தன்னை யறிசுத்தன் தற்கே வலன்றானும் பின்ன முறநின்ற பேத சகலனும் மன்னிய சத்தசத் துச்சத சத்துடன் துன்னுவர் தத்தம் தொழிலள வாகவே.
|
1
|
தானே தனக்குப் பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும் தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும் தானே தனக்குத் தலைவனும் ஆமே.
|
2
|
ஆம்உயிர் கேவல மாம்மாயை யின்னிடைந்(து) ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்றுக் காமிய மாயேய மும்கல வாநிற்பத் தாமுறு பாசம் சகலத்த தாமே.
|
3
|
சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர் புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர் நிகரில் மலரோன் மால் நீடுபஃ றேவர்கள் இகழும் நரர்கீடம் அந்தமு மாமே.
|
4
|
தாவிய மாயையில் தங்கும் பிரளயர் மேவிய மற்ற துடம்பாய்மிக் குள்ளனர் ஓவலில் கன்மத்தர் ஒன்றிய சீகண்டர் ஆவயின் நூற்றெட் டுருத்திரர் என்பவே.
|
5
|
Go to top |
ஆகின்ற கேவலத்(து) ஆணவத்(து) ஆனவர் ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர் ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர் ஆகின்ற ஈசர் அநேகரு மாமே.
|
6
|
ஆம்அவ ரில்சிவன் ஆரருள் பெற்றுளோர் போம்மலந் தன்னால் புகல்விந்து நாதம்விட்(டு) ஓம்மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலர் தோம்அரு சுத்த அவத்தை தொழிலே.
|
7
|
ஓரிருள் மூவகை நால்வகை யும்முள தேரில் இவை கே வலம் மாயை சேர் இச்சை சார்இயல் ஆயவை தாமே தணப்(பு) அவை வாரிவைத்(து) ஈசன் மலம்அறுத் தானே.
|
8
|
பொய்யான போதாந்தம் ஆறாறும்விட்டகன்(று) எய்யாமை நீங்கவே எய்யவன் தானாகி மெய்யாஞ் சராசர மாய்வெளி தன்னுட்புக்(கு) எய்தாமல் எய்தும் சுத் தாவத்தை என்பதே.
|
9
|
அனாதி பசுவியாத் தியாகும் இவனை அனாதிஇல் வந்த மலம்ஐந்தால் ஆட்டி அனாதியில் கேவலன் அச்சக லத்திட்(டு) அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆக்குமே.
|
10
|
Go to top |
அந்தரஞ் சுத்தவத் தைகே வலத்தாறு தந்தோர்தஞ் சுத்தகேவ லத்தற்ற தற்பரத் தின்பால் துரியத் திடையே அறிவுறத் தன்பால் தனையறி தத்துவந் தானே.
|
11
|
ஐயைந் தொடுங்குமவ் வான்மாவில் ஆன்மாவும் மெய்கண்டு சுத்தஅவ் வித்தையில் வீடாகும் துய்யஅவ் வித்தை முதல் மூன்றுந் தொல்சத்தி ஐயை சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.
|
12
|
ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோ டடங்கிடும் மெய்கண்ட மேல்மூன்றும் மேவும்மெய் யோகத்தில் கைகண்ட சத்தி சிவபரத் தேகாண எய்யும் படிஅடங் கும்நாலேழ் எய்தியே.
|
13
|
ஆணவத் தார்ஒன் றறியாத கேவலர் பேணிய மாயை பிரளயா கலர்க்காகும் காணும் உருவினர் காணாமை காண்பவே பூணும் சகலம் முப் பாசமும் புக்கோர்க்கே.
|
14
|
ஆணவமா கும்விஞ் ஞானகலருக்குப் பேணிய கன்மம் பிரளயா கலருக்கே ஆணவம் கன்மமும் மாயையும் மூன்றுமே காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே.
|
15
|
Go to top |
கேவலந் தன்னில் கிளந்தவிஞ் ஞாகலர் கேவலந் தன்னில் கிளர்விந்து சத்தியால் ஆவயின் கேவலத் தச்சக லத்தையும் மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே.
|
16
|
மாயையின் மன்னும் பிரளயா கலர்வந்து மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவம் மாயச் சகலத்துக் காமியம் மாமாயை ஏயமன் னூற்றெட் டுருத்திரர் என்பவே.
|
17
|
மும்மலம் ஐம்மலம் கூடி மயங்குவோர் அம்மெய்ச் சகலத்தர் தேவர் அசுரர் நரர் மெய்ம்மையில் வேதா விரிமால் கீ டாந்தத்தின் அம்முறை யோனிபுக் கார்க்கும் சகலரே.
|
18
|
சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச் சத்தசத் தோடத் தனைத்தலைப் பாசமாம் மத்த இருள்சிவ னானகதி ராலே தொத்தற விட்டிடச் சுத்தரா வார்களே.
|
19
|
தற்கே வலம்முத்தி தானே தனிமையாம் பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம் சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம் தற்பாற் புரிவது தற்சுத்த மாமே.
|
20
|
Go to top |
அறிவின் றமூர்த்தன் அராகாதி சேரான் குறியொன் றிலான் நித்தன் கூடான் கலாதி செறியும் செயல்இலான் தினக்கற்றல் இல்லோன் கிறியன் மலவியாபி கேவலத் தானே.
