இருபத மாவ திரவும் பகலும் உருவது வாவ துயிரும் உடலும் அருளது வாவ தறமும் தவமும் பொருளது வுள்நின்ற போகம தாமே.
|
1
|
காண்டற் கரியன் கருத்திலன் நந்தியும் தீண்டற்கும் சார்தற்கும் சேயனாய்த் தோன்றிடும் வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம் ஈண்டிக் கிடந்தங் கிருளறு மாமே.
|
2
|
குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும் வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும் செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில் அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.
|
3
|
தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள் பேர்ந்தறி யான்எங்கள் பிஞ்ஞகன் எம்மிறை ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாம்எனச் சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.
|
4
|
தானே அழியும் வினைகள் அழிந்தபின் நானே அறிகிலன் நந்தி யறியுங்கொல் ஊனே யுருகி உணர்வை உணர்ந்தபின் தேனே அனையன்நம் தேவர் பிரானே.
|
5
|
Go to top |
நானறிந் தன்றே யிருக்கின்ற தீசனை வானறிந் தார்அறி யாது மயங்கினர் ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தானறி யான்பின்னை யார்அறி வாரே
|
6
|
அருள்எங்கு மான அளவை அறியார் அருளை நுகரமு தானதுந் தேரார் அருள்ஐங் கருமத் ததிசூக்க முன்னார் அருள்எங்கும் கண்ணான தார்அறி வாரே.
|
7
|
அறிவில் அணுக அறிவது நல்கிப் பொறிவழி ஆசை புகுத்திப் புணர்ந்திட்(டு) அறிவது வாக்கி அடியருள் நல்கும் செறிவோடு நின்றார் சிவமாயி னாரே.
|
8
|
அருளின் பிறந்திட்(டு) அருளின் வளர்ந்திட்(டு) அருளின் அழிந்(து)இளைப் பாறி மறைந்திட்(டு) அருளான அவ்வந்தத்(து) ஆரமு தூட்டி அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.
அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி அருளால் அடிபுனைந் தார்வமும் தந்திட் டருளான ஆனந்தத் தாரமு தூட்டி அருளால்என் நந்தி அகம்புகுந் தானே
|
9
|
பாசத்தில் இட்ட(து) அருள் அந்தப் பாசத்தில் நேசத்தை விட்ட(து) அருள் அந்த நேசத்தின் கூசற்ற முத்தி அருள் அந்தக் கூட்டத்தின் நேசத்துத் தோன்றா நிலைஅரு ளாமே.
|
10
|
Go to top |
பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள்தந்த மாதவன் நந்தி அறவாழி யந்தணன் ஆதி பராபரன் உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.
|
11
|
அகம்புகுந் தான்அடி யேற்கரு ளாலே அகம்புகுந் தும்தெரி யான்அரு ளில்லோர்க்(கு) அகம்புகுந் தானந்த மாக்கிச் சிவமாய் அகம்புகுந் தால்நந்தி ஆனந்தி யாமே.
|
12
|
ஆயும் அறிவோ டறியாத மாமாயை ஆய கரணம் அடைக்கும்ஐம் பூதங்கள் ஆய பலஇந் திரிய மவற்றுடன் ஆய அனைத்துமாம் அவ்வரும் செய்கையே.
|
13
|
அருளே சகலமும் ஆய பௌதிகம் அருளே சராசரம் ஆய மலமே இருளே வெளியே எனும்எங்கும் ஈசன் அருளே சகளத்தன் அன்றிஇன் றாமே.
|
14
|
சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து தவமான ஐம்முகன் ஈசன் அரனும் பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா நவமசை யாகி நடிப்பவன் தானே.
|
15
|
Go to top |
அருட்கண் ணிலாதார்க்(கு) அரும்பொருள் தோன்றா அருட்கண் உளோர்க்கெதிர் தோன்றும் அரனே இருட்கண்ணி னோர்க்கிங் கிரவியும் தோன்றா தெருட்கண்ணி னோர்க்கெங்கும் சீரொளி யாமே.
|
16
|
தானே படைத்திடும் தானே அளித்திடும் தானே துடைத்திடும் தானே மறைந்திடும் தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும் தானே வியாபித் தலைவனு மாமே.
|
17
|
தலையான நான்கும் தனதரு வாகும் அலையா அருவுரு வாகும் சதாசிவம் நிலையான கீழ்நான்கும் நீடுரு வாகும் தொலையா இவைமுற்று மாய்அல்ல தொன்றே.
|
18
|
ஒன்றது பாலே உலப்பிலி தான்ஆகி நின்றது தன்போல் உயிர்க்குயி ராய்நிலை துன்றி அவைஅல்ல தாகும் துணையென்ன நின்றது தான்விளையாட்(டு) என்னுள் நேயமே.
|
19
|
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோ(டு) ஆய்அக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப் போய்அக் கலைபல வாகப் புணர்ந்திட்டு வீயத் தகாவிந்து வாக விளையுமே.
|
20
|
Go to top |
விளையும் பரவிந்து தானே வியாபி விளையும் தனிமாயை மிக்கமா மாயை கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம் அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே.
10, |
21
|