தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர ஏன்ற அசிபதம் இம்மூன்றோ டெய்தினோன் ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பற ஏன்றன மாறச் சிவாமாய் இருக்குமே.
|
1
|
போதந் தனைஉன்னி பூதாதி பேதமும் ஓதும் கருவிதொண் ணூறுடன் ஓராறு பேதமும் நாதாந்தம் பெற்றியிற் கைவிட்டு வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.
|
2
|
தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும் நிற்ப(து) அசி அத்துள் நேரிழை யாள் பதம் சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன் கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.
|
3
|
அணுவும் பரமும் அசிபதத் தேய்த்து கணுவொன் றிலாத சிவமும் கலந்தால் இணையறு பால் தேன் அமுதென இன்பத் துணையது வாய்உரை யற்றிடத் தோன்றுமே.
|
4
|
தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம் நம்பிய சீவன் பரன் சிவ னாய்நிற்கும் அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.
|
5
|
Go to top |
ஐம்ப தறியா தவரும் அவர்சிலர்
உம்பனை நாடி உரைமுப் பதத்திடைச்செம்பர மாகிய வாசி செலுத்திடத் தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே.
|
6
|
நந்தி யறிவும் நடுவில் அதீதமாம் இந்தியம்சத் தாதி விடசிவ னாகும் நால் நந்திய மூன்றிரண் டொன்று நலவைந்தும் நந்தில் நனவாதி மூட்டும் அனாதியே.
|
7
|
பரதுரி யத்து நனவும் படிஉண்ட விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து) உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால் அரிய துரியம் அசிபதம் ஆமே.
20, |
8
|