|
21
|
விந்துவும் மாயையும் மேவும் கிரியையும் சந்ததம் ஞான பரையும் தனுச்சத்தி விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர் வந்த சகலர்சுத் தரான்மாக்கள் வையத்தே.
|
22
|
கேவல மாதியில் பேதம் கிளக் குறின் கேவலம் மூன்றும் கிளறும் சகலத்துள் ஆவயின் மூன்றும் அதிசுத்தம் மூன்றுமா ஓவலில்லாஒன்பான் உற்றுணர்வோர்கட்கே.
|
23
|
கேவலத் திற்கே வலம்அதீ தாதீதம் கேவலத் திற்சக லங்கள் வயந்தவம் கேவலத் திற்சுத்தங் கேடில்விஞ் ஞாகலர் ஆவயின் நாதன் அருள்மூர்த்தி தானே.
|
24
|
சகலத்திற் கேவலம் சாக்கிரா தீதம் சகல சகலமே சாக்கிரா தீதம் சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே.
|
25
|
Go to top |
சுத்தத்திற் சுத்தமே தொல்சிவம் ஆகுதல் சுத்தத்திற் கேவலம் தொல் உப சாந்தமாம் சுத்த சகலம் துரிய விலாசமாம் சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே.
|
26
|
சாக்கிர சாக்கிரந் தன்னிற் கனவொடு சாக்கிரந் தன்னில் சுழுத்தி துரியமே சாக்கிர தீதந் தனில்சகா னந்தமே ஆக்கும் மறையாதி ஐம்மல பாசமே.
|
27
|
சாக்கிரா தீதத்தில் தான்அறும் ஆணவம் சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது ஆக்கும் பரோபாதி ஆம்உப சாந்தத்தை நோக்கு மலம்குணம் நோக்குத லாமே.
|
28
|
பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும் சுத்த அதீதமும் தோன்றாமல் தான்உண்ணும் `அத்தன் அருள்` என்(று) அருளால் அறிந்தபின் சித்தமும் இல்லை செயல் இல்லை தானே.
|
29
|
எய்திய பெத்தமும் முத்தியும் என்பன எய்தும் அரன்அரு ளே விளையாட்டோ(டு) `எய்தி டுயிர்சுத்தத் திடும்நெறி` என்னவே எய்தும் உயிர்இறை பால் அறி வாமே.
|
30
|
Go to top |
ஐம்மலத் தாரும் அதித்த சகலத்தர் ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தர் ஐம்மலத் தார்சுவர்க் கம்நர காள்பவர் ஐம்மலத் தார்அர னார்க்கறி வோரே
|
31
|
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை அரிய துரிய மதில் உண்ணும் ஆசையாம் உரிய சுழுத்தி முதல்எட்டும் சூக்கத்(து) அரிய கனா தூலம் அந்நன வாமே.
|
32
|
ஆணவம் ஆகும் அதீதம் மேல் மாயையாம் பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம் பேணுங் கனவுமா யேயம் திரோதாயி காணும் நனவில் மலக்கலப் பாகுமே.
|
33
|
அரன்முத லாக அறிவோர் அதீதத்தர் அரன்முத லாமாயை தங்கிச் சுழுத்திக் கருமம் உணர்ந்து மாயேயங்கைக் கொண்டோர் அருளும் மறைவார் சகலத்துற் றாரே.
|
34
|
உருவுற்றுப் போகமே போக்கியத் துற்று மருவுற்றுப் பூத மனாதியால் மன்னி வரும்அச் செயல்பற்றி சத்தாதி வைகிக் கருவுற் றிடுஞ்சீவன் காணும் சகலத்தே.
|
35
|
Go to top |
இருவினை ஒத்திட இன்னருட் சக்தி மருவிட ஞானத்தில் ஆதரம் மன்னிக் குருவினைக் கொண்டருட் சத்திமுன் கூட்டிப் பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.
|
36
|
ஆறாறும் ஆ(று) அதின் ஐயைந் தவத்தையோ டீறாம் அதீதத் துரியத்(து) இவன்எய்தப் பேறாகும் ஐவரும் போம்பிர காசத்தின் ஈறார் பரசிவம் ஆதேய மாமே.
|
37
|
தன்னை அறியா துடலைமுன் `தான்` என்றான் தன்னைமுன் கண்டான் துரியந் தனைக்கண்டான் உண்ணும் துரியமுன் ஈசனோ டொன்றாக்கால் பின்னையும் வந்து பிறந்திடுந் தானே.
|
38
|
சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படின் ஆக்கிய வந்த வயிந்தவ மால்நந்த நோக்கும் பிறப்பறும் நோன்முத்தி சித்தியாம் வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.
|
39
|
அப்பும் அனலும் அகலத்து ளேவரும் அப்பும் அனலும் அகலத்து ளேவாரா அப்பும் அனலும் அகலத்துள் ஏதென்னில் அப்பும் அனலும் கலந்த(து) அவ் ஆறே.
|
40
|
Go to top |
அறுநான் கசுத்தம் அதின் சுத்தா சுத்தம் உறும்ஏழும் மாயை உடன்ஐந்தே சுத்தம் பெறுமா றிவைமூன்று காண்டத்தால் பேதித்(து) உறுமால்மாமாயையின் ஆன்மாவினோடே.
|
41
|
மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏரும் உயிர்கே வலசகலத் தெய்திப்பின் ஆய்தரு சுத்தமும் தான்வந் தடையுமே.
8, |
42
|