மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும் பறந்தல மந்து படுதுயர் தீர்ப்பான் சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.
|
1
|
செல்லு மளவும் செலுத்துமின் சிந்தையை வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை இல்லை எனினும் பெரிதுளன் எம்மிறை நல்ல அரன்நெறி நாடுமின் நீரே.
|
2
|
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
|
3
|
போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை. நாற்றிசைக் கும்நடு வாய்நின்ற நம்பனைக் காற்றிசைக் குங்கம ழாக்கையைக் கைக்கொண்டு கூற்றுதைத் தான்றனைக் கூறிநின் றுய்மினே.
|
4
|
இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில் புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின் எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்று அக்காலம் உன்ன அருள்பெற லாமே.
|
5
|
Go to top |
போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள் ஆகின்ற போதும் அரன்அறி வானுளன் சாகின்ற போதும் தலைவனை நாடுமின் ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே.
|
6
|
பறக்கின்ற ஒன்று பயன்உற வேண்டின் இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப் பிறப்பொன் றிலாமையும் பேருல காமே.
|
7
|
கூடியும் நின்றும் தொழுதெம் இறைவனைப் பாடி உளேநின்று பாதம் பணிமின்கள் ஆடி உளேநின் றறிவுசெய் வார்கட்கு நீடிய ஈற்றுப் பசுவது வாமே.
|
8
|
விடுகின்ற சிவனார் மேலெழும் போது நடுநின்று நாடுமின் நாதன்றன் பாதம் கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன் இடுகின்றான் நும்மை இமையவ ரோடே.
|
9
|
இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை அன்புசெய் வீர்தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்துப் பண்புறு வீர் பிறவித்தொழி லேநின்று துன்புறு பாசத் துழைத்தொழிந் தீரே.
|
10
|
Go to top |
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோர்க்கே.
|
11
|
சார்ந்தவர்க் கின்பங் கொடுக்கும் தழல்வண்ணன் பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடும் கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடும் சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.
|
12
|
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனைக் காலமும் ஏத்துமின் ஈசனை நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதி யதுவிரும் பாரே.
|
13
|
நியமத்த னாகிய நின்மலன் வைத்த உகமெத் தனையென் றொருவருந் தேறார் பவமத்தி லேநின்று பாய்கின்ற தல்லால் சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.
|
14
|
இங்கித்தை வாழ்வும் எனைத்தோ ரகிதமும் துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை விஞ்சத் துறையும் விகிர்தா எனநினை நஞ்சற் றவர்க்கன்றி நாடாஒண் ணாதே.
|
15
|
Go to top |
பஞ்சமும் ஆம்புவி சற்குரு பால்மன்னி வஞ்சக ரானவர் வைகில் அவர்தம்மை அஞ்சுவன் நாதன் அருநர கத்திடும் செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.
|
16
|
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை அவனை வழிபட்டங் காமாறு காட்டும் குருவை வழிபடிற் கூடலும் ஆமே.
|
17
|
நரருஞ் சுரரும் பசுபாசம் நண்ணிக் கருமங்க ளாலே கழிதலின் கண்டு குருஎன்பவன் ஞானி கோதிலன் ஆனால் பரம் என்றல் அன்றிப் பகர்வொன்று மின்றே.
|
18
|
ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற மேற்கொண் டவர்வினை போயற நாடொறும் நீர்க்கின்ற செஞ்சடை நீள்தன் உருவத்து மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.
39, |
19
|