ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம் கய்கண்ட பன்னான்கில் கண்டங் கனாஎன்பர் பொய்கண் டிலாதபுரு டன்னித யஞ்சுழுனை மெய்கண் டவனுந்தி ஆகும் துரியமே.
|
1
|
முப்பதோ டாறின் முதல்நனா ஐந்தாகும் செப்பதில் நான்காய்த் திகழ்ந்திரண் டொன்றாகி அப்பதி யாகும் நியதி முதலாகச் செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் வீரே.
|
2
|
இந்தியம் ஈரைந்தீ ரைந்துதன் மாத்திரை மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும் பந்தவச் சாக்கிரப் பாலது வாகுமே.
|
3
|
பாரது பொன்மைப் பசுமை யுடையது நீரது வெண்மை செம்மை நெருப்பது காரது மாருதம் கறுப்பை யுடையது வானகம் தூமம் மறைந்துநின் றார்களே.
|
4
|
பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐயைந்தும் ஏதம் படச்செய் திருந்த புறநிலை ஓது மலம்குண மாகும்ஆ தாரமோ(டு) ஆதி யவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.
|
5
|
Go to top |
இடவகை சொல்லில் இருபத்தஞ் சானை படுபர சேனைகள் பாய்பரி ஐந்தும் உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர் அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.
|
6
|
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி உடம்பிடை நின்ற உயிரை அறியார் உடம்போ டுயிரிடை நட்பறி யாதார் மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.
|
7
|
இருக்கின்ற வாறொன் றறிகிலர் ஏழைகள் முருக்கும் அசபையை மாற்றி முகந்து கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந் துருக்கொண்டு தொக்க உடல்அழி யாதே.
|
8
|
ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாறை அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து அளிக்குங் கலைகளி னால்அறு பத்துள் ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.
|
9
|
மண்ணினில் ஒன்றும் மலர்நீர் மருங்காரும் பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம் மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓரொன்றாய் உன்னின் முடிந்த தொருபூ தசயமே.
|
10
|
Go to top |
முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர் வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர் கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்முன் நாள்இல்லை கன்னியைக் கன்னியே காதலித் தானே.
|
11
|
கண்டகன வைந்தும் கலந்தன தாம்ஐந்தும் உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின் பண்டைய னாகிப் பரந்த வச்சாக்கிரத் தண்டமுந் தானாய் அமர்ந்துநின் றானே.
|
12
|
நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்(து) ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன் மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.
|
13
|
தானம் இழந்து தனிபுக் கிதயத்து மானம் அழிந்து மதிகெட்டு மால்ஆகி ஆன விரிவறி யாஅவ் வியத்தத்தின் மேனி அழிந்து சுழுத்திய தாமே.
|
14
|
சுழுனையைச் சேர்ந்துள மூன்றுளதன் காட்சி கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து விழும்அப் பொருளுடன் மேவிநின் றானே.
|
15
|
Go to top |
தானத் தெழுந்து தருந்துரி யத்தினின் வானத் தெழுந்துபோய் வையம் பிறகிட்டுக் கானத் தெழுந்த கருத்தின் தலையிலே ஊனத்த வித்தைவிட் டூமன்நின் றானே.
|
16
|
ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின் ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும் ஓம்மயம் உற்றது உள்ளொளி பெற்றது நாம்மயம் அற்றது நாம்அறி யோமே.
|
17
|
துரியம் இறுப்பது சாக்கிரத் துள்ள நரிகள் பதினாலும் நஞ்சுண்டு செத்தன பரிய புரவியும் பாறிப் பறந்தது துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.
|
18
|
மாறா மலம்ஐந்தான் மன்னும் அவத்தையின் வேறாய மாயா தனுகர ணாதிக்கிங்(கு) ஈறாகா தேஎவ் வுயிரும் பிறந்திறந்(து) ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.
|
19
|
உண்ணுந்தன் னூடாடா(து) ஊட்டிடும் மாயையும் அண்ணல் அருள்பெறல் முத்திய தாவது நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்(து) எண்ணுறு ஞானத்தின் ஏர்முத்தி யெய்துமே.
|
20
|
Go to top |
அதிமூட நித்திரை ஆணவம் நந்த அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி இதமான கேவலம் இத்திறம் சென்று பரமாக ஐயவத் தைப்படு வானே.
|
21
|
ஆசான்முன் னேதுயில் மாண வகரைத் தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல் நேசாய ஈசனும் நீடா ணவத்தரை ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.
|
22
|
மஞ்சொடு மந்தா கினிகுடம் ஆம்`என விஞ்சறி வில்லோன் விளம்பும் மிகுமதி எஞ்சலில் ஒன்றேனும் ஆ(று) என இவ்வுடல் அஞ்சுணும் மன்னன் அன்றேபோம் அறவே.
|
23
|
படியுடை மன்னவன் பாய்பரி ஏறி வடிவுடை மாநகர் தான்வரும் போது அடியுடை ஐவரும் அங்குறை வோரும் துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.
|
24
|
நேரா மலத்தினை நீடைந் தவத்தையின் நேரான வாறுன்னி நீடு நனவினில் நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.
4, |
25
|
Go to top |