காலும் தலையும் அறியார் கலதிகள் கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம் பால்ஒன்று ஞானமே பண்பார் தலைஉயிர் கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.
|
1
|
தலைஅடி யாவ தறியார்கா யத்தில் தலைஅடி உச்சி உள்ளது மூலம் தலைஅடி யான அறிவை அறிந்தோர் தலைஅடி யாகவே தாம்இருந் தாரே.
|
2
|
நின்றான் நிலமுழு(து) அண்டமும் மேல்உற வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப் பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி தன்றா ளிணைஎன் தலைமிசை யானதே.
|
3
|
சிந்தையி னுள்ளுள(து) எந்தை திருவடி சிந்தையும் எந்தை திருவடிக் கீழது எந்தையும் என்னை அறியகி லா னாயின் எந்தையை யானும் அறியகி லேனே.
|
4
|
பன்னாத பார் ஒளிக் கப்புறத்தப்பால் என்னா யகனார் இசைந்தங் கிரிந்திடம் உன்னா ஒளியும் உரை செயா மந்திரஞ் சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.
|
5
|
Go to top |
பதியது தோற்றும் பதமது வைம்மின் மதியது செய்து மலர்ப்பதம் ஓதும் நதிபொதி யுஞ்சடை நாரியோர் பாகன் கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே.
|
6
|
தரித்துநின் றான் அடி தன்னுடை நெஞ்சில் தரித்துநின் றான்அம ராபதி நாதன் கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.
|
7
|
ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள கன்றாத தாளும் இரண்டுள காயத்துள் நன்றாகக் காய்ச்சிப் பதம்செய வல்லார்கட்(கு) இன்றேசென் றீசனை எய்தலும் ஆமே.
|
8
|
கால்கொண்டென் சென்னியிற் கட்டறக் கட்டற மால்கொண்ட நெஞ்சின் மயக்கில் துயக்கறப் பால்கொண்ட என்னைப் பரன்கொள நாடினான் மேல்கொண்டென் செம்மை விளம்பஒண்ணாதே.
|
9
|
பெற்ற புதல்வர்பால் பேணிய நாற்றமும் குற்றமும் கண்டும் குணங்குறை செய்ப ஓர் பற்றைஅவ் வீசன் உயிரது பான்மைக்குச் செற்ற மிலாச் செய்கைச் செய்தின செய்யுமே.
18, |
10
|
Go to top |