிவன் மாபரத் துண்மை வபடுவா ரில்லை மாபரத் துண்மை வபடு வாருக்கும் பூவகத் துள்நின்ற பொற்கொடி யாகுமே.
|
6
|
தூய விமானமும் தூலம தாகுமால் ஆய சதாசிவம் ஆகும்நற் சூக்குமம் பாய பலிபீடம் பத்திர லிங்கமாம் ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.
|
7
|
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் கொத்தும்அக் கொம்பு சிலை நீறு கோமளம் அத்தன்றன் ஆகமம் அன்னம் அரிசியாம் உய்த்ததன் சாதனம் பூமணல் லிங்கமே.
|
8
|
துன்றுந் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன் கன்றிய செம்பு கனல்இர தம் சந்தம் வன்றிறற் செங்கல் வடிவுடை வில்வம் பொன் தென்றிருக் கொட்டை தெளிசிவ லிங்கமே.
|
9
|
மறையவர் அற்சனை வண்படி கந்தான் இறையவர் அற்சனை ஏய்பொன் னாகும் குறைவில் வசியர்க்குக் கோமள மாகும் துறையுடைச் சூத்திரர் சொல்வாண லிங்கமே.
|
10
|
Go to top |
போது புனைகழல் பூமிய தாவது மாது புனைமுடி வானக மாவது நீதியுள் ஈசன் உடல்விதம் பாய்நிற்கும் ஆதி உறநின்ற(து) அப்பரி சாமே.
|
11
|
தரைஉற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம் திரைபொரு நீரது மஞ்சனச் சாலை வரைதவழ் மஞ்சுநீர் வான்உடு மாலை கரைஅற்ற நந்தி கலைஉந்திக் காமே.
|
12
|
அதுஉணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி எதுஉண ராவகை நின்றனன் ஈசன் புதுஉணர் வான புவனங்கள் எட்டும் இதுஉணர்ந் தென்னுடல் கோயில்கொண் டானே.
|
13
|
அகலிட மாய்அறி யாமல் அடங்கும் உகலிட மாய்நின்ற ஊனத னுள்ளே பகலிட மாம்உளம் பாவ வினாசன் புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.
3, |
14
|