தாள்தந் தளிக்கும் தலைவனே சற்குரு தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன் தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன் தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே.
|
1
|
தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள் தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம் தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம் தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.
|
2
|
கறுத்த இரும்பே கனகம தானால் மறித்திரும் பாகா வகையது போலக் குறித்தஅப் போதே குருவருள் பெற்றான் மறித்துப் பிறவியில் வந்தணு கானே.
|
3
|
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும் நேசத்து நாடி மலம்அற நீக்குவோன் ஆசற்ற சற்குரு ஆவோன் அறிவற்றுப் பூசற் கிரங்குவோன் போதக் குருவன்றே.
|
4
|
நேயத்தே நிற்கும் நிமலன் மலம்அற்ற நேயத்தை நல்கவல் லான்நித்தன் சுத்தனே ஆயத் தவர்தத் துவம்உணர்ந் தாங்கற்ற நேயத் தளிப்பன்நன் நீடுங் குரவனே.
|
5
|
Go to top |
பரிசன வேதி பரிசித்த எல்லாம் வரிசை தரும்பொன் வகையாகு மாபோல் குருபரி சித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே.
|
6
|
தானே எனநின்ற சற்குரு சந்நிதி தானே எனநின்ற தன்மை வெளிப்படின் தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெறல் ஊனே எனநினைந் தோர்ந்துகொள் உன்னிலே.
|
7
|
வரும்வழி போம்வழி மாயா வழியே கருவழி கண்டவர் காணா வழியைப் பெருவழி யாநந்தி பேசும் வழியைக் குருவழி யேசென்று கூடலும் ஆமே.
|
8
|
குருஎன் பவன்வேத ஆகமம் கூறும் பரஇன்ப னாகிச் சிவோகமே பாவித் தொருசிந்தை யின்றி உயர்பாசம் நீக்கி வருநல் லுயிர்பரன் பால்வைக்கும் மன்னனே.
|
9
|
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச் சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச் சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல் அத்தம் அருட்குரு வாம்அவன் கூறிலே.
|
10
|
Go to top |
உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால் பற்றறும் நாதன் அடியில் பணிதலால் சுற்றிய பேதம் துரியம்மூன் றால்வாட்டித் தற்பரம் மேவுவோர் சாதக ராமே.
|
11
|
எல்லாம் இறைவன் இறைவி யுடனின்பம் வல்லார் புலனும் வருங்கால் உயிர் தோன்றிச் சொல்லா மலம்ஐந் தடங்கியிட் டோங்கியே செல்லாச் சிவகதி சேர்தல் விளையாட்டே.
|
12
|
ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித் தானத்து ளிட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும் ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று மோனத்துள் வைத்தலும் முத்தன்றன் செய்கையே.
|
13
|
அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம் சித்தொ டசித்துத் தெளிவித்தச் சீவனைச் சுத்தனு மாக்கித் துடைத்து மலங்களைச் சத்துடன் ஐங்கரு மத்திடுந் தன்மையே.
|
14
|
ஈசத்து வம்கடந் தில்லையென் றப்புறம் பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை தேசத்தை யெல்லாம் தெளியவைத் தானே.
|
15
|
Go to top |
மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம் ஆணிப்பொன் னின்றங் கமுதம் விளைந்தது பேணிக்கொண் டுண்டார் பிறப்பற் றிருந்தார்கள் ஊணுக் கிருந்தார் உணராத மாக்களே.
|
16
|
அசத்தொடு சத்தும் அசற்சத்து நீங்க இசைத்திடு பாசப்பற்று ஈங்கறு மாறே அசைத்திரு மாயை அணுத்தானும் ஆங்கே இசைத்தானும் ஒன்றறி விப்போ னிறையே.
|
17
|
ஏறு நெறியே மலத்தை யிரித்தலால் ஈறில் உரையால் இருளை அறுத்தலால் மாறின் பசுபாசம் வாட்டலால் வீடுறக் கூறு பரனே குருவாம் இயம்பிலே.
36, |
18
|